செவ்வாய், 18 டிசம்பர், 2012

கோத்தபாயவுக்கே மறுவாழ்வு அளிக்க வேண்டும்

கோத்தபாயவுக்கே புனர்வாழ்வு அளிக்க வேண்டும் : இலங்கை எதிர்க்கட்சிகள்

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் இலங்கை அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் தினத்தைக் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெலிக்கந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இலங்கை அதிபரின் தம்பி என்ற திமிருடன் செயல்படும் கோத்தபாயவுக்கே புனர்வாழ்வளிக்க வேண்டும். பல்கலை மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக