nationalised of books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
nationalised of books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூன், 2011

List of authors of nationalised books: நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் அறிஞர்கள் பட்டியல்


நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் அறிஞர்கள் பட்டியல்


வ.எண்     நூலாசிரியர் பெயர்                             ஆண்டு 
1.        விடுதலைக்கவி பாரதியார் (1967க்கு முன்)
2.        சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
(அ) விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் 1984
(ஆ) பிற அனைத்து நூல்களுக்கும் 2006
3.        பாவேந்தர் பாரதிதாசன் 1990
4.        பேரறிஞர் அண்ணா 1995
5.        பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995
6.        தேவநேயப் பாவாணர் 1996
7.        மறைமலையடிகள் 1997
8.        திரு.வி.க. 1998
9.        திரு. கல்கி 1998
10.     கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1998
11.     திரு. திரு. ப. சீவானந்தம் 1998
12.     நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1998
13.     திரு. வ.உ. சிதம்பரனார் 1998
14.     திரு. ஏ.எசு.கே. அய்யங்கார் 1998
15.     திரு. வ.இரா. (வ. இராமசாமி அய்யங்கார்) 1998
16.     நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998
17.     திரு. கா.மு. செரீப் 1998
18.     திரு. பரலி சு. நெல்லைப்பர் 1998
19.     திரு. வ.வே.சு. ஐயர் 1998
20.     காரைக்குடி சா. கணேசன் 1998
21.     திரு. ச.து.சு. யோகி 1998
22.     திரு. வெ. சாமிநாத சர்மா 2000
23.     கவிஞர் முடியரசன் 2000
24.     தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 2000
25.     திரு. சாமி சிதம்பரனார் 2000
26.     பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் 2001
27.     திரு. புதுமைப்பித்தன் 2002
28.     திருமதி. கு.ப.சேது அம்மாள் 2002
29.     நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் 2004
30.     திரு. க.நா. சுப்பிரமணியம் 2004
31.     திரு. ந. பிச்சமூர்த்தி 2004
32.     புலவர் குழந்தை 2006
33.     பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி) 2006
34.     திரு. கா.சு. பிள்ளை 2006-2007
35.     புலவர் குலாம் காதிறு நாவலர் 2006-2007
36.     திரு.தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் 2006-2007
37.     முனைவர் சி. இலக்குவனார் 2006-2007
38.     மகாவித்வான் தண்டபாணி தேசிகர் 2006-2007
39.     திரு.தி.ச.அரங்கநாதன் (தி..ர) 2006-2007
40.     திரு. நாரண துரைக்கண்ணன் 2006-2007
41.     முனைவர் மா. இராசமாணிக்கனார் 2006-2007
42.     முனைவர் வ.சு.ப. மாணிக்கம் 2006-2007
43.     புலவர் கா. கோவிந்தன் 2006-2007
44.     திரு. சக்தி வை. கோவிந்தன் 2006-2007
45.     திரு. தெ.பெ. மீனாட்சி சுந்தரனார் 2006-2007
46.     திரு.த.நா. குமாரசாமி 2006-2007
47.     திரு. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2006-2007
48.     திரு. ம. சிங்காரவேலர் 2007 - 08
49.     தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2007 - 08
50.     திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் 2007 - 08
51.     திரு. கி.வா. சகந்நாதன் 2007 - 08
52.     திரு. ஔவை துரைசாமி பிள்ளை 2007 - 08
53.     திரு. அ.ச. ஞானசம்பந்தனார் 2007 - 08
54.     திருக்குறளார் முனுசாமி 2007 - 08
55.     உவமைக்கவிஞர் சுரதா 2007 - 08
56.     திரு. சாவி 2007 - 08
57.     திரு. மாவெண்கோ என்ற வ.கோ. சண்முகம் 2007 - 08
58.     திரு. தீபம் நா. பார்த்தசாரதி 2007 - 08
59.     திரு.எசு.எசு. தென்னரசு 2007 - 08
60.     திரு.சி.பி. சிற்றரசு 2007 - 08
61.     திரு.ஏ.வி.பி. ஆசைத்தம்பி 2007 - 08
62.     திரு.டி.கே. சீனிவாசன் 2007 - 08
63.     திரு. இராம. அரங்கண்ணல் 2007 - 08
64.     கவிஞர் வாணிதாசன் 2007 - 08
65.     கவிஞர் கருணானந்தம் 2007 - 08
66.     திரு. மருதகாசி 2007 - 08
67.     சலகண்டபுரம் ப. கண்ணன் 2007 - 08
68.     கவிஞர் பெரியசாமித்தூரன் 2008 - 09
69.     பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 2008 - 09
70.     பண்டித க. அயோத்திதாசர் 2008 - 09
71.     திரு. ஆபிரகாம் பண்டிதர் 2008 - 09
72.     திரு. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 2008 - 09
73.     முனைவர் இரா.பி. சேதுப்பிள்ளை 2008 - 09
74.     மகாவித்வான் இரா. இராகவையங்கார் 2008 - 09
75.     திரு. உடுமலை நாராயண கவி 2008 - 09
76.     திரு.கு.மு.அண்ணல் தங்கோ 2008 - 09
77.     திரு. ஔவை தி.க. சண்முகம் 2008 - 09
78.     திரு. விந்தன் 2008 - 09
79.     திரு. இலா.ச. இராமாமிர்தம் 2008 - 09
80.     திரு. வல்லிக்கண்ணன் 2008 - 09
81.     திரு.நா. வானமாமலை 2008 - 09
82.     கவிஞர் புதுவைச் சிவம் 2008 - 09
83.     திரு.அ. இராகவன் 2008 - 09
84.     திரு.தொ.மு.சி. இரகுநாதன் 2008 - 09
85.     திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் 2008 - 09
86.     முனைவர் ந. சஞ்சீவி 2008 - 09
87.     திரு. முல்லை முத்தையா 2008 - 09
88.     கவிஞர் எசு.டி. சுந்தரம் 2008 - 09
89.     கவிஞர் மீரா 2008 - 09
90.     பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் 2008 - 09
91.     புலவர் முகமது நயினார் மரைக்காயர் 2008 - 09
92.     திரு.சு. சமுத்திரம் 2008 - 09
93.     திரு. கோவை இளஞ்சேரன் 2008 - 09
94.     பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 2008 - 09
95.     பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2008
96.     குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 2009 - 10
97.     பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 2009 - 10
98.     பம்மல் சம்பந்தனார் 2009 - 10
99.     திரு.அ. சிதம்பரநாதன் செட்டியார் 2009 - 10
100.  திரு.மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை 2009 - 10
101.  திரு.தொ.மு. பாசுகரத் தொண்டைமான் 2009 - 10
102.  திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் 2009 - 10
103.  முனைவர் ச. அகத்தியலிங்கம் 2009 - 10
104.  பாவலர் நாரா. நாச்சியப்பன் 2009 - 10
105.  திரு. புலியூர்க் கேசிகன் 2009 - 10
106.  திரு.வை.மு. கோதைநாயகி 2009 - 10
107.  திரு. சின்ன அண்ணாமலை 2009 - 10
108.  திரு.என்.வி. கலைமணி 2009 - 10
109.  கவிஞர் முருகு சுந்தரம் 2009 - 10
110.  புலவர் த. கோவேந்தன் 2009 - 10
111.  திரு. அ.க. நவநீதக்கிருட்டிணன் 2009 - 10
112.  திரு. வடுவூர் துரைசாமி அய்யங்கார் 2009 - 10
113.  பேரா.மு. இராகவையங்கார் 2009 - 10
114.  பூவை.எசு. ஆறுமுகம் 2009 - 10
115.  பேரா. வையாபுரிப்பிள்ளை 2009 - 10
116.  இராய சொக்கலிங்கம் 2009 - 10
117.  திருமதி. இராசம் கிருட்டிணன் 2009-10 (சிறப்புத் தேர்வு)
118.  திரு. மணவை முசுதபா 2009-10 (சிறப்புத் தேர்வு) 
119.  பேரா. அ.மு. பரமசிவானந்தம் 2010 -2011
120.  பேரா. அ. கிருட்டிணமூர்த்தி 2010 -2011
121.  பேரா. எசு. எம். கமால் 2010 -2011
122.  ப. இராமசாமி 2010 -2011
123.  பேரா. இர. சீனிவாசன் 2010 -2011
124.  வ.சு. செங்கல்வராய பிள்ளை 2010 -2011
125.  கவிஞர் வெள்ளியங்காட்டான் 2010 -2011
126.  நெ.து. சுந்தரவடிவேலு 2010 -2011
127.  முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 2010 -2011
128.  மயிலை சிவமுத்து 2010 -2011
129.  காழி சிவகண்ணுசாமி பிள்ளை 2010 -2011
130.  கே.பி.நீலமணி 2010 -2011
131.  கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் 2010 -2011
132.  அ.திருமலை முத்துசாமி 2010 -2011
133.  எசு. நவராசு செல்லையா 2010 -2011
134.   திரிகூட சுந்தரம் 2010 -2011
135.   பேரா. சுந்தர சண்முகனார் 2010 -2011
136.   தஞ்சை இராமையாதாசு 2010 -2011
137.   கவிஞர் தாராபாரதி 2010 -2011
138.   அருதனக்குட்டி அடிகளார் 2010 -2011
139.  சரோசா இராமமூர்த்தி 2010 -2011
140.  அ. சீனிவாசன் 2010 -2011


வியாழன், 1 ஏப்ரல், 2010

மணவை முசுதபா நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்: முதல்வர்



சென்னை, மார்ச்.31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார். 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்', 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' போன்ற இவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளன. தமிழக அரசின் 'கலைமாமணி விருது', 'திரு.வி.க.விருது' ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.இவர் இரண்டு தொகுதிகள் கொண்ட 'அறிவியல் கலைச்சொல் அகராதி” உட்பட பல நூல்களைப் படைத்துத் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். தற்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள மணவை முஸ்தபா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தமது உடல்நிலை குறித்து எடுத்துரைத்துத் தம் மருத்துவச் செலவிற்குப் பயன்படும் வகையில் தாம் படைத்துள்ள அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி, தமக்கு பரிவுத் தொகை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்று அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

கூரியர் இதழ் தமிழில் சிறப்பாக வெளிவந்ததற்கும் அறிவியல் தமிழ் குறித்த விழி்ப்புணர்வு ஏற்படுவதற்கும் மணவை முசுதபா அருந் தொண்டாற்றியுள்ளார். எனினும் அவர் வெளியிட்டுள்ள அகராதிகளில் புதுச் சொல் புனைவு எதுவும் இருக்காது. ஆனால் ஏற்கெனவே வந்துள்ள அகராதிகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள செயல் பாராட்டிற்குரியது. இவற்றை நாட்டுடைமையாக்கியிராவிட்டாலும் பாடநூல்கழக அகராதிகள் முதலான பிற அகராதிகளில் இருந்து அவற்றை நாம் பயன்படுத்த இயலும். வேறு வகையில் மருத்துவ உதவி அளிததிருக்கலாம். எனினும் முதல்வரின் பரிவான செயலுக்குப் பாராட்டுகள். மணவையாரின் அகராதிகளை வெளியிடுவோரே அருள் கூர்ந்து அவ்வாறே வெளியிடாமல் தக்க சொல்லாக்கங்களுடன் வெளியிடுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 2:41:00 AM

கலைஞர் காப்பீடுத் திட்டம் எனப்து பல்வேறு விதிமுறைகளை உள்ளே அடக்கி வெளியே பகடாகத் தோன்றும் ஒரு ஜோடிப்புத் திட்டாம் என்பது கலைஞருக்குத் தெரிந்திருக்கிறது. எனவே தான் தனது திட்டத்தின் கீழ் முச்தபாவைக் கொண்டு வந்து தர்ப சங்கடப் படுத்த விரும்பவில்லை போலும்!

By கேபா
4/1/2010 1:09:00 AM

கலைஞரின் தமிழ்பணி உதவிக்குப் பாராட்டுகள்.அரசு இன்னும் அவருக்கு வேண்டிய மருத்துவ வுதவி செய்ய முன்வர வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் எழுத்தாளர் மணவை முஸ்தபா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும்,நிறைந்த ஆரோக்கியத்தையும்,நல்ல வுடல் நலத்தை வழங்கி தமிழுக்கு மென்மேலும் பல சேவைகளை புரிந்திட நல்லருள் புரியவேண்டும் என பிரார்திக்கிறேன்.

By Ibnusalih.Abudahbi,uae.
3/31/2010 11:18:00 PM

கலைஞர் வாழ்க!

By மு.இளங்கோவன், புதுச்சேரி
3/31/2010 10:03:00 PM

a good scholar of our time should be well patroned by the government on the ocassion world tamil chemozhi conference.

By r.shankar
3/31/2010 8:31:00 PM

Mr.Ameerdeen, could you provide his contact tel.no or any contacts , if possible?

By hameed, abu dhabi
3/31/2010 7:11:00 PM

manavai musthafa avarkaLukku bana vasathi ullavarkal yaaraavadhu uthavinaal enna ava maarrkkaththukkaaka niraiya buththakangkal ezuthiyirukkiraar

By AMEERUDEEN
3/31/2010 5:52:00 PM

why don't you cover his medical treatment under Kalaigan Insurance scheme. Such famous writer begs to the Government for help, and the government is paying for his books instead of caring him freely.

By ARUL
3/31/2010 5:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 25 மார்ச், 2010

முதல்வருக்கு எழுத்தாளரின் மனைவி நன்றி



சென்னை,​​ மார்ச்24: முதல்வர் கருணாநிதிக்கு எழுத்தாளர் ராமசாமியின் மனைவி ராஜம் ராமசாமி நன்றி கூறியுள்ளார்.'எழுத்தாளர் ப.ராமசாமியின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும்' என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இதற்காக,​​ முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து எழுத்தாளர் ராமசாமியின் மனைவி ராஜம் ராமசாமி கடிதம் எழுதியுள்ளார்.அதில்,​​ நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதன் மூலம் தங்களது குடும்பத்தின் ஏழ்மையும்,​​ வறுமையும் துடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இவர் சார்பாகவும் பிற நாட்டுடைமையாக்க்ப்பட்ட நூல்களின் அறிஞர்கள் சார்பாகவும் நாமும் மாண்புமிகு முதல்வருக்கு நன்றி கூறுவோம். தொடர்க தமிழ்ப்பணி! தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை தருக! தொண்டு சிறக்க! எனவும் வாழ்த்துவோம்.

பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 20 மார்ச், 2010

22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை: தமிழக அரசு



சென்னை, மார்ச் 19: ""தமிழகத்தில் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2010-2011-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற பின், 87 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இதற்காக, அவர்களின் மரபு உரிமையர்க்கு ரூ.5.7 கோடி பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவுள்ளன. பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், பேராசிரியர் அ.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் எஸ்.எம்.கமால், ப.ராமசாமி, பேராசிரியர் ர.சீனிவாசன், வ.சு.செங்கல்வராய பிள்ளை, கவிஞர் வெள்ளியங்காட்டான், நெ.து.சுந்தரவடிவேலு, டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், மயிலை சிவமுத்து, காழி சிவ.கண்ணுசாமி பிள்ளை, கே.பி.நீலமணி, கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன், அ.திருமலைமுத்துசாமி, நவ்ராஜ் செல்லையா, திருகூடசுந்தரம், பேராசிரியர் சுந்தர சண்முகனார், தஞ்சை ராமையாதாஸ், கவிஞர் தாராபாரதி, அருதனக்குட்டி அடிகளார், சரோஜா ராமமூர்த்தி, அ.சீனிவாசன் ஆகியோரின் படைப்புகள் என மொத்தம் 22 சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
கருத்துக்கள்

பாராட்டுகள். இருப்பினும் இதுவரை நாடடுடைமையாக்கப்பட்ட நூல்களை அரசே குறைந்த விலைக்குக் கிடைக்கும் வகையில் அச்சிட்டுப் பரப்பினால் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்