வெள்ளி, 24 ஜூலை, 2009

கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மூலம்
"புலிகளுக்கு' ரூ. 52.89 கோடி நிதி



டொரான்டோ, ஜூலை 23: இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாக, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மூலம் ஆண்டுக்கு 1.20 கோடி கனடிய டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 52.89 கோடி) நிதியுதவி கிடைத்து வந்தது. வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு அதிக அளவில் நிதியுதவி கிடைத்து வந்த நாடுகளில் கனடாவும் முக்கியமானதாக விளங்கியது. கனடாவிலிருந்து வெளியாகும் "நேஷனல் போஸ்ட்' நாளிதழ், ரகசியப் புலனாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. கனடாவில் பெருவாரியாக வசிக்கும் தமிழர்கள் இந்த நிதியைத் திரட்டி, விடுதலைப் புலிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சகோதரி வினோதினி, அவரது கணவர் பாலராஜேந்திரன் ஆகியோரும் கனடாவில்தான் வசித்து வருகின்றனர். கனடாவில் உள்ள டொரான்டோ, மான்ட்ரீல் ஆகிய நகரங்களில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து திரட்டப்பட்ட இந்த நிதியானது, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக கனடா புலனாய்வு போலீஸôர் தெரிவித்துள்ளனர். டொரான்டோ வாழ் உலகத் தமிழர்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலம் விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி திரட்டப்பட்டதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தாய்நாட்டு விடுதலைக்காகக் கனடா வாழ் தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகுதியெனில் பாராட்டிற்குரியவர்களே! பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே! வெறிபிடித்த சிங்கள அரசு இந்தியா முதலான பல்வேறு நாடுகளிடமிருந்து படை வலிமைக்குத் தனியாகப் பெருஞ்செல்வம் திரட்டியது போ்தாது என்று நலத்திட்ட உதவிக்கென்றும் வளர்ச்சிக்கென்றும் பெருஞ் செல்வம் பெற்று தாய்நாட்டு மக்களை - உறவினர்களை - அழிக்கும் பொழுது அதற்கு எதிராக எந்தநாடேனும் உதவ முன்வரும் என்று அப்பாவியாக நம்பி ஏமாறாமல் தாங்களே நிதி உதவி அளித்துள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் முயற்சி என்றென்றும் வரலாற்றில் போற்றப்படும். தொடர்க உங்கள் முயற்சிகள்! முயற்சி வீண் போகாது! விரைவில் தமிழ் ஈழம் மலரும்! அதனைக் காலம் உலகிற்குச் சொல்லும்! எல்லா நாடுகளிலும் தமிழ் ஈழக் கொடி பறக்கும்! ஈழத் தமிழர்களின் வாழ்வு சிறக்கும்! வெல்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ-உலக நட்புறவு!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 4:07:00 AM

By Appan
7/24/2009 3:38:00 AM

By rajia
7/24/2009 3:33:00 AM

By vinay
7/24/2009 3:28:00 AM

ANWAR WHAT IS YOUR IDENTITY'? ARAB? PAKISTANI? INDIAN? TAMIL NOT POSSIBLE BECAUSE THIS IS NOT A TAMILS NAME.AFTER ALL SOMEONE IN YOUR GENERATION ACCEPTED A BIG SUM AND CONVERT TO ISLAM BY MOGULS SO I AM NOT SURPRISED ABOUT YOUR COMMENT.DO YOU KNOW IT IS POSSIBLE TO BUY ANYTHING IN INDIYA WITH MONEY ASK HOW TO OTAVIO QUTUROCCHI FROM NAPLES HA HA HA HA

By KUTTY
7/24/2009 2:56:00 AM

DONT WORRY THIS AMOUNT WILL BE TRIPLED SOON NOT ONLY IN CANADA BUT ALSO FROM ALL OVER THE WORLD.SL TAMILS ARE PREAPERD TO DO THIS.SORRY REBELS DONT WANT MONEY FROM TAMIL NADU JUNGLE ONE DAY MEAL IS A STRUGGLE THERE.

By KUMARAN
7/24/2009 2:51:00 AM

By Anwar
7/24/2009 2:39:00 AM

Therefore that the Tigers were compelling or otherwise were ext5cating money from the exptariate Tamuls isa lie!THERE WAS NOTHING WORNG IN SUCH COTNRIBUTIONS TO LIBERATE TEHRI HOME LAND and to sustain war against the oppressive Sinhalese. If not for betrayl by Tamil naadu polticians like the CM thiru.MK and New Delhi, the LTTE would have made separate and sovereign eezham a reality.

By P.Padmanaabhan
7/24/2009 12:54:00 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக