சனி, 14 செப்டம்பர், 2013

கேரளாவில் உள்ள சென்னை ? ஓணம் பண்டிகை - பிற்பகல் வரையே இருப்பூர்திப் பணிகள்

தென்னக இருப்பூர்தி என்பது கேரள இருப்பூர்திதானே! எனவே, தமிழர் திருநாளுக்குத் தரப்படாத விடுமுறை வாய்ப்பை மலையாள விழாவிற்குத் தரவேண்டியதுதான்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


ஓணம் பண்டிகை:  பயணச்சீட்டு மாடங்கள் பிற்பகல் வரை மட்டும் இயங்கும்

First Published : 14 September 2013 05:03 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும் பிற்பகல் வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
"ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும், திங்கள்கிழமை (செப். 16) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்' என, தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக