திங்கள், 25 மார்ச், 2013

செஞ்சி அருகே கோவிலில் சூரிய ஒளி படும் சிறப்பு




செஞ்சி அருகே கோவிலில் சூரிய ஒளி படும் சிறப்பு


செஞ்சி:செல்லபிராட்டி, லலிதா செல்வாம்பிகை கோவிலில், அம்மன் மீது, சூரியஒளி பாயும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் ஒரே உருவமாய், லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது, ஒவ்வொரு ஆண்டும், தட்சணாயண காலத்தில், மூன்று நாட்களும், உத்ராயண நாட்களில் மூன்று நாட்களும், சூரியஒளி நேரடியாக பாயும்.உத்ராயண காலமான நேற்று, சூரியஒளி, அம்மன் சிலை மீது விழும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது.

காலை, 6:35 மணி முதல், 6:39 மணி வரை, ராஜகோபுர வாசல் வழியாக, சூரியஒளி அம்மன் மீது விழுந்தது.அப்போது, சிறப்பு தீபாராதனை, லலிதா செல்வாம்பிகை காயத்ரி மந்திரம், 1,008 மூலமந்திர ஜெபம், அம்மன் கவச மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன.முன்னதாக, அதிகாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்றும், நாளையும் அம்மன் மீது, சூரியஒளி பாயும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்
.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக