வியாழன், 27 டிசம்பர், 2012

காக்கைகளிடம் சிக்கிய வெள்ளை நிற ஆந்தை

காக்கைகளிடம் சிக்கிய வெள்ளை நிற ஆந்தை

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் அரிய வகை வெள்ளை நிற ஆந்தை சிக்கியது.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் நேற்று முன்தினம் கல்லாங்குட்டை என்கிற பகுதியில் சென்ற போது அங்கே வெள்ளை கலரில் உள்ள அரியவகை ஆந்தையை காக்கா கூட்டம் சுற்றி கொத்தியது.
இதனைபார்த்த ஜீவானந்தம், அந்த ஆந்தையை காக்கைகளிடம் இருந்து காப்பாற்றினார். பின்னர் ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைக்க தகவல் தெரிவித்தார். பிடிபட்ட ஆந்தையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக