ஆளுநர் இரவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆளுநர் இரவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஜூன், 2025

85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!



(சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 தொடர்ச்சி)

  1. 4.1.2023 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடி வட்டம் ஆதனூரில் இவ்வூரில் பிறந்த  நந்தனார் குருபூசை நிகழ்ச்சி நடந்தது. இங்குதான் ஆளுநர் இரா.ந.இரவி 100 பட்டிலினத்தவருக்குப் பூணூல் அணிவித்துள்ளார். நந்தனாரைத் தீயில் இறக்கி அதன் மூலம் அவர் புனிதமானதாகச் சனாதனவாதிகள் கூறுவதுபோல், பட்டியலின மக்கள் பூணூல் அணிந்ததால் புனிதமானதாகச் சனாதனவாதி ஆளுநர் இரா.ந.இரவி கூறுகிறார். அவரே தன்னைச் சனாதனவாதி என்று கூறுவதால் இவ்வாறு கூறுவது இழித்துரைப்பதாகாது. இதுதான் அனைவரையும் சமமாகக் கருதும் சனாதனம் என்கிறார். பூணூல் அணிவதால் உயர்வடையலாம் எனக் கூறுவதுதான் சனாதனம். பூணூல் அணிவித்ததன் மூலம் பட்டியிலினத்தவரை மோட்சம் அடைய வைத்ததாகவும் சனாதனவாதிகள் கூறுகின்றனராம். இதன் மூலம் பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்கள் என்னும் சனாதனத்தை வலியுறுத்துகிறார் அவர்.

பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

என்னும் பாரதியார் சாதி வெறியில் இவற்றைச் செய்யவில்லை. பிராமணன் மட்டும்தான் பூணூல் போட வேண்டுமா? எல்லாரும் போடலாம் எனக் கூறுவதற்காக உணர்ச்சி வயப்பட்டு செய்த செயல் இது. எனினும் பூணூல் அணிந்தவன் உயர்ந்தவன் என்பது இழிவை உயர்த்தும் சனாதனம் ஆகும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  “பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதருமத்தின் பேதத்தினை ஆளுநர் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார். அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப்படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா? ” என்கிறார்.

அமைச்சர் பொன்முடி, “பட்டம் கொடுக்க வேண்டிய ஆளுநர் பூணூல் அணிவித்து வருகிறார். இதற்கு ஏன் ஆளுநர்” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“நந்தனார், கோயிலுக்குச் சென்றதால்தான் சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் மூடப்பட்டுக் கிடக்கிறது. இன்றும் தெற்கு வாசல் திறக்கப்படாமல் உள்ளது. பூணூல் அணிவிக்கப்பட்ட 100 பழங்குடியினரையும் அந்த வாசல் வழியாக ஆளுநர் உள்ளே அழைத்துச் சென்றிருக்கலாமே” என்கிறார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம். இதன் மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர்களைக் கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

வி.சி.க.வைச்சேர்ந்த  சிந்தனைச் செல்வன், “புராணங்களில் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் செயல்படுத்திக் காட்டுவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? மூவாயிரம் தீட்சிதர்களில் ஒருவரும் தீயில் விழுந்து எழுந்து புனிதமடையவில்லை. நந்தன் மட்டும் நெருப்பில் விழுந்து எழுந்ததால்தான் புனிதமடைகிறார், அவருக்குப் பூணூல் அணிவிக்கப்படுகிறது என்று கூறி, இப்போதும் அதைச் செய்தால் எப்படி ஏற்க முடியும்?” என்கிறார்

“பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா?” என்கிறார் தோழர் மருது.

இவ்வாறு பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவை யாவும் மக்கள் குரலே.

ஆனால், பிராமணர்களை மட்டும் உயர்த்துவதை மறைக்கும் வகையாகப் “பிராமணத்துவம் பிறப்பினால் வருவது அல்ல, ஒழுக்கத்தினால் வருவது.” எனப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இவ்வாறு சொல்வதன் மூலம் பிராமணர்கள் அனைவரும் ஒழுக்கத்தால் உயர்ந்து அந்நிலை அடைந்தார்கள் என்று மாயையையும் உருவாக்குகிறார்கள். எல்லா ஒழுக்கவான்களும் பிராமணர்கள் என்றால் பிற வருணத்தார் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதானே பொருள்.

  • (தொடரும்)

ஞாயிறு, 1 ஜூன், 2025

45. இந்து மதம் எல்லாரையும் அரவணைக்கிறது. – நீதியர் நாகரத்தினா 46. “இந்தியா சனாதனத்தின்படி தான் இயங்குகிறது” – ஆளுநர் இரவி 47. கோயிலுக்குத் தூய்மையாக வரவேண்டும் என்று கூறுவது தவறா? – இவை பொய்யான வாதங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 


  • ஒரு காலத்தில் இந்து மதம் தோன்றாமல் இந்நிலப்பரப்பு தமிழ்த் துணைக்கண்டமாக இருந்தது. அப்பொழுது நிலத்திற்கேற்ற கடவுள் வழிபாடு இருந்தது. இருப்பினும் வேறுபாடு காட்டாமல் ஒள்றுமையாக வாழ்ந்தனர்.  வழி வழியாக இவ்வுணர்வு இருந்தயால்தான் மாணிக்கவாசகர்,

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” .என்றார். (தெள்ளேணம் என்பது கை கொட்டிப் பாடிக்கொண்டே ஆடும் ஆட்டம்) இன்றும் இந்த நிலை தொடர்வதால்தான் இந்து மதத்தில் பலருக்குச் சகிப்புத் தன்மை உள்ளது. அவர்கள் எல்லாக் கடவுளர் கோயில்களுக்கும் செல்கின்றனர். ஆனால் இதில் பிளவை ஏற்படுத்தியதுதான் சனாதனம். அந்தப்பிளவும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனால் ஒற்றுமைக் குலைவு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.

  • அவர் மட்டுமல்லர்; மேலும் இவ்வாறு பலர் சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.

“அவளைத் தொட்டதனால் ஆளுநர்தான் தன் கைகளைப் பினாயில் போட்டுக் கழுவ வேண்டும்.  அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள்.  படிப்பறிவில்லாத கேவலமான பிறவிகள். படிப்பறிவில்லாத கேவலமான பொது அறிவில்லாத பொறுக்கிகளே பெரும்பாலும் ஊடகத்தில் வேலைக்கு வருகிறார்கள்.” – நடிகர் எசுவிசேகர் பகிர்ந்து பரப்பிய செய்தி

இவ்வாறு பெண்களை இழிவு படுத்தும் சனாதனவாதிகள் இருப்பதால் இவ்வாறு கூறுகிறார் போலும். ஆனால், இந்திய அரசியல் யாப்பே சனாதனத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது. எனவேதான் தீண்டாமைக்கு எதிராக அரசு யாப்பு உள்ளது. அதற்கேற்பச் சட்டங்களும் உள்ளன. எனவே, இந்தியா சனாதனத்திற்கு எதிராக இயங்குகிறது என்பதே சரியாகும்.

  • எல்லா இடத்திற்கும் தூய்மையுடன் செல்வதே நன்று. வழிபாட்டிடம் என்றால் கட்டாயத் தூய்மை சரியானதே. ஆனால், ஒரு சாரார் நுழைவதற்கு எக்கருத்தும் தெரிவிக்காமல்,  மற்றொரு சாராரை, அவர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு அல்ல, அவ்வாறு நுழைய இசைவு கேட்பதற்கே அவர்கள் குளித்து விட்டுக் கேட்க வேண்டும் என்பது கொடுமையல்லவா?

கூதிரம்பாக்கத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்டவர்கள், ஊர்க் கோவிலுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் செயேந்திரர் அதற்கு உதவ வேண்டுமென்றும் வேண்டினர். அதற்கு, அவர், குளித்து, சுத்தமாகிவிட்டு கோவிலுக்குள் நுழையும் அனுமதியைக் கோர வேண்டுமெனக் கூறினார். இவர்கள் குளிக்கவில்லை என்பதை இவர் கண்டாரா? கோவில் கட்டுமானத்திற்குத் தங்கள் மூதாதையர்களும் பங்களித்துள்ளனர் என்பதால் கோவிலில் நுழைவதற்குத் தங்கு தடையற்ற உரிமை உடையவர்கள். அவர்களை நீங்கள் குளிக்காதவர்கள், தூய்மையற்றவர்கள் என்பது அவர்களை இழிவுபடுத்துவது அல்லவா? இத்தகைய இழிவு படுத்தும் சனாதனம் நீடிக்கத்தான் வேண்டுமா? சனாதனவாதிகளுக்கு முதன்மை அளிக்கத்தான் வேண்டுமா?

சனி, 31 மே, 2025

42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்

 




(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி)

  • பிராமணர்கள் தங்கள் தெருவில் பிற சாதியினர் குறிப்பாக ஆதித் தமிழர்கள் நுழையத் தடை விதித்திருந்தனரே! இவ்வாறு தடை செய்தவர்கள் இந்து மதத்தின் பெயராலேதான் செய்துள்ளனர்.

பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம்.

1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை, ஆகவே, அவரைக் கொன்றது தவறில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

ஆளுநர், நந்தனார் குருபூசை விழாவில்தான் இவ்வாறு பேசியுள்ளார். நந்தனார் வகுப்பாரைச் சிதம்பரத்தில் கோயில் இராச வீதிகளில்கூட நுழையத் தடை விதித்திருந்தனர். பின்னர் கடவுளே தில்லை வாழ் பிராமணர் கனவில் வந்து நந்தனாரை உள்ள நுழைய விடுமாறு சொல்லியும் தீக்குளித்துத்தான் செல்ல வேண்டுமென்று பிராமணர் தெரிவித்து விட்டனர். பின்னர் கடவுளே இவ்வாறு சொன்னதாகவும் தீக்குளித்து பிராமண வடிவம் பெற்று முப்புரிநூலணிந்து தன்னைக் காண வருமாறும் தில்லை நாதரே சொன்னதாகக் கதை கட்டி விட்டனர். அவ்வாறு தீக்குளிக்கச் செய்து சாகடித்து விட்டனர். பின்னர் அவர் தீக்குளித்துச் சிவந்த உருவம் பெற்று பிராமணராக மாறிக் கருவறைக்கு வழிபடச் சென்றதாகவும் கருவறையில் கடவுளுடன் ஒளி வடிவில் ஐக்கியமாகி விட்டதாகவும் கூறினர். வள்ளலார் இராமலிங்க அடிகளாரையும் தீயூட்டிக் கொன்றுவிட்டு இறைவனுடன் கலந்து விட்டதாகக் கதை கட்டினர். கடவுளை வணங்கவும் பிராமணர்க்கே தகுதி எனவும், எனவேதான் நந்தனாரைக் கடவுள் பிராமணவடிவில் வரச்சொன்னதாகவும் சொல்லிப் பிராமணப் பிறப்பை உயர்த்தினர்.

எனவே, இத்தகைய கொடுங்கேடுகள் இந்துசமயத்தில் இருப்பதை ஒத்துக் கொண்டு இவற்றிற்கு எதிராகப் போராடி அனைவருக்கும் சம உரிமை தரும் சமயமாக அதனை மாற்ற அவர் தொண்டாற்றுவாராக!

  • உயர்வு தாழ்வே சனாதனத்தின் அடிப்படை என்பதை இங்குள்ள பல கருத்துகள் மூலம் விளக்கியுள்ளோம். எனினும் அண்மை நிகழ்வு ஒன்றைச் சொல்வது காலங்காலமாக சனாதனம் நீடித்துள்ளதையும் எனவே அதை விரட்டி யடிப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்  என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றப்  புதிய கட்டடத்தில் செட்டம்பர் 19-22 நாட்களில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. (18.09.அன்று பழைய கட்டடத்தில் நிறைவு அமர்வாக நடைபெற்றது.) இறுதி நாளன்று  தெற்குத் தில்லி உறுப்பினர் இரமேசு பிதுரி உரையாற்றினார். அப்பொழுது சமாசுவாடிக்கட்சியின் உறுப்பினர் குன்வர் தேனிசு அலி குறுக்கிட்டுப் பேச முயன்றார். அவரும் நாடாளுமன்ற உறுப்பினர்தான். எனினும் இசுலாமியராயிற்றே! எனவே, அவர் எப்படிக் குறுக்கே பேசுவது எனச் சினம் கொண்டார். எனவே, “ஏய், நுனித் தோலை நீக்கியவனே, மாமா பயலே,” என்றெல்லாம் மிகக் கடுமையான சொற்களால் வசைபாடினார். அவைத்தலைவர் நிறுத்துமாறு கூறியும் மீண்டும் மீண்டும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வரவேற்புடன் வசை மழை பொழிந்துள்ளார். இதுதான் சனாதனம்.  இவர்களைத் திருத்த ஆளுநர் முயலட்டும். மாறாகச் சனாதனத்தை உயர்வானதாகத் தவறான பரப்புரை மேற் கொள்ள வேண்டா.

  • சனாதனம் பிராமணர்களை உயர்த்தி அவர்களின் நலன்களுக்காக ஓரவஞ்சனைச் செயற்பாட்டுடன் உள்ளமையால் அவரகளுக்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம். இழிவாகக் கருதப்படுகின்ற பிறருக்குத் தேவையில்லை.

தோற்றம் என ஒன்று இருந்தால் அழிவு என ஒன்று இருக்கத்தான் செய்யும். இப்பொழுதே பல இடங்களில் அழிந்து வரும் சனாதனம் விரைவில் முற்றிலுமாக அழியும் என்பதே உண்மை.

வியாழன், 29 மே, 2025

38. சனாதனத் தருமத்தில் தீண்டாமைக்கு இடமில்லை(ஆளுநர் இரவி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்பது அறிவிலித்தனம் 40. சனாதனத்திற்கு ஆதரவாக நாடே கொந்தளிக்கிறது.- பொய்மைகள்



    (சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 – தாெடர்ச்சி)

    • இவ்வாறு சனாதனத்தில்/இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று பலர் பிதற்றி வருகிறார்கள். மனுவில் தீண்டாமை என்னும் சொல் இடம் பெறாதிருக்கலாம். ஆனால் அது கூறும் கருத்துகள் எல்லாம் தீண்டாமைதானே!

    சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம். பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.(மனு 3. 241)

     சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி (மனு 8. 22)

    தொடாதே என்றால் தீண்டாதே என்றுதானே பொருள். இவையெல்லாம் தீண்டாமை இல்லாமல் வேறு என்னவாம்?

    கிமு 300 மற்றும் கிபி 400க்கு இடைப்பட்டவை சாதகக் கதைகள். அவற்றில் தொகுதி 4.391 இல், உயர்சாதிப்பெண்கள் இருவர் தீண்டத்தகாதக் கீழ்ச் சாதிப்பெண்கள் இருவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர்களைப் பார்த்த கண்களைக் கழுவிக் கொண்டார்களாம். பார்வையால் கூடத் தீண்டாக் கொடுமை இந்துமதத்தில் இருந்ததற்கு இதுவே சான்று.

    சிலர் இப்போது தீண்டாமை இல்லை என்பார்கள். தீண்டத்தகாதவர்களுடன் உறவு வைப்பதாகக் கூறித்தானே பல காதலர்கள் கொலை செய்யப்படுகின்றனர். 

    பிராமணப் பெண்கள் பலர் வீட்டில் வீட்டுவேலை பார்க்கும் பணிப்பெண் கொல்லைப்புறம் சென்று பாத்திரங்களைத் துலக்கி விட்டுச் செல்ல வேண்டும். பின்னர் வீட்டு அம்மா அவற்றைக் கழுவி உள்ளே கொண்டு செல்வார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்த பின் இது குறைந்தாலும் பலர், பணிப்பெண்கள் கழுவிய பாத்திரங்களைத் தீட்டு என்று சொல்லி மீண்டும் கழுவித்தான் பயன்படுத்துகின்றனர்.

    (தொடரும்)

    வியாழன், 22 மே, 2025

    மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி -இலக்குவனார் திருவள்ளுவன்



    (சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? –தொடர்ச்சி)

    உழைப்பிலும் உழைப்பிலிருந்து கிடைக்கும் ஊதியத்திலும் பாகுபாடு கற்பித்து இழிவுபடக் கூறும் சனாதனத்தை ஏற்போர் மனித நேயமற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.

    பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்” (மனு 8.413) என்கிறது சனாதனம். பிராமணன் உழைக்கமாட்டானாம் . சூத்திரன் என அவனால் சொல்லப்படும் பிரிவினர் உழைக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வானாம்.

    “ஒருவேளை, சூத்திரன் எனப்படுவோன் தான் உழைத்துப் பெற்ற ஊதியத்தைப் பிராமணனுக்குத் தராவிட்டால் என் செய்வது?  “சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அஃது அவனுடைய எசமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றிச் சம்பாதித்தவனுக்குச் சேராது” (மனு 8.416.) என்கிறது சனாதனம். எனவே,  “பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்” (மனு 8. 417)  என்கிறது சனாதனம். பிராமணன் இருந்துண்டு உண்பானாம்.   சூத்திரன் எனப்படுவோன் உழைத்துண்டு உண்ணக்கூடாதாம். இதுதான் சனாதனம்.

    தான் உழைப்பதிலிருந்து பெறும் ஊதியத்தைக்கூடப் பயன்படுத்த உரிமையில்லை எனப் பிரிவினையையும் தீண்டாமையையும் காட்டும் சனாதனத்தைத்தான்  மெத்த படித்தவர்கள் எனப்படுபவர்களும் உயர்த்திக் கூறுகிறார்கள்.

    வெளிப்படையாகச் சனாதனம் கூறும் பாகுபாட்டை இல்லை என்பவர்களை நாம் எந்த வகையில் சேர்ப்பது?

    இவ்வாறு மிகுதியான பாகுபடுத்தும், இழிவு படுத்தும் கருத்துகளைப் பார்க்கலாம். மேலும் சிலவற்றையும் பார்ப்போம். பின்வரும் சனாதனக் கருத்துகளைப் படிப்பவர்கள் யாரும் அதில் பாகுபாடு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

    நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார். ‘’நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் ஊரிலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (மனு 4 : 61).

    மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (மனு 8 : 21)

    நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (மனு 8 : 22).

    அன்றாடப் பின்பற்றலை மேற்கொள்ளாத பிராமணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது. வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (மனு 8 : 417)

    வருணமற்றவர் – நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர்- என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார். தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (மனு 10 : 47 – 49)

    இவர்கள் வாழும் இடமாக ‘’இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்’’ (மனு 10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

    ‘சண்டாளர்களின்’ இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார். ஊருக்கு வெளியில் சண்டாளனும், சுவபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது. (மனு 10 : 52)

    இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும் (மனு 10 : 52).

    இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார் மனு. ‘’ பிராமணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு’’ (மனு 10 : 62). என்கிறார்.

    (தொடரும்)