சனி, 18 டிசம்பர், 2010

ready to help india-announcement by singhalam: புலிகள் அச்சுறுத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவத் தயார்: இலங்கை

எவ்வாறு பொய்களைக் கட்டவிழ்த்து விடுவது அவற்றை எவ்வாறு பரப்புவது என்பது குறித்தெல்லாம் சிங்களமும் இந்தியமும் கருத்து பரிமாறிக் கொள்வது எப்பொழுதும் நடக்கும்  ஒன்றுதான். ஆனால், இந்தியா படை உதவி கேட்டால் அது குறித்து ஆய்வு செய்யப்படும் என்பது இந்தியாவைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம். தமிழ் நாட்டு மக்களை நீயே கொல்வதை விட நாங்கள்  கொல்வது உனக்கு எளிது எனச் சொல்வதற்காக்வும் இருக்கலாம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் காங்.ஐ அகற்றினால் இந்தியாவின் மானம் காப்பாற்றப்படும். ஒற்றுமையும் நிலைக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புலிகள் அச்சுறுத்தல் விவகாரத்தில் 
இந்தியாவுக்கு உதவத் தயார்: இலங்கை

கொழும்பு, டிச.17: விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா ராணுவரீதியிலான உதவி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல தெரிவித்தார்.பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்ல விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.இதுகுறித்து ரம்புக்வெலவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரம்புக்வெல, இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தில் இலங்கையிடம் உள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கோரினால் அதுகுறித்து அப்போது ஆய்வுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்

WELLSAID NAZEER MOHAMMED
By VEERA
12/17/2010 8:12:00 PM
wellsaid Nazeer
By Veera
12/17/2010 8:10:00 PM
தமிழினத்தை அழிக்க தமிழகத்துக்கும் சிங்களப் படையை அனுப்பலாம் என்ற திமிர் எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு இலங்கையின் ஈன அமைச்சர் கருத்து தெரிவித்திருக்கின்றான். தமிழினமே நீ, தமிழினத் தலைவனே..தங்கத் தாரகை அம்மாவே..மனித தெய்வம் எந்திரனே..திராவிடத் தெய்வம் விஜயகாந்தே..விஜயே..தலயே... என்றெல்லாம் பிதற்றித் திரிகிறாய். அன்பு உறவுகளே, நாம் தமிழர் என்னும் உணர்வோடு ஒன்றுபட்ட தமிழராய் தற்போதையச் சூழலில் செந்தமிழர் சீமானை நம்புவோம். ஆனால் யாரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். முத்துக்குமார் நம்பிய திருமாவளவன் கலைஞரிடம் கூழைக் கும்பிடு போடுகிறார். இராமதாசோ முழுமையான தன்னல வாதியாகயிருக்கிறார். மாவீரர் பழ.நெடுமாறன் முதுமையால் தற்போது முழுமையாக தமிழினத்துக்காக உழைக்க முடியா நிலையிலிருக்கிறார். எனவே தற்போதுள்ளச் சூழலில் சீமானையே நம்புவோம்.
By கு.காமராஜ்
12/17/2010 4:11:00 PM
நீ போத்திகிட்டு இரு அதுவே போதும்
By சிவா
12/17/2010 3:50:00 PM
சோனியா, கருணாநிதி மற்றும் ராஜபக்ஷே கூட்டு திட்டம்.
By ஆதவன்
12/17/2010 3:25:00 PM
கடைசியிலே கதை இப்படிப் போகுதா? ராணுவ உதவி கேட்டு நம்மைக் கெஞ்சிய காலம் போய் இப்போது இவர்கள் உதவி செய்கிறார்கலாமா?
By தன. குணசேகரன்
12/17/2010 3:07:00 PM
Sonia Gandhi and Rahul Gandhi are agents of Foreign agencies who want to destroy India.All Hindu community should awake,strive hard in pushing out these cowardous rajiv & soniya family
By Indian
12/17/2010 2:51:00 PM
Fact is Indian Army supported to Sri Lankan Army to destroy LTTE and lot of innocent Tamil Peoples in SriLanka. The Human viloation what extend have done at your end, it was already been disclosed in the videos through wikileaks. and also condemned by lot of countries. Now you are degrading indian army through giving such type of Statements.
By Seenu
12/17/2010 2:33:00 PM
அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு, விடுதலைப் புலிகளால் இரண்டு கிழட்டு அரசியல் வாதிகளுக்கு.................... என்று இந்திய உளவுத் துறையால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா? இதற்கு முன் இந்திய உளவுத் துறை வைகோவிற்காக் கருணாநிதியைக் கொல்லப் பார்க்கிறார்கள் என்று ரீல் விட்டார்கள், கிருஷ்ண ராஜ சாகர் அணையைத் தகர்க்கப் போகிறார்கள் என்று சொன்னார்கள், புருலியா ஆயுத மழையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்றார்கள், எவனோ ரயில் தண்டவாளத்தில் பட்டாசு விட்டதற்கெல்லாம் புலிகள் என்றார்கள், ஒரு வதந்தி மலரின் நிருபர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டதற்கும் அதயே சொன்னார்கள், தற்போது ஊடகங்கள் மூலமாக சிங்களன் செய்வதை விட இந்தியர்கள் தமிழர்கள் மீது அதிகம் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்தியச் சதியினால் இலங்கையில் இனி தமிழர்களே வாழ முடியாத சூழ்நிலையைக் கொண்டு வந்து விட்டார்கள் . அதை இப்போது இங்கேயும் நடத்த முற்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தயவு செய்து இந்தமாதிரியான பொய்ப் பிரச்சாரத்தை தினமணி நிறுத்திக்கொள்ள வேண்டு என்று கேட்ட
By Nazeer Mohammed
12/17/2010 2:05:00 PM
Soniya Gandhi and Rahul Gandhi are agents of Foreign agencies who want to destroy India.All Hindu community should awake,strive hard in pushing out these cowardous rajiv & soniya family ...இவர்ஹளுடன் சேர்ந்து மஞ்ச துண்டும் , சோடா கிளாஸ் சிதம்பரமும் ஸ்ரீலங்கன் கவர்மெண்டை தமிழ்நாடு வரை கொண்டு வருவனுங்கா
By Thamizhan
12/17/2010 1:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக