மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கருத்தரங்கக் கூடமாகப் புது சட்டசபை மாற்றம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_83049920131019234453.jpg

கருத்தரங்க க் கூடமாக ப் புது சட்டசபை மாற்றம்: சன.17இல் நவீன மருத்துவமனை திறப்பு?



சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் அன்று, இந்த கட்டடத்தில் அதிநவீன மருத்துவமனையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. புது தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கட்டடம், அதிநவீன கருத்தரங்க கூடமாக மாற்றப்பட்டுள்ளது. சட்டமேலவை கட்டடம் தற்போது, மருத்துவ ஆய்வரங்கமாக மாற்றப்பட்டு உள்ளது.
புது தலைமைச் செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் இந்த பணி, ஜனவரி மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர், கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஏழு உதவி செயற்பொறியாளர் கொண்ட தனிக்குழு, அங்கு முகாமிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.



வார்டுகள்:

ஒவ்வொரு தளத்துக்கும், ஒரு உதவி செயற்பொறியாளர் வீதம், நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியதாக கட்டப்பட்ட அறைகள், இரண்டு வார்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு தளத்தில் இருந்தும், நோயாளிகளை படுக்கையில் அழைத்துச் செல்ல, சாய்தளம் அமைக்கும் பணி, இரண்டு பக்கங்களிலும், தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, மூன்று தளங்கள் வரை அமைக்கும் பணிகள் முடிந்து, நான்காம் தளததில் இருந்து, ஐந்தாம் தளத்துக்கு சாய்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, மேலவைக்காக கட்டப்பட்ட கட்டடம், எந்த மாற்றமும் செய்யப்படாமல், சிறப்பு ஆய்வரங்க கட்டடமாகவும், சட்டசபை கட்டடம், கருத்தரங்கு கூட அரங்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையில், பேராசிரியர், துறை தலைவர்களுக்கு, 90 கழிப்பறைகள் வீதம், மொத்தமாக, 560 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து வார்டுகளிலும், முழுவதுமாக, 'ஏசி' அமைக்கும் பணி, முடியும் தறுவாயில் உள்ளது. அதேபோல், தரைத்தளம் மற்றும் முதல் தளம், புறநோயாளிகள் பிரிவாகவும், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் நிர்வாகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளாகவும், நான்காம் தளம், அவசர சிகிச்சை பிரிவாகவும், ஐந்து, ஆறாவது தளங்கள் உள்நோயாளிகள் சிகிச்சை வார்டுகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

500 பேர்:

நவம்பர் மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களோடு, தினமும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர், கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் இறுதிக்குள், கட்டுமானப் பணிகளை முடித்து, அதன் பிறகு, மருத்துவமனைக்கான உபகரணங்கள் அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான ஜனவரி, 17ல், பல்நோக்கு மருத்துவமனை செயல்படத் துவங்கும் என, தெரிகிறது.

- நமது செய்தியாளர், தினமலர் -

ஞாயிறு, 7 ஜூலை, 2013

மாற்றத்திற்கு ஆயத்தமாக வேண்டும்!

மாற்றத்திற்கு ஆயத்தமாக வேண்டும்!

நீரை அதிகம் உறிஞ்சும் நெல் சாகுபடியைத் தவிர்த்து, மாற்று விவசாயம் பற்றி கூறும் வேளாண் வல்லுனர், கலைவாணன்: கடந்த ஆண்டைபோலவே, குறுவை சாகுபடி சாத்தியப்படாத நிலையில், அதற்கு ஏற்ப, மாற்று விவசாயம் பற்றிய தெளிவு, விவசாயிகளிடம் இருப்பது அவசியம். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின், பருவ மழை சரியாக இல்லாததால், டெல்டா பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் ஆற்றில், தண்ணீர் இல்லை. இதனால், வரும் செப்டம்பர் மாதம் வரை, ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல்லை பயிரிடுவதற்கு மாற்றாக, குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும், எள், உளுந்து, கடலை மற்றும் காய்கறிகளை பயிரிடுங்கள் என, வேளாண் துறை எவ்வளவோ சொல்லியும், டெல்டா மாவட்டங்களில், பல ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரை உறிஞ்சி,
நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இது தொடர்ந்தால், கடலில் உள்ள உப்பு நீரும் சேர்ந்து,நிலமும், விவசாயமும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இப்போது பொழியும் குறைந்த அளவு மழையை பயன்படுத்தி, மண் வகைகளை பொறுத்து, எள், உளுந்தை பயிரிடலாம். கம்பு மற்றும் சிறுதானிய
ங்களை பயிரிட்டால், அதன் அறுவடையின் போது பருவ மழை துவங்கி, அதிக பாதிப்பு ஏற்பட்டு, தொழிலில் நஷ்டம் ஏற்படும். அதனால், எள், உளுந்து அறுவடைக்கு பிறகு, மார்கழியில் காய்கறி, சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை பயிர் செய்யலாம். இப்படி செய்வதால், குறுவையில் ஏற்படும் இழப்பை, சரி செய்யலாம். கடந்த காலத்தை போன்று, அரசுகளை நம்பி, நஷ்டத்தை அனுபவிப்பதில், அர்த்தமில்லை. எனவே, நீரற்ற வறட்சியான காலங்களில், நீரை அதிகம் உறிஞ்சும், நெல் போன்ற குறுவை சாகுபடியில் ஈடுபடாமல், மாற்று பயிர்களை பயிரிடும் விழிப்புணர்வை, விவசாயிகள் வளர்த்துக் கொள்வது, எதிர் காலத்தில் நன்மை பயக்கும்.

மிதியூர்தி ஓட்டுநர்களின் உணவகம்

சவாரி கிடைக்காத ஓய்வு நேரங்களில், ஓட்டல் தொழில் செய்து முன்னேறும், ஆட்டோ சங்கத்தின் தலைவர் சீனிவாசன்: நான், புதுச்சேரியை சேர்ந்தவன். எங்கள் ஆட்டோ சங்கத்தில், 25 ஓட்டுனர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். காலையில், முதல் ஆளாக யார் வருகின்றனரோ, அந்த வரிசைப்படியே சவாரிக்கு செல்ல வேண்டும். ஒரு சில நாட்களில், ஐந்து முதல் ஆறு சவாரிகள் மட்டுமே வரும் போது, மற்ற, 20 ஓட்டுனர்களும், வேலை இன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
தற்போது, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், ஆட்டோ தொழிலில், பெரிய லாபம் பார்க்க முடியாத நிலையும் உள்ளது. எந்த சவாரியும் கிடைக்காததால், வரவு ஏதுமின்றி, எங்களின் காசை போட்டே, உணவு உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லாமல் செலவு அதிகரித்ததால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தோம். எங்கள் சங்கத்தின், 25 ஓட்டுனர்களும் ஒன்றிணைந்து, எங்களுக்கும், மற்ற பொது மக்களுக்கும் பயனுள்ள விதத்தில், குறைந்த விலை சிற்றுண்டி உணவகத்தை, காலையில் மட்டும் நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, புதுவையின் பிரதான சாலையான, காந்தி வீதி, ஈஸ்வரன் கோவில் அருகே, சாலையோர சிற்றுண்டி உணவகம் ஆரம்பித்தோம். ஓட்டல் வேலைக்கு ஆள் வைக்காமல், எல்லா வேலைகளையும், நாங்களே செய்தோம். எங்கள் உணவகத்தில், காலை 10:00 மணி வரை, சிற்றுண்டி கிடைக்கும். பின், ஜூஸ் மட்டுமே விற்போம். குறைந்த விலை என்பதால், விற்பனையும் அதிகரித்து, முதலீட்டுக்காக வாங்கிய கடனையும், அடைத்து விட்டோம். காலை டிபனை, இங்கேயே முடித்து விடுவதால், உணவிற்கு என, தனியாக செலவு செய்ய தேவையில்லை. உணவகத்தில் கிடைக்கும் லாபத்தை, சரிசமமாக பிரித்து கொள்வோம். இதனால், ஆட்டோ வருமானத்தை தாண்டியும், அதிக வருமானம் கிடைக்கிறது. வாய்ப்பு தானாக வந்து, நம் கதவை தட்டாது என்பதால், நாங்களே புதிய வாய்ப்புகளை உருவாக்கினோம்.

சனி, 22 ஜூன், 2013

தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாறுகிறது

தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாறுகிறது
 தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
பள்ளி பாடப் புத்தகங்கள், "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிர்ணயித்த விலையிலும் வழங்கப்படுகின்றன. சைக்கிள், லேப் டாப், சீருடை, செருப்பு, புத்தகப்பை உள்ளிட்ட இலவசங்கள், சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான அனைத்து இலவசங்களும், இனி, "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்காக கழகத்தின் பெயர் மாற்றப்படுகிறது. "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, பெயர் மாற்றப்பட உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைத்து, இலவச திட்டங்கள் அனைத்தும், இத்துறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

நாளை முதல் கடவுச்சீட்டில் மாற்றம்


http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_685587.jpg

நாளை முதல் கடவுச்சீட்டில்  மாற்றம்

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள், நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல், வலது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால், தற்போதைய புதிய நடைமுறைப்படி, இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில், "லேமினேட்' செய்யப்படும். அதேபோல், வலது பக்க உள் அட்டையில், காணப்படும் அனைத்து குறிப்புகளும், 35வது பக்கத்தில், லேமினேட் செய்யப்படும்.

இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியதாவது: பழைய முறையில், பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால், அதன், இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இம்மாற்றங்கள், நாளை முதல், அமலுக்கு வருவதால், புதிய மாற்றங்கள் அடங்கிய, 50 ஆயிரம் பாஸ்போர்ட்கள், நாசிக்கிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

- நமது  செய்தியாளர், தினமலர் -

வெள்ளி, 29 மார்ச், 2013

பணியாளர் தேர்வில மாற்றம் - திரும்பப் பெ ற்றது மத்திய தேர்வாணையம்







பணியாளர் தேர்வில மாற்றம் - திரும்பப் 
பெற்றது மத்திய தேர்வாணையம்


புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.
சிவில் சர்வீசஸ் என்றழைக்கப்படும், யு.பி.எஸ்.சி., தேர்வுகள், முதல் நிலை (பிரிலிமினரி), முதன்மை தேர்வு (மெயின்), நேர்காணல் (இன்டர்வியூ) போன்ற முறைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வில், எந்த மாற்றமும் செய்யப்படாமல், முதன்மை தேர்வில் மட்டும், சில மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., மேற் கொள்ள விரும்பியது.

நிபந்தனை: இதற்கான அறிவிப்பு, இம்மாதம், 5ம் தேதி வெளியானது. அதில், ஆங்கிலம், இந்தி மொழிகள் தவிர்த்து, வட்டார மொழியில், ஒரு பகுதி தேர்வை எழுத விரும்பும் தேர்வாளர், தேர்ந்தெடுக்கும் மொழியை, குறைந்தபட்சம், 25 பேராவது, தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மேலும், வட்டார மொழி இலக்கிய தாளை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர், அதை தன் பட்டப்படிப்பில் எடுத்து படித்திருக்க வேண்டும். அனைத்து தேர்வாளர்களும், ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் என்பன, போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தது. அனைத்து தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பார்லிமென்டில், எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

அறிவிப்பு: அதையடுத்து, பணியாளர் நலத்துறை இணையமைச்சர், வி.நாராயணசாமி, பார்லிமென்டில் வெளியிட்ட அறிவிப் பில், ""யு.பி.எஸ்.சி., தேர்வில், எவ்வித மாற்றமும் செய்யப்படாது; முந்தைய நிலையே தொடரும்' என, தெரிவித்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பை, யு.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், மார்ச், 5ம் தேதி வெளியான மாற்றங்கள் குறித்த உத்தரவு, வாபஸ் பெறப்பட்டதாகவும், முந்தைய நிலையே தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு, மே, 26ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பத்திற்கு, கடைசி தேதி, ஏப்., 4ம் தேதி. முதன்மை தேர்வு, இவ்வாண்டு, ஆகஸ்ட் மற்றும்
செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 22 மார்ச், 2013

திருமலை - கூண்டுக்குள் அடையத் தேவையில்லை

எத்தனை ஆண்டுகளாகத் திருப்பதிக் கோயிலில் ஊழல் நடக்கிறது என்று தெரியாது. ஆனால், எனக்குத் தெரிந்து 40 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர் ஒருவர், அங்கு இறையன்பர்கள் காணிக்கையாக அளிக்கும்  தரமான தங்க நகைகளைக்கூடத் தரங்குறைந்தது என்ற பெயரில் குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதுபோல் காட்டி விற்பதாகக் கூறினார். எவ்வளவு நகை வேண்டுமானாலும் மிகக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறினார்.  நான் சில முறை திருப்பதி சென்றுள்ளேன். எனக்கு நேர்ந்த பட்டறிவுதான் பிறருக்கும் நேர்ந்துள்ளது. என்ன வென்றால் கூட்டமே இல்லாத பொழுதும் கூட்டம் இருப்பதுபோல் செயற்கையாகக்காட்டுவதற்காக வேண்டுமென்றே மக்களை அடைத்து வைக்கின்றார்கள். சில திங்களுக்கு முன்பு சென்றிருந்தபொழுது மிக மிகக் குறைவான கூட்டம் இருந்தது.  அதனால்  தொடக்கத்தில் உள்ள ஆய்வு முகப்பில் ஒன்றுமட்டுமே திறந்திருந்தது. ஆனால், வேண்டுமென்றே மணிக்கணக்கில் ஒவ்வொரு கூண்டாக அடைத்து வைத்தனர்.  காலையில் 4  மணிக்கே வந்திருந்தும் அடைத்து வைத்துப் பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் ஒரு கூண்டிலிருந்து மற்றொரு கூண்டிற்கு அனுப்பியதாக க் கட்டணமில்லாப் பார்வைக்கு வந்த  ஒருவர்  கூறினார். என்ற போதும், மூலவர் இடம் வந்தபொழுது  வேண்டுமென்றே திமுதிமு என்று திரளாகப்போகுமாறு செய்து யாரையும் வணங்கவிடாமல் வழக்கம் போல் விரட்டி அடித்தனர்.  கூட்டம் இல்லை என்பதால் புகழ் குறைந்து கூட்டம் மேலும் குறையும்  என்பதால் அவ்வாறு செய்கின்றனராம்.  அந்த இடத்தில் வரிசையாக உள்ளே செல்ல விட்டால் மணிக்கணக்கில் அல்லது நாள்கணக்கில் காத்திருந்தவர்கள் அமைதியாக இறை வழிபாடுசெய்ய வாய்ப்பிருக்கும். ஆனால், செய்வதில்லை. கழிவறைகளில் தண்ணீர் வசதியே இல்லை. இதையெல்லாம் கேட்டதற்கு, வருவோர்  எண்ணிக்கையைப்போலியாக உயர்த்திக் காட்டினால்தான் இறையன்பர்களுகு்குத் தரும் பால், உணவு முதலானவற்றில் கொள்ளை அடிக்க முடியும் எனத் திட்டமிடுபவர்கள்  வசதி செய்து தருவதில் கருத்து செலுத்துவதில்லை என்று அங்குள்ள ஒருவர் கூறினார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே, திருப்பதி அன்பர்கள் சில நாளேனும்  திருப்பதிக்குச் செல்வதைப் புறக்கணித்தால்தான் உண்மை உணர்ந்து  தொடர்புடையவர்கள் திருந்துவர்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




திருமலையில் இலவசப்பார்வையில்  மாற்றம்: கூண்டுக்குள் இனி அடைய த் தேவையில்லை

நகரி: திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள் நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வைகுண்டம்: திருமலையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன. இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மொட்டை: என்ன தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கைரேகை: திருமலையில், வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள் வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம் வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல், கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.


வி.ஐ.பி., தரிசனம்: வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் சிலர், தரிசன நேரத்தின் போது, அவர்கள் வராமல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வருகின்றனர். இனி வி.ஐ.பி.,க்களுடன் இணைந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல், வி.ஐ.பி.,க்களும், வி.ஐ.பி., சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களும், தவறாமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.



வியாழன், 14 மார்ச், 2013

இந்தி அரசு வழியில் தமிழக அரசு






http://img.dinamalar.com/data/gallery/gallerye_000041949_666741.jpg

 குரூப்-1 தேர்வு முதல், கடைநிலை தேர்வான, குரூப்-4 வரையிலான, அனைத்து தேர்வுகளுக்கும், புதிய பாடத் திட்டங்களை, டி.என்.பி.எஸ்.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில், அமலில் உள்ள பாடத்திட்டங்களின் தரத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) பாடத் திட்டங்களின் தரமும், பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இனி, தேர்வாணைய தேர்வுகள், தேர்வர்களுக்கு, சவாலாக இருக்கும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
12 ஆண்டுகளுக்குப் பின்...:

போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றி அமைக்கப்படும். 12 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்கள், மாற்றி, புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.கடந்த ஒரு ஆண்டில், தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த நட்ராஜ், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில், ஆறு மாதங்களாகவே, முனைப்பாக ஈடுபட்டு வந்ததாக, துறை வட்டாரங்கள் பெருமையுடன் தெரிவித்தன. நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள போட்டித்தேர்வு பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இல்லாதபடி, புதிய பாடத்திட்டங்கள், தரமாக உருவாக்கப்பட்டு உள்ளன.அரசுப் பணிகளில் சேர்பவர்கள், திறமைசாலிகளாகவும், புத்தி கூர்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, குரூப்-1, குரூப்-2 போன்ற, உயர் அலுவலர் பணிகளில் சேர்பவர்களுக்கு, மேற்கண்ட தகுதிகள் முக்கியமாக இருக்க வேண்டும். முந்தைய பாடத்திட்டங்கள், தரமாக இல்லை என்பதை, தேர்வாணைய வட்டாரங்களே ஒப்புக்கொள்கின்றன.ஒடிசா மாநில தேர்வாணையம், குரூப்-1 தேர்வுக்கு, முதல்நிலைத் தேர்வில், இரு தேர்வுகளையும், முக்கிய தேர்வில், 9 தேர்வுகளையும் நடத்துகிறது. ஆனால், தமிழகத்தில், முதல்நிலைத் தேர்வில், ஒரே ஒரு தேர்வு மட்டுமே இடம்பெற்றிருந்தது. முக்கியத் தேர்வில் (மெயின் தேர்வு), 2, பொது அறிவு தாள்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது, கூடுதலாக, மேலும் ஒரு பொது அறிவுத்தாள் சேர்க்கப்பட்டு உள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம் பிரதானம்:

நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண், 80ல் இருந்து, 120ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. உயர் அலுவலர் நிலையிலான தேர்வு முதல், குரூப்-4 நிலையிலான தேர்வுகள் வரை, அனைத்து பாடத் திட்டங்களிலும், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகிய பாடங்கள், பிரதானமாக இடம்பெற்றுள்ளன. பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள், குறைக்கப்பட்டுள்ளன.
வி.ஏ.ஓ., தேர்வு மாற்றம்:

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்கும் வி.ஏ.ஓ., தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு, 200 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த தேர்வுக்குப் பின், வேறு தேர்வுகள் கிடையாது. இன சுழற்சி வாரியாக, மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், 150 கேள்விகள், பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கேட்கப்படும்.மீதம் உள்ள 50 கேள்விகள், கிராம நிர்வாகத்திறன்
குறித்து இடம்பெற்றிருக்கும். 150 கேள்விகளுக்கு, 225 மதிப்பெண்களும், 50 கேள்விகளுக்கு, 75 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. வி.ஏ.ஓ., அல்லாத இதர குரூப்-4 தேர்வுகளில், வழக்கமாக, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில், 100 கேள்விகளும், பொது அறிவில் இருந்து, 100 கேள்விகளும் கேட்கப்படும்.தற்போது, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 50 என, குறைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 150 கேள்விகளும், சிந்தித்து விடை அளித்தல் மற்றும் தேர்வரின் தனிப்பட்ட திறன்கள், புத்தி கூர்மையைஆராயும் வகையில், பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பத்து வகை தேர்வுகள் :

குரூப்-1, 2, 3, குரூப்-4, குரூப்-6, குரூப்-7, குரூப்-8, வி.ஏ.ஓ., - எஸ்.எஸ்.எல்.சி., - டிப்ளமோ தகுதி நிலையில், அனைத்து தொழில்நுட்ப தேர்வுகள், இளங்கலை மற்றும் முதுகலை தகுதி நிலையில், அனைத்து தொழில்நுட்ப தேர்வுகள் என, 10 வகை தேர்வுகளுக்கும், தனித்தனியே, விரிவான, முழுமையான பாடத்திட்டங்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
நட்ராஜ் சாதனை:
இது குறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறியதாவது:
பாடத்திட்டங்களை, தரமாக உருவாக்க வேண்டும் என்பதில், ஆறு மாதங்களாக, நட்ராஜ், மும்முரமாக ஈடுபட்டார்.பாட வாரியாக, நீண்ட அனுபவம் பெற்ற பேராசிரியர்கள், அனைத்து துறை உயர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தொழில்துறையைச் சார்ந்த வல்லுனர்கள் என, ஒரு துறை விடாமல், அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து, எப்படிப்பட்ட பாடத்திட்டங்களை உருவாக்கினால், தரமான அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கிடைப்பர் என, ஆய்வு செய்து, அதற்கேற்ப, பாடத்திட்டங்களை உருவாக்கினார்.இனி, மனப்பாடம் செய்து, தேர்வை எழுத முடியாது. பாடத்திட்டங்களை முழுமையாக படித்து, அதனை, பல்வேறு வகைகளில் சிந்தித்து, தீர்வு காணும் வகையில், தேர்வை அணுகினால் தான், வெற்றி பெற முடியும்.அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, "புதிதாக வருபவர்களுக்கு, ஒரு கடிதத்தைக் கூட, "டிராப்ட்' செய்யத் தெரியவில்லை. இப்படிபட்டவர்களை தேர்வு செய்து கொடுத்தால், அரசு நிர்வாகம் எப்படி நடக்கும்?' என, கேட்டனர். இனி, இதுபோன்ற நிலை ஏற்படாது. திறமையானவர்கள் மட்டுமே, அரசுப் பணிகளுக்கு வர முடியும்.
புதிய பாடத்திட்டம், உடனடி அமல் :
புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும், உடனடியாக
அமல்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, அனைத்து தேர்வுகளும், புதிய பாடத்திட்டத்தின்படியே நடக்கும்.இவ்வாறு, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம், இனிமேல், தேர்வாணைய தேர்வில், "தேறுவது', குதிரை கொம்பாக இருப்பதுடன், தேர்வர்கள் மத்தியில், போட்டியும் கடுமையாக இருக்கும்.
இது நியாயமா? தேர்வர்கள்கேள்வி :
போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும், இப்போதே அமலுக்கு வந்துவிட்டதாக, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, முதலில் நடக்கும் தேர்வுகளுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியை, தேர்வாணையம் வழங்கியிருக்க வேண்டும்.அப்படியில்லாமல், உடனே, அமலுக்கு வருகிறது என்றால், எப்படி தயாராக முடியும் என, தேர்வர்கள், கேள்வி எழுப்புகின்றனர். பாடத்திட்டங்களை, பதிவிறக்கம் செய்து, அதற்கேற்ற புத்தகங்களை வாங்கி, படிக்க வேண்டும். இதற்கு, போதிய கால அவகாசத்தை, தேர்வாணையம் வழங்கவில்லை என, தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்வாணைய இணையதளம் முடங்கியது :
குரூப்-1 முதல், குரூப்-4 வரையில், 10 வகையான போட்டித் தேர்வுகள் மற்றும் அதற்கான புதிய பாடத்திட்டங்கள், மொத்த தேர்வுத்தாள்கள், அதற்கான மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரமும், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வெளியானது.இந்த விவரங்களை அறிய, நேற்று ஒரே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தை பார்வையிட்டதால், பிற்பகலில், இணையதளம் முடங்கியது. நீண்ட நேரம் வரை, இணையதளம் இயங்கவில்லை. முன்பக்கம் இயங்கிய போதும், பாடத்திட்ட பக்கங்கள், இயங்கவில்லை. இதனால், தேர்வர்கள், கடும் சிரமப்பட்டனர்.
-
தினமலர் செய்தியாளர்-