வெள்ளி, 29 மார்ச், 2013

செருமனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...

12 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர், பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் உயரம் தாண்டுதலில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார்.

கடந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் டெலானா 1.74 மீட்டர்தான் தாண்டியிருந்தார்.

செங்கல் சூளையில் வேலை செய்து 70 ரூபாய் தினக்கூலி பெற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் மாரியப்பனின் தாய் சரோஜா. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தனது மகனுக்கு தகுதி இருந்தும் வறுமை தடையாய் இருப்பதை எண்ணி வேதனையில் உழல்கிறார்.

தேசிய அளவிலான போட்டியின் மூலம் தனது திறமையை நிரூபித்த மாணவர் மாரியப்பன், சர்வதேச போட்டிகளிலும் அதனை நிரூபிக்க முனைப்பாக இருக்கிறார்.

அதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கித் தருமானால், மாரியப்பனால் ஃப்ரான்சில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்த வாய்ப்புக்காகவும் உதவிக்காகவும் காத்திருக்கிறார் மாரியப்பன் நம்பிக்கையுடன்.

காணொளி: http://youtu.be/WeC_CN1vNAs

www.puthiyathalaimurai.tv

1 கருத்து:

  1. இந்தத் தோழரின் திறமை பாரட்டப்படவேண்டியது. இவருக்குத் தக்க ஊக்கம் தரவேண்டியது மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்தின் கடமை.

    ஆறு இளங்கோவன்

    பதிலளிநீக்கு