திங்கள், 11 ஜூன், 2012

Karnataka govt orders probe against Nithyananda | நித்யானந்தாவைக் கைது செய்ய கருநாடக முதல்வர் உத்தரவு: பெங்களூரு பிடதி ஆசிரமத்திற்கும் முத்திரை

Karnataka govt orders probe against Nithyananda | நித்யானந்தாவைக் கைது செய்ய கருநாடக முதல்வர் உத்தரவு: பெங்களூரு பிடதி ஆசிரமத்திற்கும் முத்திரை! Dinamalar

Occupying SL military threatens uprooted Tamils of Thirumu'rika'ndi in Vanni

Occupying SL military threatens uprooted Tamils of Thirumu'rika'ndi in Vanni

Lands that belong to 183 Tamil families in Thirumu'rika'ndi in Ki'linochchi district have been appropriated by the occupying Sri Lanka Army for a military housing scheme. The Tamil families have filed cases in law courts pleading that they should be allowed to resettle in their own lands in Thirumu'rika'ndi. In the meantime, the SL military intelligence officers visit each family, who reside in Vavuniyaa, and intimidate them to withdraw their cases and to settle at a different place.

The Tamil families have rejected the demand by the SLA to go for settlement in new lands allocated to them at Kokkaavil by the SLA.

117 of the uprooted 183 families live with their friends and relatives and 46 families stay in the so-called welfare centres in Vavuniyaa.

The SL Army says it wants to construct one thousand houses for disabled Sri Lankan soldiers at Thirumu'rika'ndi.

The plan to colonise the ‘conquered’ Vanni by retried Sinhala soldiers and their families has long been hatched, even during the genocidal war, by Sinhala intellectuals close to Jathika Hela Urumaya (JHU), the chauvinistic Sinhala Buddhist party.

Writing in Sunday Times on January 18, 2009, Dr. Susantha Goonatilake, an engineer turned Sinhala sociologist, close to some JHU ministers said: “This victory should not be lost in the peace. [….] The mono-ethnic nature of the North should be dismantled. [….] 'Defence Colonies' defence settlements should be established all over the North. Retired husband and wife ex-employees of the armed forces should be settled in such strategic settlements. Like in mainland China, and earlier in Korea, Armed Forces owned industries should be established in these areas for both defence and civilian production. Our forces should be further strengthened to deter any future attempts.”

Susantha Goonatilake also cited the Indian example of “Defence colonies”, that should be implemented all over the North.

At that time, many considered Dr. Goonatilake, ‘a bit off’ in his thoughts. But, later it turned out that an entire State and an abetting International Community of Establishments were ‘dangerously off’ in their outlook.

So far, neither the IC of Establishments nor India has done anything to stop the structural genocide that goes on in the country of Eezham Tamils.

After the genocidal war, some Norwegian funding agencies and their supporters among Tamils, exerted pressure on diaspora development organisations to go to the island and work under JHU-run NGOs. The Diaspora Tamils rejected it and even Tamils who agreed to work under the programme got disillusioned later.

Related Articles:
23.11.10   SLA active in grabbing strategic lands in North
29.07.10   Development crimes, Norway and Tamil diaspora
30.01.09   'Vision' of a Sinhala sociologist

பெண்களே...எச்சரிக்கை தேவை!

சொல்கிறார்கள்


பெண்களே...எச்சரிக்கை தேவை!

மகப்பேறு மருத்துவர் ஷமீம் அக்தர்: பிரசவத்திற்குப் பின், உடலை சரிவர கவனிக்காமல் விட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளில், கருப்பை இறக்கம் முக்கிமானது. சுகப் பிரசவத்தின்போது, வெகுநேரம் வலியுடனேயே இருப்பது, ஆயுதம் போட்டுக் குழந்தை எடுக்கப்படுவது, பிரசவம் முடிந்து ஓய்வில்லாமல் போவது, அதிக எடையைத் தூக்குவது போன்ற காரணங்களால், இடுப்பெலும்பு தசை கள் தளர்ந்து, கருப்பை கீழ் இறங்கும் ஆபத்து அதிகம்.கருப்பை இறங்கும்போது, அதன் அருகில் உள்ள சிறுநீரகப் பை மற்றும் மலப் பையையும் சேர்த்து இழுக்கும். இதனால், நோய்த் தொற்று ஏற்பட்டு, புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும்.கருப்பை கீழிறங்குவது, தாய்மார்களுக்கு மட்டுமல்ல... பரம்பரையாகவே உடல் திசுக்கள் பலவீனமாக உள்ள, திருமணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் நேரலாம். சிலருக்கு, ஆரம்பத்தில் எந்தவித அறிகுறியும் தெரியாது. ஆனால், பிரச்னை அதிகரிக்கும்போது, இடுப்பிற்கு கீழ் பகுதியில், ஒருவித அழுத்தம் இருக்கும். நின்று வேலை செய்யும்போது அதிகமாகவும், படுத்திருக்கும்போது குறைவாகவும் வலி இருக்கும்.அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத அளவிற்கு, உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருப் பையை உள்ளே தள்ளி, "ரிங் பெசரி' என்ற வளையத்தை உள்ளே நிறுத்தி வைப்போம். இதைப் பொருத்திக் கொண்டவர்கள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, வளை யத்தை மாற்றிக் கொள்வதும், பரிசோதித்துக் கொள்வதும் மிகவும் அவசியம்."லேப்ராஸ்கோபி' சிகிச்சை மூலம், பலவீனமான தசைகளை இறுக்கி, வலை மாதிரியான ஒன்றின் முனையை கருப்பையின் பின் பக்கத்திலும், இன்னொரு முனையை இடுப்பு எலும்புடனும் சேர்த்துத் தைத்தும் விடலாம். இதனால், கருப்பை தன் இயல்பான இடத்திற்கு வந்துவிடும். பிரச்னை முற்றும் வரை மருத்துவரிடம் செல்லவில்லை எனில், கடைசி கட்டமாக கருப்பையை அகற்ற வேண்டியிருக்கும்.

pesum patam


மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா

மூத்த தேவி என்பதுதான் சுருங்கி மூதேவி என்றாயிற்று.  பினன்ர் சமசுகிருதத்தில் மூத்த என்னும் பொருளுடைய சேசுட்ட என்னும் சொல்லால் குறிக்கப்பெற்றது. மூத்த மகனை சேசுட்ட குமாரன் என்கிறார்கள் அல்லவா?அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையை காட்டி விடும்  என்னும் திருக்குறளுக்கு (௧௬௭) விளக்கம் தருவோர் தவ்வை என்றால் மூத்தவள் மூத்த தேவி என்றே விளக்கம் தருகின்றனர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /




"தனிக் கல்லில் செதுக்கப்பட்ட குளிகன்: பழநி அருகே மூதேவி கோவில் கண்டுபிடிப்பு' என்ற தினமலர் செய்தி, என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது.இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், "ஜேஷ்டா தேவி' என்று அழைப்பர். "ஜேஷ்டா' என்றால், முதல் என்று பொருள். தமிழில், "சேட்டை' என்று கூறுகின்றனர்.

தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், "ஜேஷ்டா' என்றும் குறிப்பிடுகின்றன, பலவித தாந்த்ரீக புத்தகங்களில் இதைக் காணலாம்.முதலில், தூம்ர வாராஹி என்பவள், சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்துக்கு பிறகும், தொடர்ந்து இருப்பவள். "தூம்' என்றால், "புகை' என்று பொருள். பிரளயம் முடிந்த பிறகு, மிஞ்சி நிற்பது என்னவென்றால், புகை மட்டுமே. அவள், புகை மண்டலத்தையே விழுங்கி விட்டவள் என்று பொருளாகும்.
அதைப் போலவே, சிருஷ்டி ஆரம்பிக்கும் முன்பும், அதே புகை தான் முதலில் மேகத்திலிருந்து கிளம்பும். அதனால், முதலில் அவளே தோன்றுவதால், அவள், தேவர்களுக்கும் முன்னால் வந்தவள் என்று கருத்துக் கொள்ளப்படுகிறது. இந்த காரணத்தினால், அவள் முதல் தேவி என்று கருதப்படுகிறாள்.இரண்டாவது கருத்துப்படி, பாற்கடலிலிருந்து, லட்சுமி தேவி மேலே வருவதற்கு முன், இந்த தேவி வந்ததாகவும், அவளை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும், அதன் காரணமாக அவளை, "தூம்ர காளி' என்று அழைக்கிறார்கள் என்றும் கருதப்படுகிறது. அந்த கோவில், காஷ்மீரில் கவர்னர் மாளிகைக்கு பின்னால், சிறிய குன்றின் மீது உள்ளது.

செல்வம் தருவாள்: ஆழ்வார்களில் ஒருவரான திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில், இந்த தேவி, முதல் தேவி என்றும், ஜேஷ்டா தேவி என்றும் கூறி பூஜிக்கப்பட்டாள்.
சமஸ்கிருத சொல்லான ஜேஷ்டா என்பதற்கு, தமிழில், "முதல் தேவி' என்று தான் பொருள். அவளை பூஜித்தவர்களுக்கு, நிறைய செல்வமும், பதவியும், பலவித சவுபாக்கியங்களும் அருளியதாக தெரிகிறது. அந்த கால கட்டத்தில், சமுதாய மக்களின் மனதை, வைஷ்ணவ சமயத்தில் திருப்புவதற்காக, அந்த தேவியை, தமிழில் சேட்டை என்றும், மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும், நாராயணனும், லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல அவர்களை நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது.


தேவியின் பெயரான முதல் தேவி என்ற சொல், காலப்போக்கில், சொல் திரிந்து, மூதேவியாக மாறிவிட்டது என்று தெரிகிறது. அதற்கு உகந்தது போல, அவள் உருவமும் பெருத்த உடலோடும், பெருத்த வயிறு கொண்டும் செதுக்கப்பட்டு இருக்கிறது.
டில்லி நேஷனல் மியூசியத்தில், ஜேஷ்டா தேவி என்ற பெயருடைய பெரிய சிலை, தமிழ்நாட்டில் இருந்து தான் கொண்டு வரப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது.


எப்படி வர்ணிப்பது?தூமாவதி, அழுக்கு படிந்த உடலோடும், முகத்தோடும், தலையை வாராமல், கோரமாக தலை மயிர் கொண்டவளும், உடம்பு நீளமாகவும், வயிறு ஒட்டியும், கண்கள் இரண்டும் முழுமையாகத் திறந்து கொண்டு, கண்களாலேயே விழுங்கி விடுபவள் போன்றும் காட்சி அளிக்கிறாள்.மிகவும் முக்கியமாக, அவள் இரண்டு கைகளும், முறத்தைப் பிடித்துக் கொண்டு, புடைப்பது போல இருக்கின்றன. சில சமயங்களில், அவள் நின்று கொண்டும் புடைப்பது போல, சிற்பிகள் வடித்துள்ளனர். அவள் சவாரி செய்வது கழுதை மீது. அவளுடைய இடது மேல் கையில், ஒரு கொடி இருக்கும்; அதில், காகத்தின் வரைபடம் உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிகள், முறம் பிடித்துக் கொண்டு நிற்கிற அல்லது உட்கார்ந்து கொண்டு இருக்கும் தேவியைத் தான் பூஜை செய்கின்றனர். அவளை, பசி நிறைந்த தேவி என்று கூறி, பூஜை செய்கின்றனர்.

அந்த தேவியின் சிற்பத்தில், அவள் கையில் இருக்கும் முறத்தில், சிறிய சிறிய நெல் விதைகள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெல் விதைகள், "ஆத்மா' என்றும், அவளை பூஜை செய்யும் ஆத்மாக்கள் சில, சரியான மனப் பக்குவமடையாததாகவும், சில பக்குவப்பட்டதாகவும் இருக்கும். அவள், பக்குவப்படாத ஆத்மாக்களை, கீழே முறத்திலிருந்து தள்ளிவிட்டு, சுத்தமான ஆத்மாக்களை, தன்னோடு சேர்த்துக் கொள்கிறாள்.

கழுதை வாகனம் :கழுதையின் மீது, அத்தனை துணிகளையும் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று, சலவைத் தொழிலாளி துவைக்கிறார். மறுபடியும், அதே கழுதையின் மீது, துவைத்த துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்புகிறார்.அதே மாதிரி தான், தூமாவதி அல்லது ஜேஷ்டா தேவி, பூஜையில் ஈடுபடும் ஆத்மாக்களை, துணி துவைப்பது போல, பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், சோதனைகளையும் கொடுத்து, மனப் பக்குவப்படுத்துகிறாள்.அதில், அந்த ஆத்மாக்கள் திருந்தி விட்டால், தன் மடியில் எடுத்துக் கொண்டு விடுகிறாள். இந்த காரணத்தினால் தான், சில சில ஆத்மாக்கள், பல ஜென்மங்கள் எடுத்து, அவள் பூஜையை செய்ய முற்படுகின்றன.இன்னும் சொல்லப் போனால், "ஜேஷ்டா' என்கிற தூம்ர வாராஹியை பூஜை செய்ய, பூர்வஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும் என்று, சாஸ்திரம் கூறுகிறது.

காரணம், அந்த ஜேஷ்டா என்கிற தூமாவதி, தூம்ர வாராஹி, தூம்ர காளி என்ற பெயரில், மாயை என்றும், மகா நித்திரை என்றும், காள ராத்திரி, மகா ராத்திரி, மோஹ ராத்திரி என்றும், தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.தூம்ர வாராஹியும், மகா வாராஹியும், ஒரே தேவியின் பெயர்கள். அவர்களின் அம்சங்களும், பணிகளும் வேறு. ஆனால், மூல சார ஸ்வரூபம் ஒன்றே தான். அவள், இரவு நேரம் பூஜிக்கப்படும் தெய்வமாகும். இந்த கருத் தை வைத்துக் கொண்டு தான், ஆழ்வார் அவளை, "மூதேவி' என்று கூறி தள்ளி விட்டாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

காகம்:ஜேஷ்டா அல்லது தூமாவதி என்பவள், வேறு யாரும் இல்லை. அவள் இறந்தவர்களோடு சம்பந்தப்பட்டவள். அவளே யமி ரூபம். அந்த தூமாவதி என்று கூறும் வாராஹியின் கோவில், புவனேஸ்வரில் உள்ளது. அவளுக்கு பெயர் யமி என்று சுவரில் எழுதப்பட்டுள்ளது.தமிழில், சேட்டை என்ற பெயராகும். சேட்டை அல்லது ஜேஷ்டா அல்லது தூம்ர வாராஹி அல்லது மகா வாராஹி ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதாரத்தில், அவருடைய சக்தியாக இருக்கிறாள். அவள் மிகவும் நியாயமான தீர்ப்பை தரும் தர்ம தேவதை.
- முனைவர் ஹரிபிரியா ரங்கராஜன்

ஞாயிறு, 10 ஜூன், 2012

Civic bodies in Jaffna resolve not to provide lands to SL military

Civic bodies in Jaffna resolve not to provide lands to SL military

[TamilNet, Sunday, 10 June 2012, 12:21 GMT]
The civic bodies in Jaffna have resolved that they would not allow the lands that come under the authority of the civic bodies to be appropriated for military purposes. “As the elected members of the public, we are not going to allow the lands to be deployed for the construction of military cantonments against the will of our people, whom we represent,” was the decision taken by all the civic bodies, a TNA politician in Jaffna told media Sunday. “The decision was unanimous,” the sources further said.

In the meantime, the chairman of Piratheasa Chapai (PS) of Valikaamam North, S. Sugirthan, has told media in Jaffna that the SL military had sought 100 perches of land at Chaa'lampai area in Mallaakam.

The SL military has been seeking to acquire the lands where people uprooted from Thaiyiddi and Myiliddi villages that come under the so-called High Security Zone. The uprooted people were living in Chaa'lampai area since 1990.

“It is unreasonable to expect lands used by the displaced people for military purposes,” Mr Sugirthan told media.

“How could the military expect to establish camps in civilian area when they continue to keep the lands in the High Security Zone from where the people have displaced,” he asked.

On Friday, at an special session of the civic body in Valikaamam North, even the opposition members of the EPDP had supported the decision to decline the request of the SL military.

A similar move by the military to appropriate lands at Thamma'lai in A'laveddi was also declined by the civic body.

The SL military should first consider handing over the lands they are already occupying in the name of HSZ, was the opinion of the civic bodies in Jaffna.

The chairman of Valikaamam East PS, Uthayakumar alias Ramesh, said he was yet to receive any request from the military seeking lands in Valikaamam East. But, any such request would be turned down by the civic body, he said adding that the civic body was facing tough questions from the people on the recently reported move by the SL military on land appropriation in the peninsula.

The chairman of Kaarainakar PS, V. Anaimukan, has already gone on record saying that he had been threatened at gunpoint to hand over the lands to military use. According to earlier reports, a Sri Lanka Navy officer from the Kaarainakar SLN base approached Mr Anaimukan while he was attending a meeting and forced him to sign on documents at gunpoint for a land that was appropriated for military use.

The civic bodies headed by Tamil National Alliance (TNA) representatives in Jaffna peninsula are also considering to hand over the lands to displaced civilians from Vanni to avoid future pressure from the SL military that seeks to appropriate lands from the civil authorities.

Chronology:

Batticaloa University protests political capture of its council

Batticaloa University protests political capture of its council

The Eastern University in Batticaloa is helpless to political appointments made to its governing council by Colombo, said the Vice Chancellor of the Eastern University, Professor K. Gobindarajah, following a recent appointment to the council backed by SL Deputy Minister V. Muralitharan alias Karuna causing the students to boycott classes for the third day on Saturday. The appointment of Dr Jaffer, director of the Kalmunai Base Hospital, to the council membership vacated by the demise of Fr. Sylvester Sritharan, is aimed at capturing and silencing the spirit of the university by paramilitary groups operating with the regime in Colombo, said students in Batticaloa. Such appointments theoretically made by the University Grants Commission are dangerously politicised in recent times especially with the universities in the north and east.

Sometimes back, the occupying Colombo has appointed a Sinhala Competent Authority to run the Eastern University, but students thwarted the effort.

As the Eastern University, like the Jaffna University, remains a centre for the liberation spirit of the Tamil-speaking nation in the island, the Colombo regime and its operators of paramilitary politics try all means to capture and make the university impotent, students said.

The SL Deputy Minister Muralitharan alias Karuna and Eastern Chief Minister S. Chandrakanthan alias Pillaiyaan, both deserted the LTTE, are now competing to capture the university.

Even the appointment of the current Vice Chancellor was not beyond politics. Collaborative politics first, education is secondary; is the situation in the university, students further commented.

The Catholic Bishop of Batticaloa has suggested the name of a priest for the vacant post in the governing council where maintaining balance is a very sensitive issue (6 Tamils, 3 Muslims and 3 Sinhalese).

The students union of the university has now demanded that a Christian priest should be appointed to the slot in the governing council.

The boycott will continue until the matter is resolved, said the president of the Eastern University students’ union, T Krishnananth.

No changes will be made in the appointment, says, SL minister MLAM Hisbullah, citing the SL Education Ministry.

மறைமுகமாக இந்தியைத் திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

நேரடியாகவே பல வகைகளிலும் இந்தித்திணிப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு எதிராகத் தமிழக அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? ஆண்டிற்கு ஒரு முறை வீர வணக்க நாள் நடத்துவதாலோ எப்பொழுதாவது வீரமாகப் பேசுவதாலோ இந்தித் திணி்ப்பு நிற்காது.  தேசிய மொழிகளின் வளர்ச்சி குறித்தும்  இந்தித்திணிப்பால் அவை தாழ்வுறுவது குறித்தும் பிற மொழியாளர்களிடமும் விளக்கி  அவர்களுடன் இணைந்து வலிமையாக  எதிர்த்தால்தான் வெற்றி காண இயலும்.




மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

First Published : 10 Jun 2012 06:34:47 PM IST


புதுச்சேரி, ஜூன் 10: மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சிபிஎஸ்இ பாடத்திட்டம் 12-ம் வகுப்பு புத்தகத்தில் விடுதலைக்கு பின் இந்தியா என்ற தலைப்பில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் சித்திரம் இடம் பெற்றுள்ளது. 1965-ம் ஆண்டு அப்போது நடைபெற்ற போராட்டத்தை எதிர்த்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வந்த கார்ட்டூனை பாடப்புத்தகத்தில் போட வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசு உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து இந்த கார்ட்டூனை நீக்க வேண்டும். இதை போடுவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

After messing up question of Eezham Tamils ‘IC’ embarks on Myanmar

After messing up question of Eezham Tamils ‘IC’ embarks on Myanmar

[TamilNet, Saturday, 09 June 2012, 22:58 GMT]
After messing up the national question of Eezham Tamils into genocide, the so-called international community now conceives identical models for the struggling nationalities in the island of Sri Lanka and Myanmar (Burma). The basic message is that the struggling nations should abide by the existing constitutions, compromise with the genocidal militaries of the respective states, envisage only non-descript solutions to come eventually and now concentrate only on resettlement rehabilitation and reconciliation to facilitate the ‘development’ of the so-called international community. Following the peace initiation of Norway in Burma, Australia and Singapore embark upon to play a role there, resembling what the Co-Chairs did to Eezham Tamils.

The Australian Foreign Minister Bob Carr on Friday announced that Australia would provide $ 5 million as initial contribution to promote peace in Myanmar’s conflict affected regions, said a report of the Australian Agency for International Development.

Australia will work with Norway and other international donors to create the necessary environment for the settlement of internally displaced people, the report said.

According to Bob Carr explaining the model, "While Australia strongly supports rapid assistance for peace-building efforts, we will also continue to work with international partners to expand the delivery of our substantial aid program to conflict-affected areas in Myanmar […] "With concrete improvements in their lives, people will have greater incentive to make enduring peace."

Australia is the second largest bilateral aid donor to Myanmar. Meanwhile Democratic Voice of Burma (DVB) cited a source from a local humanitarian group saying on conditions of anonymity: “It is now clear to me that the intention of the plan is to back the Burma government to bring the ethnic groups under the 2008 constitution and not support the UNFC [United Nationalities Federal Council] or KIO [Kachin Independent Organisation] requests to have dialogue outside of parliament.”

The policy also coerces exiled groups into registering as official NGOs in Burma, if they want funds. But they are not in a position to move back into Burma as legal entities, DVB commented on the peace initiative.

The Secretary of the Karan National Union, cited By DVB, did not want such programmes expanded before a political settlement was reached.

Without finding no solution at all to Eezham Tamils after the IC abetted genocidal war, and leaving them in the straits to face Sinhala militarisation, colonisation and structural genocide, the IC has now embarked upon peace facilitation in Myanmar. It is not peace facilitation but peace intimidation, commented Eezham Tamil political activists.

After ending the war in genocide and parading it, Myanmar was the first country visited by Mahinda Rajapaksa.

Meanwhile, Singapore has also sent a business delegation to Myanmar this week, reminding of a proverb in Jaffna on business greed putting the finger on hot pie (Aa’raatha soattinilum avukken’ru kaivaiththal).

Last month the Singapore Foreign Minister Shanmugam led a business team to Colombo too.

‘Slash and burn development’ is the term perceived by political analysts to describe the kind of activities practiced by the IC and peace facilitators operating at its instance, in various parts of the world in the name of international crisis management and conflict resolution.

Chronology:

சொல்கிறார்கள்



இதுவரை 500 பதக்கங்கள் வென்று விட்டேன்!'

நீச்சல் வீராங்கனை ஐஸ்வர்யா: என் அப்பா, பிரபலமான நீச்சல் பயிற்சியாளர் சந்திரசேகர்; அவரிடம் நீச்சல் பயின்றவள் நான். நான்கு வயதில் முதன் முதலில் நீந்த ஆரம்பித்தேன். அந்த வயதில் நான் நீச்சல் போட்டியில் வென்ற தங்கம், மறக்கவே முடியாது. அதற்குப் பின், என் அப்பா, "போட்டிகள் வேண்டாம்; நன்றாக பயிற்சி எடு' என்றார்.ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். கிட்டத்தட்ட, ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் போட்டியில் பங்கேற்ற போது, நான் ஆறாம் வகுப்பு மாணவி; மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தேன்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது, "பேக் ஸ்ட்ரோக்' பிரிவில், ஒரே சமயத்தில், மூன்று தங்கம் உட்பட, ஐந்து பதக்கங்களை மாநில அளவில் ஜெயித்து, தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றேன். அங்கு, நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றேன்.அந்த வெற்றியால், இந்தியாவின் சார்பாக, தெற்காசிய விளையாட்டிற்கு தேர்வானேன். ஆனால், போட்டிக்கு முன், முட்டியில் ஏற்பட்ட சுளுக்கால், தவித்துப் போனேன். வலியை பொருட்படுத்தாமல் தாங்கிக் கொள்வோம் என முடிவெடுத்து, போட்டியில் பங்கேற்றேன்.பாகிஸ்தானில் நடந்த அந்தப் போட்டிக்கு, என் அப்பாவால் வர முடியவில்லை. போட்டி துவங்க, சில மணி நேரம் இருக்கும் போது தான், அப்பா உடன் இல்லாதது, எவ்வளவு சோர்வாக உள்ளது என்பதை உணர்ந்தேன். மனதை பலப்படுத்தி போட்டியில் பங்கேற்று, வெள்ளி வென்றேன்.பிளஸ் 1 படிக்கும் போது, ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை தேசிய ஜூனியர் போட்டிகளில் வென்றேன். அந்த வெற்றிகள் தான், அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் விளையாட்டுக் கோட்டாவில், இரண்டாம் இடத்தை எனக்குப் பெற்றுத் தந்தது.இதுவரை, 500 பதக்கங்களுக்கு மேல் ஜெயித்து இருக்கிறேன். நீந்துவதில், இன்னும் இரண்டு நிமிடங்கள் குறைத்துவிட்டால், ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துவிடும்.
"கருவிலேயேபிரச்னையைதீர்க்கலாம்!'
பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் தீபா ஹரிகரன்: கர்ப்ப காலத்தில், அம்மா, கரு இருவருக்கும் ரத்த வகை எப்படி உள்ளது என்பதை அறிய வேண்டும். அம்மாவின் ரத்தம், ஆர்.எச்., நெகடிவ்வாக இருந்து, கரு, ஆர்.எச்., பாசிடிவ் என்றால், கருவிலேயே ரத்த சோகை பிரச்னை வரும். பிறந்த பின், மஞ்சள் காமாலை உட்பட, பல உடல் கோளாறுகள் வரலாம். கர்ப்பத்தின், 14வது வாரத்தில், "ஸ்கேன்' செய்யும் போது, கருவின் ரத்த ஓட்டம் வழக்கத்தை விட வேகமாக இருந்தால், ஆர்.எச்., பாசிடிவ் என, ஊகிக்கலாம். தொடர்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில், கருவின் ரத்த சிவப்பணுக்களை கண்காணிக்க வேண்டும்.கருவில், சிவப்பணு அளவு கணிசமாகக் குறைவது தெரிந்தால், கருவினுள், அம்மாவின் வகை ரத்தத்தை ஏற்ற வேண்டும். கர்ப்பத்தில், கருவின் ரத்தம், அம்மாவின் ரத்தத்தில் கசியும். ஆனால், மாறுபட்ட ரத்த வகையாக இருந்தால், ஏதோ வேண்டாத அன்னிய வஸ்து நமக்குள் வருகிறது என, அம்மாவின் ரத்தத்திலுள்ள, எதிர்ப்பு அணுக்கள் நினைத்து, அதை வேகமாக அழிக்கும்.இது அனைத்தும், கருவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நடக்கும் செயல். இதனால், கருவின் ரத்தத்திலுள்ள சிவப்பணு குறையும். உடலின், அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்வது சிவப்பணுவின் செயல். உயிர் வாழ எது அவசியமோ, அது வேகமாக அழிகிறது. சிவப்பணு அழியும் போது, மஞ்சள் காமாலை வரும்.சிவப்பணுவின் அளவு குறைவதால், கருவிலேயே ரத்த சோகையும், பிறந்த பின் இதயம், நுரையீரல் கோளாறு போன்ற பிரச்னைகளும் வரலாம். மஞ்சள் காமாலையை உண்டாக்கும், "பிலிருபின்' நிறமி, 15 வரை இருந்தால், பிரச்னை இல்லை. ஆனால், மாறுபட்ட ரத்த வகையால், 40 வரை கூட அதிகமாகும்.மாறுபட்ட ரத்த வகையால், வாழ்நாள் முழுக்க, உடல் கோளாறுகளுடன் இருப்பதை தவிர்க்க, சிறப்பு சிகிச்சை மூலம், கருவிலேயே, ஆர்.எச்., நெகடிவ் ரத்தத்தை கருவின் தன்மையைப் பொருத்து, தேவைக்கேற்ப ஏற்றுவோம். இதனால், பல உடல் கோளாறுகளை கருவிலேயே தவிர்த்து விடலாம்.