ஓய்வூதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓய்வூதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஓய்வூதியம் இல்லையேல் உயிர்த்துறப்பு


"ஓய்வூதியம் கொடுங்கள்; இல்லை உயிரை விட அனுமதியுங்கள்!' குடி.தலை வருக்குக் கடிதம்


மும்பை: " எங்களுக்கு மூன்று மாதங்களாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம். வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்குங்கள்; இல்லையெனில், எங்கள் உயிரை போக்கிக் கொள்வதற்கு, அனுமதி கொடுங்கள்' என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 164 பேர், ஜனாதிபதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சிலர், மத்திய அரசின் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை ஆகியோருக்கான, ஓய்வூதியங்களை பெற்று வந்தனர்.மூன்று ஆண்டுகளாக, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; பல்வேறு தரப்பினரை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஓய்வூதியம் கிடைக்காத, 164 பேர், நேற்று, யவத்மாலில் உள்ள, வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த தாசில்தாரிடம், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு எழுதிய, கையொப்பமிட்ட மனுவை அளித்தனர்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:

குடியரசு தினத்தில் தற்கொலை :

மூன்று ஆண்டுகளாக, எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால், பட்டினியில் வாடுகிறோம். எங்களுக்கு, வேறு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. எனவே, வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில், அதற்கு அடுத்த நாள்; அதாவது, குடியரசு தினத்தில், ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, யவத்மால் கலெக்டர், அஸ்வின் முட்கால் கூறியதாவது: சம்பந்தபட்ட பகுதிகளில், போலியான தகவல்களை கொடுத்து, ஓய்வூதியம் பெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து, ஒரு சிலருக்கு, ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அஸ்வின் முட்கால் கூறினார்.

புதன், 6 அக்டோபர், 2010

55 வயதானவர்களுக்கு புதுவையில் ஓய்வூதியம்


புதுச்சேரி,  அக்.  5: புதுச்சேரியில் 55 வயது பூர்த்தியானவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த திட்ட பயனளிப்பு விழாவில் அமைச்சர் மு.கந்தசாமி பேசியது:தற்போது 60 வயதானவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வந்தது. வயதை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 55 வயது அடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு நிதி பற்றாக்குறையால் நலத் திட்ட உதவிகள் வழங்க முடியாமல் நிறுத்தப்பட்டது. தற்போது மொத்தமாக அனைத்து பயனாளிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இனி நலத் திட்ட உதவிகளை உரிய நேரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

புதுச்சேரி அரசிற்குப் பாராட்டுகள். எனினும், இதனை ஓய்வூதியம் என்று சொல்வது பொருந்தாது. நல உதவிகள் என்றே குறிப்பிட்டிருக்கலாம். அல்லது pension என்ற சொல்லையே கையாள வேண்டும் என எண்ணினால் கொடுப்பூதியம் (கொடுவை) என்று சொல்ல வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2010 4:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *