வாழ்க வாழ்க வாழ்கவே…
நாமும் வாழ்த்துவோம்! நீடு வாழ்க! நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க! தமிழ் மணத்துடன் வாழ்க!செழிப்புடன் வாழ்க! சிறப்புடன் வாழ்க! புகழுடன் வாழ்க! பொலிவுடன் வாழ்க! தமிழ் வாழ வாழ்க! இத்தகைய வாழ்வு வாழ வேண்டிய ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பறித்த கொலைகாரக் காங்கிரசில் இருந்து விலகி வாழ்க! ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த இன்னல்களுக்குக் கழுவாயாகத் தமிழ் ஈழம் அமைய வாழ்க! தமிழர் தாயகம் தனியுரிமையுடன் திகழ வாழ்க! உலகத்தமிழர்கள் உயர்ந்தோங்க வாழ்க! தமிழ்நாட்டில் தமிழும் தமிழரும் தலைமையும் முதன்மையும் பெற வாழ்க! இந்தியக் கூட்டரசிலும் உலக அமைப்புகளிலும் தமிழ் உரிமையும் முதன்மையும் பெற வாழ்க!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இன்று பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களை நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !!! இனி வரும் இனிய நாட்களில் மாற்றாரும் மனம் மகிழ மனித நேயத்துடன் பணி செய்து சிறந்து விளங்கிட வேண்டுகிறேன் !!! @ rajasji
காட்சிக்கு எளியன் கடுஞசொல்லன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்னும் திருக்குறளைப் (384) பின்பற்றினால் அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. தவறாக வழிகாட்டும் ஆரியக் கூட்டததைப் புறந்தள்ளித் தமிழ் நல முடிவுகளை எடுத்தால் நிலையான உயர்வைப் பெறுவார். இவரைத் தவிர வேறு யாரேனும் இவரது கட்சித் தலைமையில் இருந்திருந்தால் காங்.-தி.மு.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்திருக்கும். கடைசி நேரத்திலாவது தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுத்ததால்தான் இந்த அளவாவது வெற்றி காண முடிந்தது. அதற்குப்பின்னர் அதனை மறந்ததால் கட்சி வளர்ச்சி தேக்கநிலையாகி விட்டது. எனவே, இக் குறைகளைக் களைந்து பெருந்தலைவர், பேரறிஞர், கலைஞர் முதலானவர்களிடம் இருந்து மக்களுடனான தொடர்பு முறையைக் கற்றுக் கொண்டு.தான் என்ன இனம் ஆக இருந்தாலும் தமிழின மக்களுக்கான கட்சியின் தலைமையில் உள்ளமையை உணர்ந்து தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை எனக் குரல் கொடுத்து தமிழர்களின் தாயகமாம் தமிழ் ஈழம் அமைய உலக நாடுகளில் குரல் கொடுத்து வெற்றி மாலை யணிந்து 100 ஆண்டு வாழ்வாராக!