செவ்வாய், 18 மே, 2010

மலேசியத் தமிழர்களுக்கு இந்தியா உதவவில்லை: மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேட்டி

மதுரை, ​​ மே 17:​ மலேசியத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் இந்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ப.ராமசாமி கூறினார்.​ ​ மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:​ ​ நாம் தமிழர் இயக்க அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை வந்துள்ளேன்.​ ​தமிழர்களுக்கு எழுச்சி மற்றும் முற்போக்குச் சிந்தனை வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.​ தமிழர்கள் இலங்கை மட்டுமின்றி சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.​ அதனால்,​​ நமக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும்.​ நல்ல சிந்தனை வேண்டும்.​ ​ அண்மையில் இலங்கைத் தமிழ் அகதிகள் 75 பேர் மலேசியக் கடல் போலீஸôரால் கைது செய்யப்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.​ அவர்களைத் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பினால் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.​ இதனால் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்று மலேசிய போலீஸôர் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.​ ​ தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதி போன்று மற்ற நாடுகளில் இல்லை.​ அதற்குக் காரணம்,​​ இங்கு தமிழர்கள் இருப்பதுதான்.​ ​​ ​ செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக ஆரம்பத்தில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.​ அண்மையில் தில்லியில் நடைபெற்ற புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கான மாநாட்டிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.​ ​ ஆனால்,​​ இலங்கைத் தமிழர்களை இந்திய அரசும்,​​ தமிழக அரசும் காப்பாற்றவில்லை.​ அந்த ஒரே காரணத்திற்காக இந்த இரு மாநாடுகளிலும் நான் கலந்து கொள்வதில்லை என நிராகரித்துவிட்டேன்.​ ​ மலேசியா,​​ சிங்கப்பூர்,​​ மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பொருளாதார,​​ சமூக,​​ அரசியல் ரீதியாக மோசமான நிலையில் உள்ளனர்.​ மலேசியாவில் தமிழர்களுக்குப் பொருளாதாரப் பங்கு பெரிய அளவில் இல்லை.​ மலேசியாவில் 140 ஆண்டுகளாகவே மலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்ற வட்டத்திற்குள்ளே வைத்து தமிழர்கள் பார்க்கப்பட்டுள்ளனர்.​ தற்போதுதான் அவர்கள் வெளியேவரத் தொடங்கி உள்ளனர்.​ ​ இந்திய அரசு மலேசியத் தமிழர்களுக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை.​ ஆனால்,​​ இந்தியாவின் விடுதலைக்கு மலேசியத் தமிழர்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.​ ​ 20 ஆண்டுகளாக எங்கள் பிரச்னையில் இந்திய அரசு உதவிடும் என்று எதிர்பார்த்தோம்.​ ஆனால்,​​ எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை.​ குறிப்பாக ஈழப்போருக்குப் பின் இந்திய அரசு தமிழர்களுக்கு உதவாது என்பது உறுதியாகிவிட்டது என்றார் அவர்.​ ​ பேட்டியின்போது நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்,​​ பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

நல்ல தமிழ் உணர்வாளர் துணை முதல்வர் இராமசாமி உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் உலக அரசுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் இறங்கி வெற்றி காண வேண்டும்.

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/18/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக