திங்கள், 11 ஜூன், 2012

பெண்களே...எச்சரிக்கை தேவை!

சொல்கிறார்கள்


பெண்களே...எச்சரிக்கை தேவை!

மகப்பேறு மருத்துவர் ஷமீம் அக்தர்: பிரசவத்திற்குப் பின், உடலை சரிவர கவனிக்காமல் விட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளில், கருப்பை இறக்கம் முக்கிமானது. சுகப் பிரசவத்தின்போது, வெகுநேரம் வலியுடனேயே இருப்பது, ஆயுதம் போட்டுக் குழந்தை எடுக்கப்படுவது, பிரசவம் முடிந்து ஓய்வில்லாமல் போவது, அதிக எடையைத் தூக்குவது போன்ற காரணங்களால், இடுப்பெலும்பு தசை கள் தளர்ந்து, கருப்பை கீழ் இறங்கும் ஆபத்து அதிகம்.கருப்பை இறங்கும்போது, அதன் அருகில் உள்ள சிறுநீரகப் பை மற்றும் மலப் பையையும் சேர்த்து இழுக்கும். இதனால், நோய்த் தொற்று ஏற்பட்டு, புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும்.கருப்பை கீழிறங்குவது, தாய்மார்களுக்கு மட்டுமல்ல... பரம்பரையாகவே உடல் திசுக்கள் பலவீனமாக உள்ள, திருமணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் நேரலாம். சிலருக்கு, ஆரம்பத்தில் எந்தவித அறிகுறியும் தெரியாது. ஆனால், பிரச்னை அதிகரிக்கும்போது, இடுப்பிற்கு கீழ் பகுதியில், ஒருவித அழுத்தம் இருக்கும். நின்று வேலை செய்யும்போது அதிகமாகவும், படுத்திருக்கும்போது குறைவாகவும் வலி இருக்கும்.அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத அளவிற்கு, உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருப் பையை உள்ளே தள்ளி, "ரிங் பெசரி' என்ற வளையத்தை உள்ளே நிறுத்தி வைப்போம். இதைப் பொருத்திக் கொண்டவர்கள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, வளை யத்தை மாற்றிக் கொள்வதும், பரிசோதித்துக் கொள்வதும் மிகவும் அவசியம்."லேப்ராஸ்கோபி' சிகிச்சை மூலம், பலவீனமான தசைகளை இறுக்கி, வலை மாதிரியான ஒன்றின் முனையை கருப்பையின் பின் பக்கத்திலும், இன்னொரு முனையை இடுப்பு எலும்புடனும் சேர்த்துத் தைத்தும் விடலாம். இதனால், கருப்பை தன் இயல்பான இடத்திற்கு வந்துவிடும். பிரச்னை முற்றும் வரை மருத்துவரிடம் செல்லவில்லை எனில், கடைசி கட்டமாக கருப்பையை அகற்ற வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக