ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தமிழரின் வாக்கு வலிமையை உணர்ந்து தமிழ் ஈழத்தைமலரச் செய்யட்டும்


 
தமிழர்களின் வாக்குப் பலத்தை உணர்ந்த கான்சர்வேட்டிவ் கட்சி !
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2332
21 April, 2012 by admin
பிரித்தானிய ஆழும் கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தனது மத்திய குழுவின் கொள்கை விளக்க துண்டுப் பிரசுரங்களின் ஒரு பகுதியை தமிழில் அச்சடித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகத்தில் கொள்கை விளக்க துண்டுப்பிரசுரங்கள் பல அச்சடிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் அச்சாகும் இந்த துண்டுப் பிரசுரங்களில் சில தமிழிலும் அச்சாகிவருகின்றது. கடந்தகாலங்களில் பிரித்தானியாவில் ஆட்சியில் இருந்த லேபர் கட்சி(தொழில்கட்சி) தமிழர்கள் விடையத்தில் அதிக அக்கறைகாட்டி வந்தது. இதனால் பல தமிழர்கள் தமது வாக்குகளை லேபட் கட்சிக்கு அள்ளிவழங்கினார்கள்.

இதனை நன்கு அறிந்துகொண்ட, ஆழும் கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சியானது தற்போது தமிழர்களை தம்பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழர்கள் வாக்குப் பலம் என்ன என்பதனை கான்சர்வேட்டிவ் கட்சி நன்கு புரிந்துவைத்துள்ளது. பிரித்தானியாவில் பல்லின மக்கள் பலர் இருந்தாலும், தமிழில் தமது துண்டுப்பிரசுரங்களை இவர்கள் ஆச்சடிப்பது பெரும் ஆச்சரியமான விடையமாகும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக