வெள்ளி, 10 மே, 2013

கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க கருணாநிதி வழக்கு

கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்:  உச்ச மன்றத்தில்  கருணாநிதி வழக்கு

 கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு

 தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே, இந்த உடன்படிக்கைகளை செல்லாது என அறிவிப்பதுடன், கச்சத்தீவை இந்தியாவுடன் மீண்டும் இணைக்க உத்தரவிட வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை தடுக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல்களில் பலியான மீனவர்கள் மற்றும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக