புதன், 11 செப்டம்பர், 2013

மூச்சுக் காற்றால், 86 மெழுகுவர்த்திகளை அணைத்துக் "கின்னசு' அருவினை முயற்சி - பயனுண்டா?



மூச்சு க்காற்றால், 86 மெழுகுவர்த்திகளை அணைத்துக் "கின்னசு'  அருவினை முயற்சி - பயனுண்டா?
இராமநாதபுரம்:ராமநாதபுரத்தில், மூச்சு காற்றால், 86 மெழுகு வர்த்திகளை அணைத்து, "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இளைஞர் சாதனை நிகழ்த்தினார்.

ராமநாதபுரம், வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர், சங்கரநாராயணன், 29. இவர், 2008ல், வாயால் தொடர்ந்து ஊதி, 151 மெழுகுவர்த்திகளை அணைத்து, கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். நேற்று, கின்னஸ் சாதனைக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒரு ஸ்டாண்டில், 153 மெழுகுவர்த்திகளை எரியவிட்டார். பின், மூச்சு காற்றால், 86 மெழுகுவர்த்திகளை அணைத்தார்.இவர் கூறியதாவது: படிக்கும் வயதில் இருந்தே ஏதாவது ஒன்றில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடே இது. இதற்காக, ஐந்து மாதம் மூச்சு பயிற்சி பெற்றேன். இதற்கு முன்னர், தென்கொரிய நாட்டை சேர்ந்த கி சாங் ஹான் என்பவர் 2011ல், மூச்சு காற்றால் 54 மெழுகுவர்த்திகளை அணைத்து கின்னஸ் சாதனை புரிந்தார். இதை முறியடிக்கவே, இந்த முயற்சி, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக