வியாழன், 21 மார்ச், 2013

வந்தாரை வாழ வை க்கும் தமிழ்நாடு - நடிகர் மோகன்பாபு

 வந்தாரை வாழ வை க்கும் தமிழ்நாடு - மனம் திறக்கும் நடிகர் மோகன்பாபு
 
I will never advice politics to Rajini says Mohanbabu
 
சென்னையில பேட்டி கொடுக்கிறதால சொல்லவில்லை. நிஜம்மாவே எனக்கு தாய்நாடு தமிழ் நாடுதான். ஒரு மஞ்சள் பையில் இரண்டு செட் டிரஸ்ஸோட திருப்பதியிலேருந்து திருட்டு ரெயிலேறி சென்னைக்கு வந்தவன் நான். பிளாட்பாரத்துல படுத்து, கார்பரேஷன் குழாய் தண்ணி குடிச்சு. வடபழனி முருகன் கோவில் பிரசாதம் சாப்பிட்டு வளர்ந்தவன். சிவாஜிதான் என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தினார். இன்னிக்கு கார், பங்களா, பல கோடிக்கு சொந்தக்காரன். மூணு குழந்தைக்கு அப்பன் இது அத்தனையும் கொடுத்தது தமிழ்நாடுதான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சொல்லுவாங்க. மத்தவங்களுக்கு எப்படியோ என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. ஏர்போட்டுல சென்னை மண்ணுல கால் வைக்கும்போது அம்மா மடியில படுக்குற மாதிரி உணர்வேன். இது மிகையாக சொல்லலீங்க உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக