தாக்குதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாக்குதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 அக்டோபர், 2013

தேர்தல் தோல்வியால் தமிழர்கள் மீது சிங்களப்படை தாக்குதல்

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது இராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கையர் தகவல்
இராமேசுவரம்: இலங்கையில், தமிழ் தேசிய கூட்டணி வெற்றியால், ஆத்திரமடைந்த சிங்கள ராணுவம், தமிழ் இளைஞர்களை கடத்தி தாக்குவதாக, தனுஷ்கோடி வந்த இலங்கை அகதி தெரிவித்தார்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை ரோந்து கப்பலில் சிக்காமல், இலங்கையை சேர்ந்த மர்ம படகில் வந்த மூவர், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில், இலங்கை தமிழர் ஒருவரை இறக்கி திரும்பினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, வல்வெட்டி துறையை சேர்ந்த, செல்வ கிருஷணன், 39, என்பதும், 1984ல், அகதியாக தமிழகம் வந்து, 2011ல், பாஸ்போர்ட் மூலம், இலங்கை சென்றதும், தற்போது அகதியாக தனுஷ்கோடி வந்ததும் தெரிந்தது.

செல்வகிருஷ்ணன் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த, வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணிக்கு, பிரசாரம் செய்த இளைஞர்களை, ராணுவ சி.ஐ.டி., பிரிவு, இரவோடு இரவாக கடத்திச் சென்று, சில நாள் வைத்து தாக்குகின்றனர். நானும் பிரசாரத்தில் ஈடுபட்டதால், ராணுவ சி.ஐ.டி., பிரிவினர், என்னை தேடி வந்தனர். உயிருக்கு பயந்து, மனைவி, குழந்தைகளை விட்டு, பேசாளை கடற்கரையில் இருந்த மீனவர் படகிற்கு, 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, தனுஷ்கோடி வந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

கென்யா கடை வளாகத் தாக்குதல்: மாமியாரைக் காத்த மருமகள்

கென்யா  கடை வளாகத்  தாக்குதல்: 
மாமியாரை க் காத்த 'தில்' மருமகள் 
 புனே: நைரோபியில் வாழும் மகனையும், மருமகளையும் பார்க்க சென்ற இடத்தில் ஷாப்பிங் மால் தாக்குதலில் இருந்து புனேவில் உள்ள கர்நாடக் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். புனேவில் உள்ள கர்நாடக் உயர் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை விம்லா ராமமூர்த்தி ராவ்(74). அவரது மகன் பரத் நைரோபியில் வேலை பார்க்கிறார். அவரை பார்க்க விம்லா நைரோபி சென்றார். அங்குள்ள வெஸ்ட்கேட் மாலில் வாங்கிய பொருட்களில் சிலவற்றை மாற்ற அவரும், அவரது மருமகள் ஸ்ரீநிதியும் மாலுக்கு கடந்த சனிக்கிழமை மதியம் சென்றனர். அவர்கள் மாலுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அங்கு தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கென்யா ஷாப்பிங் மால் தாக்குதல்: மாமியாரை காத்த 'தில்' மருமகள் இந்த சம்பவம் குறித்து விம்லா கூறுகையில், நானும், எனது மருமகள் ஸ்ரீநிதியும் மாலில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து கஸ்டமர் கேர் சென்டரில் நின்று கொண்டிருந்தோம். கடையின் வாசலுக்கு அருகே நின்று கொண்டிருந்தோம். ஸ்ரீநிதி பொருளை திருப்பிக் கொடுப்பதற்கான விண்ணப்பத்தை நிரப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீர் என்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. ஆனால் அந்த சத்தம் தீபாவளி பட்டாசு வெடித்தது போன்று இருந்தது. சென்டரில் இருந்த ஒருவர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் என்றார். ஆனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் துவங்கினார்கள். நாங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் இடத்திற்கு ஓடினோம். அப்பொழுது நாங்கள் ஓடும் திசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எங்களுடன் ஒரு வயதான தம்பதி, அவர்களின் 2 மகள்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளும் ஓடி வந்தனர். கடவுளே காப்பாத்து என்று அனைவரும் வேண்டிக் கொண்டோம். அப்பொழுது குண்டடிபட்டு தசை வெளியே தொங்கியபடி ஒரு ஊழியர் வந்தார். உடனே ஒரு டிராலியில் அவரை வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வேறு ஒரு டிராலியில் சில பொருட்களை அள்ளிப்போட்டு எங்களுக்கு மறைந்து கொள்ள உதவி செய்தார் ஸ்ரீநிதி. அதற்குள் ஐ.நா மற்றும் போலீஸ் குழுவினர் அங்கு வந்துவிட்டனர். இதற்கிடையே ஸ்ரீநிதி சில பிரிட்ஜுகளை எங்கள் பக்கம் இழுத்து நாங்கள் மறைந்துகொள்ள வழி செய்தார். அனைத்து பக்கங்களில் இருந்தும் துப்பாக்கிச்சூடு சத்தம் வந்து கொண்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் மேனேஜர் வந்து வெளியே செல்ல ஒரு வழி இருக்கிறது என்று கூறினார். அனைவரும் அந்த வழியை நோக்கி ஓடினோம். பயத்தில் என்னால் ஓட முடியவில்லை. எப்படியோ தட்டித் தடுமாறி ஓடினேன். அந்த சமயம் ஒருவர் வந்து வெளியே செல்ல எனக்கு உதவினார். வெளியே வந்ததும் போலீசார் எங்களை ஒரு காரில் ஏற்றி அருகில் வசிக்கும் என் மகனின் நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் மகன் வந்து எங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பலர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். டிவியில் இந்த செய்தியை பார்க்கையில் நாங்கள் தப்பித்து வந்துள்ளோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். Topics: kenya, shopping mall, attack, கென்யா, ஷாப்பிங் மால், தாக்குதல் Story first published: Monday, September 23, 2013, 12:41 [IST] English summary Vimla Ramamurti Rao (74), a pune based former school prinicpal still couldn't believe that she and her daughter-in-law Shrinidhi managed to esscape from the Westgate mall where Al Shabab militants attacked people and took many as hostages.

Read more at: http://tamil.oneindia.in/news/india/nairobi-shootout-former-school-principal-describes-the-horror-183961.html

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தமிழக மீனவர்கள் கைது- இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்: இராமதாசு

சிங்கள இறையாண்மையைக் காப்பதுதான் எங்கள் வேலையே தவிர, இந்திய இறையாண்மை குறித்தோ மனித நேயம் குறித்தோ எங்களுக்குக் கவலை இல்லை.  இப்படிக்கு இந்திய அரசு. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

தமிழக மீனவர்கள் கைது- இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்: இராமதாசு


தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை சிங்களக் கடற்படையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத் தக்கது.
 தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைப் படையின் இந்த நடவடிக்கை திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் ஒன்றாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் இராஜபக்சே, தமிழக மீனவர்களை கைது செய்தால் குறைந்தது மூன்று மாதமாவது சிறையில் அடைத்த பிறகு தான் விடுதலை செய்வோம் என்று எச்சரித்திருந்தார். அதன்பிறகு தான் தமிழக மீனவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுவதும், மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது.
தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் கூட அவர்களை சிங்களப்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேற்று கூட இராமேஸ்வரம் மீனவர்கள்  தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து எப்போது விடுதலை ஆவார்கள் என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது ஒரு புறமிருக்க நேற்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கைப் படையினர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பதற்காக அண்மையில் தில்லி வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிசிடம், இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படி பிரதமர் வலியுறுத்தினார். அதற்கு முன்பு இதே கோரிக்கை இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பிரதமரின் கோரிக்கை மீது இலங்கை இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்காத நிலையில், மேலும் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் இலங்கை நடந்து கொள்வதும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் உலக அரங்கில் இந்தியாவுக்கு உள்ள மதிப்பை குலைத்து விடும். இந்தியாவை இலங்கை சற்றும் மதிக்காத நிலையில், அந்த நாடு நடத்தும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால் அவமானப்படுத்தப்பட்ட விருந்தாளியாகத்தான் கருதப்படுவார்.
எனவே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் 24 மணி நேரத்திற்குள் விடுதலை செய்யும்படி இலங்கை அரசை பிரதமர் எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசின்  இனப்படுகொலைகளையும், போர்க்குற்றங்களையும் கண்டிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம்  இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசி நிதிஉதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- என்று கூறியுள்ளார்.

சனி, 13 ஏப்ரல், 2013

உதயன் அலுவலகத்தில், சிங்களர்கள் தாக்குதல்: வைகோ கண்டனம்

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்தில், சிங்களர்கள் தாக்குதல்: வைகோ கண்டனம்

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் சிங்களர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி, அச்சு இயந்திரங்களை நொறுக்கி தீவைத்து கொளுத்திய செயலுக்கு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இன்று (ஏப்ரல் 13ஆம் தேதி) அதிகாலை  4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கியவர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி, இதே உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த யாழ்ப் பகுதி சிங்கள இராணுவத்தின் ஜெனரல் ஹத்ரு சின்கா கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர் தனிக் கூலிப்படை வைத்து அக்கிரமம் செய்வதாக முன்னாள் இலங்கைப் பிரதமர் இரணில் விக்கிரம சின்கா அண்மையில்தான் குற்றம் சாட்டினார்.
நேற்று இலங்கை நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குற்றம் சாட்டியுள்ளார். உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவண பவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்று நடந்த தாக்குதலை சிங்கள இராணுவத்தினரே செய்துள்ளனர். அண்மையில்தான் கிளிநொச்சியில் உள்ள  உதயன் பத்திரிகை அலுவலகம் சிங்களவர்களால் தாக்கப்பட்டது. அதுவும் இராணுவத்தினரின் வன்முறையாகவே தெரிகிறது. கிளிநொச்சி அலுவலகத்துக்கு இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கேட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுவதும் சிங்கள இராணுவத்தினுடைய கொடுஞ்செயலே ஆகும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால், தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்பதும், சிங்கள இராணுவத்தின் அராஜகம் தமிழ் ஈழத்தில் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவமும் போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டாக வேண்டும். ஐ.நா. மன்றமும், அனைத்துலக நாடுகளும் அந்த நிலைமையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் உள்நாட்டுப் பத்திரிகைகளோ, தொண்டு நிறுவனங்களோ சுதந்திரமாக செயல்படவே முடியாது. மனித உரிமைகள் சிங்களவரால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதை அனைத்துலக சமுதயாம் எண்ணிப் பார்த்து, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தும் சிங்கள அரசின் இக்கொடுமை இன்னும் தொடர்வதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 டிசம்பர், 2012

இராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்

இராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் - லைபேசி உட்பட அனைத்தும் பறிப்பு
ராமேஸ்வரம்:கச்சத்தீவை தாண்டி, மீன்பிடித்த ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி, திசைகாட்டும் கருவி, "மொபைல்' போன்கள் மற்றும் இறால்களை பறித்து சென்றனர். மேலும், வலைகளை வெட்டி கடலுக்குள் மூழ்கடித்தனர்.நேற்று முன்தினம், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, 652 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவை தாண்டி மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு, அன்ட்ரன், டுவிட்டர், சகாயம் ஆகியோரை கயிறு, கம்பால் தாக்கி, படகில் இருந்த, வலைகளை வெட்டி சேதப்படுத்தி, கடலில் மூழ்கடித்தனர். மேலும், அன்ட்ரன், சகாயம் படகிலிருந்த திசைகாட்டும் கருவி (ஜி.பி.எஸ்.,), "மொபைல்' போன்களை பறிமுதல் செய்து, துப்பாக்கியை காட்டி எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
மீனவர்கள் மாரிநம்பு, ஆரோக்கியம் கூறியதாவது: எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே, மீன்பிடித்த எங்களது படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

செய்வதறியாது திகைத்து நின்றபோது, படகிற்குள் ஏறி திசைகாட்டும் கருவி, "மொபைல்' போன்களை பறிமுதல் செய்தனர். இதனால், ஒரு படகிற்கு, 40 ஆயிரம் முதல் நஷ்டம் ஏற்பட்டது, என்றனர்.மண்டபத்தில் பாதிப்பு : இதேபோல் மண்டபம் வடக்கு பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற, மீனவர்கள் ஏராளமானோர் நேற்று கரைதிரும்பினர். கச்சத்தீவை தாண்டிய, இவர்களையும் இலங்கை கடற்படையினர் விட்டுவைக்கவில்லை. மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, படகிற்குள் ஏறி, இறால்களை பறித்துள்ளனர். தடுக்க முயன்ற மீனவர்களை கம்பால் தாக்கியும், வலைகளை, வெட்டி கடலுக்குள் மூழ்கடித்துள்ளனர். இப்பகுதிக்குள் வரக்கூடாது என, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.மீனவர், தர்மபுத்திரன் கூறியதாவது: ""போதிய இறால் வரத்துக்கு உரிய விலை இல்லை'' என, தவித்து வருகிறோம். இந்நிலையில், இலங்கை கடற்படையினர் தாக்குதலால், பிடித்த இறால்களையும் பறிகொடுத்து, "வெறுங்கை'யுடன் திரும்பி வந்தோம்,'' என்றார்.