புதன், 19 மே, 2010

இலங்கையில் கனமழை:​ வெற்றிவிழா ரத்து

கொழும்பு, ​​ மே 18:​ இலங்கையில் கன மழை பெய்து வருகிறது;​ இதனால் கொழும்பு நகரையும் அதை ஒட்டிய 5 மாவட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.​ இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த போர் வீரர்கள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும் 20-ம் தேதி ​(வியாழன்)​ காலியில் நடைபெறுவதாக இருந்த விடுதலைப் புலிகளை ஒடுக்கியதைக் கொண்டாடும் வெற்றி விழாவும் ரத்து செய்யப்படுவதாக அரசு அதிகாரி அறிவித்தார்.கொழும்பு நகரிலேயே பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​ தண்ணீரை வெளியேற்ற வழியில்லாமல் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கிறது.​ ​கொழும்பிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் இணைப்புச் ​ சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.கட்டுநாயக விமான நிலையத்துக்குச் செல்ல முடியாதபடிக்கு அந்தச் சாலையும் தண்ணீரில் மூழ்கியிருப்பதால் வெளிநாட்டுக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன.​ ​ பயணிகள் பயண நேரத்துக்கு 4 மணிநேரம் முன்னதாகவே விமான நிலையம் வந்து சேரும்படி அதிகாரிகள் கோரியுள்ளனர்.ரத்மலானை விமான நிலையத்தை இலங்கை விமானப்படைதான் பயன்படுத்துகிறது.அந்த விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.இந்த மழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும்,​​ மழை இதற்கு மேல் வலுக்காது என்றாலும் இதே அளவில் தொடரக்கூடும் என்று அந்த நாட்டு தலைமை வானிலை அதிகாரி கரியவாசம் தெரிவிக்கிறார்.இலங்கையின் மேற்கில் உள்ள மாவட்டங்களில் 45,775 குடும்பங்களைச் சேர்ந்த 1,92,075 பேர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக இயற்கைப் பேரிடர் நிர்வாக அமைச்சகம் தெரிவிக்கிறது.செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த இலங்கை நாடாளுமன்ற கூட்டம் மழை காரணமாகவே ரத்து செய்யப்பட்டது.யாழ்ப்பாணத்துக்கு புறத்தே 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெரும் புயலாக உருவெடுக்கக்கூடும் என்று கரியவாசம் இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்.​ அதே சமயம் இந்தப் புயல் இலங்கையைத் தாக்காது என்றும் கூறியிருக்கிறார்.ராணுவத்துடனான போரில் விடுதலைப் புலிகளுடன் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் இறந்தார்கள்.​ அவர்கள் இறந்து ஓராண்டு பூர்த்தியாவதை ஒட்டி அவர்களுடைய நினைவு நாளை துக்க தினமாகக் கடைப்பிடிக்க தமிழ் தேசிய கூட்டணி சார்புள்ள அரசியல் அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சியோ அல்லது அன்றாடமே நமக்கு துக்க தினமாக இருக்கும்போது இந்த ஒருநாளை மட்டும் அப்படி அறிவித்துக் கடைப்பிடிப்பானேன் என்று நினைத்தோ தமிழர்கள் அன்றைய தினத்தில் வெளிப்படையாக பொது நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவில்லை.இருபதாண்டுகளாய் வேதனையைத் தவிர வேறு எதையுமே அனுபவித்திராத இலங்கைத் தமிழ் இனம் அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதால்,​​ அவர்களுக்குப் பதிலாக இயற்கையே அழுவதைப் போல இருக்கிறது இடைவிடாத இந்த மழை.
கருத்துக்கள்

இயற்கைக்கு நன்றி. ஒரு வேளை ஈழத்தமிழர்களின் துயர நிலைகண்டு கையறு நிலையில் வானும் அழுததோ! அதனால் வான்மழையும் பெய்ததோ! கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்தும் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனவெறி, பதவி வெறி, பண வெறி, அதிகார வெறி அரசுகளால் கூட்டம் கூட்டமாக வஞ்சகமாகக் கொல்லப்பட்ட பொழுது் தடுக்க ஆற்றலின்றியும் தெய்வம் நின்று கொல்லும் என்னும் மக்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்க முடியாது வலிமையின்றியும் உள்ள பல்சமயக் கடவுளர் கூட்டம் அழுததால் தோன்றியதோ விண்மழை! எவ்வாறிருப்பினும் இந்திய சிங்கள வெற்றிக் கனவு பொய்த்ததற்கு நன்றி. இதே போல் இந்தியத் திரைப்பட விழாவும் நிற்கட்டும்! வீரப் போரில் வாழ்விழந்தவர்களுக்கு நம் அஞ்ச்லி! வாழ்வுரிமை இழந்தவர்களுக்கு ஆறுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 4:24:00 AM

Nature knows what is wrong and what is correct ;we all part of the nature. Nature will change if any one do wrong doing and abuse the system.Ethopia is one the rich country in the world about 500 years age. Now they beg for the food. China was poor about 500years age. Now, the super power china is the rich around the world. American, and England borrow money from china. It is nature. We'll see what will happen in future for us.

By kaddapoman
5/19/2010 3:23:00 AM

there is god,GHHEERS

By raj
5/19/2010 2:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக