கலவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 மார்ச், 2013

இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராகப் புத்தமதத்தினர் கலவரம்

இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக ப் புத்தமதத்தினர் கலவரம்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் கலவரம்
கொழும்பு, மார்ச் 30-

உலகத்திற்கே அமைதியைப் போதித்த புத்தரின் கோட்பாடுகளைப் பின்பற்றும் புத்த மதத்தினர், தற்போது வன்முறையில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். மியான்மரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில், வியாழன் அன்று இரவு, இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அருகே உள்ள பெப்பிலியானா என்ற இடத்தில், முஸ்லிம் ஒருவரின் கடை அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

பொது பால சேனா என்ற புத்தப்படைப் பிரிவினர், முஸ்லிம் மக்கள் ஹலால் என்ற முத்திரையை உணவுப்பொருட்களின் மீது பயன்படுத்துவதைத் தடைசெய்யக் கோரி வந்தனர். 20 மில்லியன் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்தினரே முஸ்லிம் என்பதால் மற்றவர்களை இது அவமதிப்பதாகும் என்பது இப்பிரிவினரின் கருத்தாகும்.

எனவே, இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனால், ஞானசேகரா என்ற இப்பிரிவின் தலைவர் இதனை மறுத்துள்ளார்.முஸ்லிம்களின் தீவிரப்பற்றினைத்தாம் தாங்கள் எதிர்ப்பதாகவும், மக்களை அல்ல என்றும் தெரிவித்தார்.

இது எதேச்சையாக நடந்த ஒரு விஷயம் என்றும், மற்றொரு இனக்கலவரத்தைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.  இலங்கையின் காவல்துறையினரும், சிறப்புப் படைப்பிரிவினரும் நிலைமையைக்கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்

சனி, 10 நவம்பர், 2012

இலங்கைச் சிறைக் கலவரம்: 15 பேர் பலி


இலங்கை ச் சிறை க் கலவரம்: 15 பேர் பலி ;
 மதில் சுவர் ஏறி பலர் தப்பி ஓடினர் 

கொழும்பு: இலங்கை வெலிக்கடை சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமுற்றனர். கடும் குற்றம் புரிந்த குற்றவாளிகள் வெலிக்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போர்க்காலத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 50 பேர் வரை இந்த சிறையில் உள்ளனர். இங்கு சோதனை நடத்துவதற்காக அதிரடிப்படையினர் வந்தபோது எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். இதனையடுத்து போலீசார் கண்ணீர்புகை மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கைதிகள் 15 பேர் பலியாயினர்.

சிறை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்து கைதிகள் தாக்குதல் நடத்தினர். பலர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இறந்தவர்கள் அனைவரும் கைதிகளே ஆவர் பாதுகாப்பு போலீசார் ஒரு சிலர் காயமுற்றதாக தெரிகிறது. கைதிகள் கலவரத்தை அடுத்து சிறையை சுற்றிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கலவரத்தை பயன்படுத்தி பல கைதகிள் மதில்சுவர் ஏறி வெளியே தப்பி விட்டதாக கூறப்படுகிறது. பல கைதிகள் சிறை கூடாரத்தின் மதில் மீது ஏறி நின்ற படி இருந்தனர். இந்த கலவரம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகவும் சிறை வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சப்தம் கேட்டபடி இருந்ததாகவும் உள்ளூர் காரர் ஒருவர் தெரிவித்தார். இந்த மோதலில் தமிழ்கைதிகள் யாரும் இறக்கவில்லை