corrupted cong. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
corrupted cong. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மே, 2011

corrupted persons will be punished - sonia: ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா

ஒருவன், தான் குடிக்க மாட்டேன், கொள்ளை அடிக்க மாட்டேன், கொலை செய்ய மாட்டேன், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட மாட்டேன் என்றெல்லாம் சொல்லி விட்டு ஒரே ஒரு  கெட்ட பழக்கம்  மட்டும்தான் உண்டு என்றானாம்.  இவவ்ளவு நல்ல பழக்கங்கள் இருக்கும் பொழுது ஒரே ஒரு கெட்ட பழக்கம்தானே இருக்கிறது. என்று நினைத்தால் அந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் என்பது பொய பேசுவதுதான். அதைப்போல் சோனியா பேச்சு நன்றாகத்தான் உள்ளது.  ஆனால், பொய்மையே தொழில் என்றான பின்பு சொல்லுக்கும் செயலுக்குமான வேறுபாட்டை உடையவர்கள் குறித்து மக்கள் புரிந்து  கொண்டுள்ளார்கள் என்பதை அவர் புரிந்து  கொள்ள வில்லையே!  ஒருவேளை கலைஞரை மிரட்டுவதற்காக  உத்தம வேடம் போடுகிறாரா? காங்கிரசு என்றாலே ஊழல்! ஊழல் என்றாலே காங்கிரசு! அனைவரும் அறிந்த உண்மை என்பதை அவர் அறியட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா
First Published : 22 May 2011 09:25:57 PM IST

புதுதில்லி, மே 22: ஊழல் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார் சோனியா. இன்று மாலை, ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில், ''ஐமுகூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேரும்போது, சோனியா இதைத் தெரிவித்தார்.ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர்.மேலும், * நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள்...* பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின..* மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐமுகூ அரசு முன்னுரிமை அளிக்கிறது- என்று ஐமுகூட்டணித் தலைவர் சோனியா பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், * ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது...* உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது...* பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம்- என்று கருத்து தெரிவித்தார்.
கருத்துகள்

போபர்ஸ் பற்றிய செய்திகளில் ஊழல் இல்லையா?
By நாடோடி
5/22/2011 10:51:00 PM
We appreciate your statement that corrupt people will be punished. Let me ask one open question to central Goverment. The question is when Karunanithi camped in New Delhi and fought tooth and nail to get specific rich portfolios like rich Telecommunication and Shipping, his intention was obvious ie to corrupt: Not because he had great scholars or experts in these two portfolios to serve the country. His intention was to serve the country why he would not accept other portfolios? Since he is having 18 MPs, he threatened and got those portfolios. Why, knowing very well his intention, you people assigned these two to them? By giving these two portfolios to DMK, knowingly or unknowingly you were part of this scam? That is why Tamil Nadu people punished your party also. In future, if any of the coalition partners demand specific portfolios, give them and ask your intelligence people to tap their teleconversation and reserve one room in Tihal jail. Only then people will say that you are gen
By rajcey
5/22/2011 10:43:00 PM
டேய் காமெடியன்களா, தமிழ் நாட்டுல இப்பதான் ஒரு காமெடியன் காணாம போயிட்டான், கொஞ்சம் டெல்லியிலர்ந்து இங்க வாங்களேன். நிறைய படத்துக்கு காமெடிக்கு ஆள் கிடைக்கலியாம். அசப்புல, சோனியாவ பார்த்தா கோவை சரளா மாதிரியே இருக்குதுபா... யோவ், மண்ணு மோகன்னு, காமெடி ரோல்னதும் டர் ஆயிட்டியா ? நீ ஆக்டிங் குடுக்காம, சும்மா கேன மாதிரி சிரிச்சிகினே இருந்தா போதும், டக்கரா வந்துருவ, வடிவேலுவ கூட கெலிச்சிருவ... தெர்தா ?
By பாமரன்
5/22/2011 10:11:00 PM
சோனியா காந்தி அவர்களின் பேச்சு, எங்கேயோ இடிக்கிறதே.
By பி.டி.முருகன் திருச்சி
5/22/2011 9:57:00 PM
eppadiyo timuka vai undu ellai endru seithuvivarkal, kalaijar eni thiruvodu edoka vediyathu than baki
By S Venkataswamy
5/22/2011 9:48:00 PM
அய்யா .. கலைஞரே .. அவங்க பேச்சே சரியில்லையே .. டெல்லிக்கு போயி பிரயோஜனம் இருக்க போவது மாதிரி தெரியலையே.. எதுக்கும் ஒருதடவை யோசிங்க..போவனும்மான்னு ..
By rishi
5/22/2011 9:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவர்:
மன்மோகன் சிங், சோனியா காந்தி உறுதி
First Published : 23 May 2011 02:40:33 AM IST

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கள் ஆட்சி தொடர்பான அறிக்கையை வெளியிடும் பிரதமர
புது தில்லி, மே 22: ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தெரிவித்தனர்.  ÷ஊழலை ஒழிக்க வேண்டுமென மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.  ÷மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ÷இதில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகிய இருவரின் பேச்சும் ஊழல் ஒழிப்பை மையமாக வைத்தே இருந்தது. மத்திய அரசு மீது சமீப காலமாக அடுக்கடுக்காக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் அவர்களது பேச்சு அமைந்திருந்தது.  ÷"ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது வெறும் வாய் வார்த்தையாக இருக்காது என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன். எதிர்காலத்தில் எவரும் எவ்வித குற்றச்சாட்டும் கூற முடியாத அளவுக்கு அரசு சிறப்பாக செயல்படும்' என்றார் சோனியா காந்தி. "மத்திய அரசு தவறுகளைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள். முன்பு எழுந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அரசு மீது இனி எழாது. அரசு நிர்வாகம் சிறப்பானதாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும் இருக்கும்' என்று மன்மோகன் சிங் பேசினார்.  ÷இப்போதைய பொருளாதார சூழ்நிலை, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, கல்வி, அண்டை நாடுகளுடனான உறவு, உள்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ரயில்வே, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


செவ்வாய், 16 நவம்பர், 2010

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை:இராகுல்

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை: ராகுல்

அமேதி நவ. 15: ஊழலுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். ஊழல் விஷயத்தில் அரசு கடுமையாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலை ஒழிப்பது மிக முக்கியமான விஷயம். இதில் கடுமையாகவும் கவனமாகவும் அரசு செயல்படும் என்றார் அவர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராகுல் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசினார். 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் இவ்வாறு பதிலளித்தார்.உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் மாநில அரசு நிறைவேற்றவில்லை. அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது.  சாலைகள் மிக மோசமாக உள்ளன என்றார் அவர்.
கருத்துகள்

கட்சிநலன் கருதி. இராகுல் துணிவான நடவடிக்கை எடுக்கிறார்; மாறுபட்ட சிந்தனையுடன் பேசுகிறார். ஆனால், ஊழலின் உறைவிடமான காங்.கில் இருந்து கொண்டு ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் பெரிதும் நகைச்சுவையாக உள்ளது. பெரிய தலைகளைத் தப்ப விடுவதற்காகச் சிறிய தலைகளை உருட்டி விடுவதைக் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறுவதும் வேடிக்கைதான். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 5:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 13 நவம்பர், 2010

தலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்?

லையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்?


ஏழு ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம் நான்கு முதல்வர்களைச் சந்தித்துவிட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இந்த நான்கு முதல்வர்களுமே மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் அல்ல என்பதுடன், குறிப்பிடும்படியான நிர்வாகத் திறமையோ, அரசியல் பின்னணியோ இல்லாதவர்களும்கூட.ஒரு மிகப்பெரிய புயலுக்குப் பின்னே ஊழல் குற்றச்சாட்டுகளால் சரிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் நன்மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ராணுவத்தினரின் மத்தியிலும் அரசியல்வாதிகள் பெயரில் ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்தைத்  தணிக்கவும், காங்கிரஸ் தலைமை கையாண்டிருக்கும் உத்திதான், பிருத்விராஜ் சவாண் என்கிற மாற்று ஏற்பாடு. துணிந்து அசோக் சவாணை மாற்றியதற்குக் காங்கிரஸ் தலைமையைப் பாராட்டும் அதேநேரத்தில், சட்டப் பேரவைக் கட்சியின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்தாமல் இருப்பதற்குக் கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது.288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 82 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 62 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். 82 காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவர்கூட நேர்மையான நல்லாட்சி தரமுடியாது என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாலோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவரைவிடக் கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்கிற காங்கிரஸ் கட்சியின் எழுப்பப்படாத சட்டத்தின் காரணமாகவோ, பிருத்விராஜ் சவாண் மகாராஷ்டிர மாநிலத்தின் 22-வது முதல்வராகத் தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பிருத்விராஜ் சவாணுக்குப் பெரிய அரசியல் பின்னணிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கராட் நகரம் தட்சிண காசி என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் அரசாண்ட பகுதி என்று கருதப்படும் கராட், இஸ்லாமியர்களுக்கும் ஒரு புனித நகரம். இந்த கராட் தொகுதி இப்போது மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு முதல்வரையும் வழங்கிப் பெருமை பெறுகிறது.பிருத்விராஜ் சவாணின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது 1991-ல்தான். ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியிலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் படித்துத் தேர்ந்த பிருத்விராஜ் சவாண், விமானத்துக்கான உறுப்புகள் தயாரிப்பது மற்றும் ராணுவத்துக்கான நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒலிபரப்பு சாதனங்களைத் தயாரிப்பது போன்ற நிறுவனங்களில் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ராஜீவ் காந்தியின் நண்பர் சாம் பித்ரோடாவால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு அரசியல் ஞானஸ்நானம் பெற்ற அறிவுஜீவிகளில் ஒருவர் பிருத்விராஜ் சவாண்.பிருத்விராஜ் சவாணும் ஒருவிதத்தில் பார்த்தால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் போல, நிர்வாகத்தில் அக்கறை காட்டுபவராகத் தொடர்பவரே தவிர, அரசியலில் தனது ஆளுமைத் திறனைக் காட்ட நினைப்பவரல்ல. இதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதலே பிரதமரின் நன்மதிப்பைப் பெற்றவராகவே தொடர்கிறார். பிரதமரின் அலுவலகத்தில் இணை அமைச்சராக இருந்த பிருத்விராஜ் சவாணை, பிரதமரின் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அமெரிக்காவில் படித்தவர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தேர்ச்சியுற்றவர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்ததால், பல்வேறு கோஷ்டிகளை அரவணைத்துச் செல்லக்கூடியவர், ராகுல் காந்தியின் பார்வையில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்சியளிப்பவர் போன்றவை பிருத்விராஜ் சவாணின் தனிச் சிறப்புகளாகக் கருதப்பட்டு முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.அசோக் சவாணின் கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 23 அமைச்சர்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர்களும் இருந்தனர். புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிருத்விராஜ் சவாண், தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதில் யார் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வர் பிருத்விராஜ் சவாணுக்குக் கிடையாது. அதைத் துணை முதல்வர் அஜித் பவாரும் அவரது மாமா சரத் பவாரும் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்கள் என்றால், பெருவாரியான காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி இழக்க வேண்டியிருக்குமே, அது சாத்தியம்தானா? ஏற்கெனவே நாராயண் ராணேயில் தொடங்கி, முதல்வர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையால், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைப் பிருத்விராஜ் சவாணால் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், பதவியில் தாக்குப்பிடிக்க முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகள் புதிய முதல்வர் பிரித்விராஜ் சவாணை எதிர்நோக்கும் சவால்களாகக் காத்திருக்கின்றன.ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு முறைகேடுகளுக்காகப் பதவி விலக்கப்பட்டிருக்கிறார் அசோக் சவாண். புதிய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக ஊழலற்றவராக இருப்பார் என்று ராகுல் காந்தியால் உறுதியளிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ஆமாம், மும்பையின் மத்தியப் பகுதியில் அமைந்த வடாலா பகுதியில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பு ஒதுக்கீடு வீடுகளை, வருமானத்தைக் குறைத்துக் காட்டி வாங்கிய ஊழலில் சிக்கியவராயிற்றே பிருத்விராஜ் சவாண் என்றெல்லாம் நாம் இப்போது கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கலாகாது. மக்களே மறந்து விட்டார்கள், கட்சித் தலைமைக்கு ஞாபகமா இருக்கும்!
கருத்துகள்

தன் வசதிக்கேற்ப அடிமையை மாற்றிய காங். ஐ ஆகா, ஒகோ என்று சிலர பாராட்டிக் கொண்டிருக்க தினமணி உண்மைகளை எடுத்துரைத்துள்ளது. பாராட்டுகள். ஊழலுக்கு எப்போதுமே தண்டனை கிடையாது. அதனைத் தெரியும் படிச் செயதால்தான் பதவிப் பறிப்பும் பின்னர்ப் புதிய பதவியும் கிடைக்கும். விலக்கப்பட்டவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவாரோ தெரியவில்லை. இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

வெள்ளி, 5 நவம்பர், 2010

தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!

தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!

இந்தியா முழுவதிலும் எந்தவொரு கூட்டம் என்றாலும்,​​ அது அரசியல் மாநாடாக இருந்தாலும் அல்லது தெருமுனைக் கூட்டம் என்றாலும்கூட,​​ ஊழல் என்கிற சொல் இல்லாமல் நடத்த முடியாது.​ ஆனாலும் ஊழல் என்பதைப் பற்றிப் பேசாமல் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று முன்தீர்மானம் போட்டுக்கொண்டு நடத்தியது போலத்தான் இருந்தது சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம்.இந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியப் பேச்சாளர்கள் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ளவர்களான கட்சித் தலைவி சோனியா காந்தி,​​ பொதுச்செயலர் ராகுல் காந்தி,​​ பிரதமர் மன்மோகன் சிங் மூவருமே சமீபகாலமாக மக்கள் மன்றத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஸ்பெக்ட்ரம்,​​ ஆதர்ஷ்,​​ காமன்வெல்த் போன்ற மகா ஊழல்கள் பற்றியே பேசாமல்,​​ எளிய மக்கள் ​(ஆம்ஆத்மி)​ பற்றியும் ஏழைகளுக்கான நலஉதவித் திட்டங்கள் பற்றியும்தான் பேசினார்கள்.​ ஊழலை ஒரு பிரச்னையாகவே இவர்கள் கருதவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது.​ ​இந்தியாவில் அறிவுஜீவிகள் முதல் டீக்கடையில் அமர்ந்திருக்கும் சாதாரண மக்கள் உள்பட பேசுகிற மூன்று முக்கிய ஊழல்கள்,​​ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்,​​ ஸ்பெக்ட்ரம் ஊழல்,​​ மும்பையில் நடைபெற்றுள்ள வீடுகட்டும் நிறுவனங்களுக்கும் மகாராஷ்டிர அமைச்சர்களுக்கும் தொடர்புடைய நிலஒதுக்கீடு முறைகேடுகள்.​ இந்த மூன்றிலும் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லாமல் இல்லை.​ ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற ஊழலுக்கு முக்கிய காரணம் கல்மாதி என்றாலும் அவர் வெறும் பினாமிதான்.​ இந்த ஊழலின் பணத்தை உறிஞ்சிய வாய்க்கால் வழி காங்கிரஸில்தான் என்பது ஊரறிந்த உண்மை.​ மகாராஷ்டிர மாநில ஊழலிலும்கூட தற்போது அம்மாநில முதலமைச்சர் சவாணுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.​ 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில்,​​ கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர் ஆ.​ ராசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ இதில் காங்கிரஸ் தன்னை கறைபடியாத கையாகக் காட்டிக்கொண்டாலும்,​​ அமைச்சர் ராசா ஒரு பேட்டியின் போது ஆத்திரத்துடன் குறிப்பிட்டதைப் போல,​​ பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்பதில் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.இந்த மூன்று பெரும் ஊழல்களிலும் காங்கிரஸ் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.​ இது யாருடைய தவறு,​​ இதனால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்ன,​​ இதை எப்படிப் போக்குவது,​​ கூட்டணிக் கட்சிகளால் தாங்கள் சுமக்க நேரும் சிலுவைகள் உண்டென்றால் அதற்குத் தீர்வு என்ன,​​ இதற்காக ஆட்சியை இழக்கவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதைச் செயற்குழுவில் பேசி,​​ கொள்கை முடிவுகள் காணப்பட்டிருக்க வேண்டும்.​ ​ஆனால்,​​ இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் யாருமே இதைப் பற்றியெல்லாம் ​ பேசவில்லை.​ இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது.​ அவர் சொல்லியிருக்கிறார் -​ காங்கிரஸ் என்பது வெறும் சாதாரணக் கட்சி அல்ல.​ காங்கிரஸ் கட்சிதான் நவீன இந்தியாவை உருவாக்கியது.​ காங்கிரஸ் போன்ற சிறந்த கட்சி இந்தியாவுக்குத் தேவையாக இருக்கிறது.​ காங்கிரஸ் எந்த அளவுக்கு வலிமை பெறுகிறதோ அந்த அளவுக்கு தேசம் வலிமை பெறும்.வலிமை என்று எதைச் சொல்கிறார் மன்மோகன் சிங்?​ ஊழலால் கிடைக்கும் பண பலத்தையா?​ புரியவில்லை.​ எல்லாம்வல்ல இறைவனைப்போல அங்கிங்கெனாதபடி இந்தியா முழுவதும் எங்கும் வியாபித்து நிற்பது ஊழல் மட்டும்தான் என்பது உலகறிந்த உண்மை.​ மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி,​​ 1985-ம் ஆண்டு மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்,​​ அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் வெறும் 15 பைசாதான் பயனாளியைச் சென்றடைகிறது என்று வருத்தப்பட்டுப் பேசியது,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கும்,​​ ராகுல் காந்திக்கும் தெரியாவிட்டாலும்,​​ உடனிருந்த சோனியா காந்திக்கும்,​​ மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியாமல் இருந்திருக்காது.​ இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இந்த 15 பைசாவை 16 பைசாவாகவாவது உயர்த்த முடிந்திருக்கிறதா என்பதையாவது பிரதமர் இந்த மாநாட்டின்மூலம் நாட்டுக்குத் தெரிவித்திருக்கலாம்.​ சுதந்திர இந்தியாவில் அதிகமான ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்திருக்கும் கட்சி காங்கிரஸ்தான் என்கிற முறையில்,​​ உலகத்திலேயே மிக அதிகமான ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டிருப்பதற்குக் காங்கிரஸ் பொறுப்பேற்காமல் இருக்க முடியாது.​ காங்கிரஸ் மாநாட்டில் ஊழலைப்பற்றிப் பேசவே வேண்டாம் என்று நினைத்து ​ செயல்பட்டிருப்பது,​​ பூனை கண்ணை மூடினால் ​ உலகம் இருண்டுவிடும் கதையாக அல்லவா இருக்கிறது?​ ​ ​நரகாசுரனை கொன்றழித்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது.​ இந்தியாவின் இன்றைய நரகாசுரன்-​ ஊழல்தான் என்று யாராவது பிரதமரிடமும்,​​ சோனியா காந்தியிடமும் ராகுல் காந்தியிடமும் சொன்னால் தேவலாம்.​ முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்திருக்கிறார்கள்.​ வாழ்க சோனியா காந்தியின் காங்கிரஸ்!
கருத்துகள்

தினமணியின் எதிர்பார்ப்பு தவறானது. ஊழலில் திளைப்பவர்கள் எவ்வாறு அவற்றை வெளிப்படையாகப் பேசுவார்கள் எனத் தினமணி எதிர்பார்க்கிறது? காங். எதிர்க்கட்சியாக இருந்தால் அப்பொழுது பிறரின் ஊழல்கள் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். கூட்டுக் கொள்ளைக்காரர்கள் தங்கள் பங்கைக் குறித்துத் தனியாகத்தான் பேசிக் கொள்வார்கள்.ஊரறிய மேடை போட்டுப் பேச மாட்டார்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:52:00 AM
பேஷ் பேஷ். நன்னா சொன்னேள் போங்கோ !!! வாயிலே தீபாவளி இனிப்பு போடணும்.
By kuppanna
11/5/2010 3:50:00 AM
ஓய் தினமணியாரே!!! என்ன மொத்த இந்தியாவையே முழுங்கிட்டமாதிரி பேசுரீரு,அந்தக்காலமும் வரும் , முழுங்குவானுங்க மொத்த இந்தியாவையும்,அப்போது ஓட்டு போட்ட மக்கள் திருவோடு தூக்கிட்டு அலையும் நாளும் ,இந்த அரசியல் நாதாரிகள் சுவிஸ்வங்கி பணத்துடன் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியயவிலோ கனடாவிலோ செட்டில் ஆவார்கள்,அப்போதுதான் நம்மக்களும் உணருவார்கள் ,அதுவரர தலையங்கம் எழுதாமல் இருய்யா. பயமாவது இல்லாமல் இருக்கலாம்.
By ஏழை
11/5/2010 3:47:00 AM
All the responsibale newspapers , the opposition parties, must bring this to the common man
By Narayanan
11/5/2010 3:44:00 AM
ஐயா தினமணியாரே, மன்மோஹன் சிங் சொல்வதை கேட்டு சிரிக்கவேண்டிய அவசியம் இல்லை,ஏனெனில் அவர் தலை சிறந்த காமெடியனாக மாறி நாள் பல ஆகிவிட்டது,வடிவேலுவையும்,விவேக்ககயும்,ஏன் நாகேஷையும் கூட விஞ்சும் அபார ஆற்றல் அவருக்குதான் உண்டு,என்ன பண்ண? நம் இந்தியாவின் தலையெழுத்து இப்படிஆகிவிட்டது,
By குசும்பன்
11/5/2010 3:37:00 AM
காங்கிரஸ் கட்சிதான் ஊழலுக்கு முன்னோடி. நேருவின் காலத்திலிருந்தே ஊழல் தொடங்கிவிட்டது. ஆ. ​ ராசா மட்டுமே குற்றவாளி என்றால் மேன்மோகன் சிங் எப்போதே அவனை நீக்கியிருக்க முடியும். அனால் அவ்வாறு செய்யாதது இதில் பெரியதலைகள் சம்பந்தப்படிருப்பதை காட்டுகிறது. ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணம் தேர்தல் செலவுகளுக்கும் சுவிஸ் வங்கிகணக்குகளுக்கும்தான் போய்ச்சேருகிறது. ஏழை மக்களின் பணம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதற்கு ஒரு வரம்பே கிடையாது. இந்தியா சூப்பர்பவர் ஆகப்போவது ஊழலில்தான்.
By சிவா
11/5/2010 1:34:00 AM
ஊழலில் கரைந்து போனதை காங்கிரஸ் கமிட்டி விவாதிக்க மறந்தது மக்களை ஏமாற்றத்தான்! இது ராகுலுக்கான எதிர்கால வாய்ப்பை கெடுக்கும் என்பது நிச்சயம்.
By ஆரிசன்
11/5/2010 1:08:00 AM
இந்தியாவின் சாபக்கட்டலை காங்கிரஷ் கட்சி.. நாட்டு நலனில் அக்கரை இல்லாத திமுக,காங்கிரஷ் ஆலுவது இந்திய மக்கலின் தலை எழுத்து. இனி ஆன்டவன் தான் காப்பாட்ர வென்டும்.
By suresh.s
11/5/2010 12:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

வெள்ளி, 22 அக்டோபர், 2010

திருமாவளவன் ராஜிநாமா செய்ய வேண்டும்: கார்த்தி ப.சிதம்பரம்


சிதம்பரம், அக். 21: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரûஸ விமர்சித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.முன்னாள் எம்பி ப.வள்ளல்பெருமானின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாரப்பத்திரிகை ஒன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்தும், தமிழக முதல்வருக்கு பல ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், இது போல கூறியது என்னாலும், எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.எனவே உடனே அவர் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். 125 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல அவருக்கு தகுதி கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. தமிழகத்தில் கூட்டணி குறித்து சோனியாகாந்திதான் முடிவு செய்வார்.மாநில அரசு திட்டங்கள் அனைத்துக்கும் மத்திய அரசுக்கு பங்கு உண்டு. மத்திய அரசால்   எந்த திட்டங்களையும் மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்த இயலாது. தமிழகத்தில் தற்போது ஜேஎன்என் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதிஉதவியுடன் 600 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளது என்றார்.
கருத்துக்கள்

பாவம்! கோவன் வழியில் அறிக்கைகள் மூலம் தலைவராகலாம் எனக் கருதுகிறார்.திருமாவளவனுக்கு ஆதரவாகக் காங். பரப்புரை மேற்கொள்ள வில்லை. காங். வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் வாக்கு வங்கி உதவியதால் அனைத்துக் காங்.நா.உ.க்களையும் பதவி விலகச் சொல்வாரா? தோல்வி பெற்றதாக ஒப்புக் கொண்ட பின் முடிவை மாற்றி வெற்றி பெற்றதாகக் காட்டிக் கொண்டு அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தன் தந்தையிடம் பதவி விலக வலியுறுத்துவாரா? வைக்கோ வெற்றியைத் தவறான முறையில் பெற்றதாகக் காட்டிப் பதவி ஏற்றுள்ள விருதுநகர் நா.உ.வைப் பதவி விலகச் சொல்வாரா? தமிழகத்திட்டங்கள் போல் மத்திய அரசு நிதியில் காங். ஆளும் பிற மாநிலங்களில் செயல்படுத்த வில்லையே! மத்திய அரசு நிதி தமிழக அரசு முதலான அனைத்து மாநில ஙகளின் நிதிப்பங்களிப்பின் மூலம்தானே உருவாகிறது. மத்திய அரசு திட்டங்கள் யாவும் மாநில அரசின் திட்டங்கள் எனக் கூறுவாரா? ஊழலின் ஊற்றுக்கண்ணும் உறைவிடமும் 
கோட்டையுமான காங். கட்சியில் 
இருந்துகொண்டு ஓயாது பொய் சொன்னாலும் அதன் ஊழல் கறையை மறைக்க முடியாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 4:43:00 AM
HE..HE..HE THIS FELLOW`S FATHER DISOLVED HIS OWN PARTY AND SURRENDERED TO THIS ITALIAN COBBLER WOMAN JUST FOR A TEMPORARY MINISTER POST....HIS DIGNITY IS THIS...BUT HIS HEIR IS CRITISING OTHERS...WHAT A JOKE..AN ITALIAN WOMAN DECIDE THE FATE OF A 125 YEARS PARTY..NOT A SINGLE POVERTY INDIAN IS NOT QUALIFIED THIS POST....DEMOCK-CRAZY INDIAN STYLE..SORRY ISDYLE(INGLSIH)
By KOOPU
10/22/2010 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *