திங்கள், 24 டிசம்பர், 2012

காரைக்காலில் பெரியார் சிலைக்கு மரியாதை

காரைக்காலில் பெரியார் சிலைக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை

பெரியாரின் நினைவுநாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார், காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர் கே.கோவிந்தராஜ், விற்பனைக் குழுத் தலைவர் கே.ஆர்.உதயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செல்வமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக