வெள்ளி, 18 மார்ச், 2011

No attempt for third front-tha.pandiyan: மூன்றாவது அணிக்கு முயற்சி செய்யவில்லை: தா.பாண்டியன்


எங்கள் அப்பன் குதிருக்குள்  இல்லை என்று எடுத்துக் கொள்வதா? நாங்கள் கொத்தடிமைகளாகத்தான் இருப்போம். அதிலிருந்து மீளமாட்டோம் என்று எடுத்துக் கொள்வதா? அம்மையார் அரற்றுகிறாரா? மிரட்டுகிறாரா? என்பதைப் பொறுத்து நிலை மாறும்.எனினும் இதுவே மாற்று அணிக்கான நல்வாய்ப்பான நேரம். வைகோ தலைமையில் ஒன்று கூடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /

மூன்றாவது அணிக்கு முயற்சி செய்யவில்லை: தா.பாண்டியன்

சென்னை, மார்ச் 17: அதிமுக வேட்பாளர் பட்டியலால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று காலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் கூடிப் பேசினர். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிருப்தி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்று செய்திகள் உலவின. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தாங்கள் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்றும், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தங்களுக்கிடையே எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக மீண்டும் ஜெயலலிதாவைச் சந்திக்க இருப்பதாகவும், விரைவில் தங்கள் கூட்டணிக்குள் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள்

நல்லவிதமாக இந்த பிரச்சனை முடிவுக்கு வர வாழ்த்துக்கள்.. தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி இந்த அணியிலுள்ள கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.. நான் ஜெயலலிதா அனுதாபி இல்லை.. இருந்தாலும் ஒரு குடும்பத்தின் ஏகதிபத்திய சொத்தாக்க தமிழ்நாடு ஆகிவிவிடாமல் தடுப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை..கருணாநிதியை ஒரு சீனியர் லீடர் என்று ஏத்துகொள்ளலாம்..ஆனால் வர குடும்பத்தார் ஆள்வதற்கு பதில் ஜெயலலிதா ஆள்வதில் எந்த தவறும் இல்லை.
By ராஜ்
3/17/2011 11:15:00 PM
இங்கு தினமணி உண்மையை மறைக்கிறது.தா.பாண்டியன் அவ்வாறு சொல்லவில்லை.ஏன் தினமணி ஜெயலலிதாவை இவ்வளவு தூரத்திற்கு இன்னும் ஆதரிக்கிறதோ தெரியவில்லை.இத்தனை வருடம் தன கட்சிக்காகவும் சேர்த்து பாடுபட்ட வைகோவை கழற்றி விட்டார்,கம்யூனிஸ்ட்கலை,தே.மு.தி.க,யாரையுமே மதிபதில்லை .
By mubaarak
3/17/2011 10:49:00 PM
helo, we were watching news when T.Pandian came to Vijayakanth Office and given the message to press(reporter asked ,that do have any idea to compromise with AIADMK? He said if u want you can do that not me) but dinamani news is says opposite of his interviews .how your reporter collected the fake news from the spot? or particularly u are supporting to AIDMK?
By Rajasekar.D
3/17/2011 10:43:00 PM
good. accept what madam gives. throw out vaiko. All the others in the front are good. vijaykanth also is a liability. If panrutti joins admk, the 'captain' will become zero. .
By mathew
3/17/2011 10:37:00 PM
தா.பா வின் பேச்சை டிவியில் பார்த்தோம்,மிகுந்த கோபத்துடன் பேசினார்,தற்போது மாற்றி பேசுகிறார்,பாடம் புகட்டபடவேண்டும் இவர்களுக்கு...தைரியம் இல்லாததைதான் காட்டுகிறது .....இந்த பேச்சு ..
By வெங்கடேசன்.t
3/17/2011 9:53:00 PM
இவர்கள் எவ்வளவு அவமானப்பட்டாலும் இந்த அடிமைகளால் எதுவும் செய்யமுடியாது இவர்கள் தங்கள் கட்சிகளை அடகுவைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் இவர்களை இன்னமும் உழைக்கும் வர்க்கம் நம்புவதுதான் கொடுமை
By mohan
3/17/2011 9:45:00 PM
அய்யா நிச்சயம் நல்லதே நடக்கும் உங்களுடைய கருத்துக்கு நன்றி
By ஆனந்தன்
3/17/2011 7:46:00 PM
குடும்ப ஆட்சிகு முடிவு கட்ட தங்கள் முயற்சி சரியான முடிவாக அமையும்.......... S .பிரபாகரன்.ராமேஸ்வரம்
By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
குடும்ப ஆட்சிகு முடிவு கட்ட தங்கள் முயற்சி சரியான முடிவாக அமையும்.......... S .பிரபாகரன்.ராமேஸ்வரம்
By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
என்ன ஆச்சு இந்த கம்யூனிஸ்ட்களுக்கு இவர்களின் நிலைப்பாட்டால் உயர்ந்த கம்யூனிசத்தின் நிலைமை தான் மிகவும் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, தமிழக கம்யூனிஸ்டுகளால் ஒட்டு மொத்த கம்யூனிஸமும் தலை கவிழ்ந்து நிற்க்கிறது.ஜார்ஜ் மன்னர்களை மன்ணை கவ்வ செய்த இவர்களுக்கு இந்த நிலமை வந்திருக்க கூடாது
By ரவிக்குமார்
3/17/2011 6:12:00 PM
பாண்டியன் அவர்களே, அம்மாவைப் பார்க்கப் போகும் போது மறக்காமல் நீதி மன்ற முத்திரை தாள்கள், ராமகிருஷ்ணனுக்கும் சேர்த்து, வாங்கிச் செல்லுங்கள், தாமதிக்காமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வசதியாக இருக்கும் ... ... அடிமைச் சிறுமதியை உச்சத்தில் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்கள்... ... ...
By udayavanan
3/17/2011 5:35:00 PM
ADMK supremo J.Jayalalitha should come forward to compromise with the alliance parties like CPI, CPM etc, in allotment of seats. Then only she will be able to come to power and the ruling DMK can be removed from the power. Unless she does not convince the alliance parties, she can not come to the power, and it will be useful to the ruling DMK to come to the power once again. Aru.Arumugham
By arumugham
3/17/2011 5:25:00 PM
THARPOTHAIYA SOOLNILAYIL (KUDUMBA AATCHIKKU ETHIRANA MAKKALIN ENNATHTHINAI) ETHIR KATCHIKAL ONDRUINAINTHU PAYAN PADUTHTHIKKOLLA VENDIYA AVASIAYAM, ADMK ANIYIL ULLA ANAITHTHUKKATCHIKAULUKKUM ERUKKA VENDUM. MAKKALIN MANANILAI ONDRAGAVE IRUPPATHAL ENGU POTTIYILLALUM VETRI KITTUM.
By Mahesh
3/17/2011 5:00:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக