திங்கள், 11 ஜூன், 2012

ஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ,மணிமுத்து திங்கள், 26 செப்டம்பர் 2011 05:05

ஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ,மணிமுத்து திங்கள், 26 செப்டம்பர் 2011 05:05

K.Ramesh vinnarasuramesh@gmail.com




எங்கள்
இரத்தத்தின் இரத்ததங்களின் மீது
கொத்துக் குண்டுகளை
வீசினார்களாமே..!
என்ன சொல்கிறீர்கள்?
எங்களுக்கென்ன தெரியும்
தலைவனின் பிறந்த நாள்
மட்டைப் பந்துவெற்றி
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்
தீபாவளியன்றுதானே
நாங்கள் வெடிச்சத்தம்
கேட்டிருக்கிறோம்...
எங்களது உடன்பிறந்தாள்களை
வன்புணர்ந்தார்களாமே
ஐயோ,
என்னசொல்கிறீர்கள்
எங்களுக்கென்ன தெரியும்
எங்களது எல்லா கதாநாயகர்களும்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்களே
கயவர்களால் கதறியழும் கன்னியர்களை
எங்கள் இல்லத்தொலைக்காட்சிகளில்
நாங்கள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே...
முலைகள் பிய்த்தெறியப்பட்ட
பிரேதத்தின் அருகில் அமர்ந்து
அழுகிறதாமே பாலுக்கேங்கும் பிள்ளைகள்
என்ன சொல்கிறீர்கள்?
எங்களுக்கென்ன தெரியும்
எங்கள் மண்ணில்
நாங்கள் பதாகைகளுக்கும் பால் வார்ப்போமே...!
வாழ்ந்த மண்ணை விட்டு
சொந்த உறவைத் தொலைத்து
நாடுவிட்டு நாடு செல்கிறார்களாமே!
என்ன சொல்கிறீர்கள்!
எங்கள் வாழ்வின் இலட்சியமே அதுதானே
அதற்காகத்தானே காத்துக் கிடக்கிறோம்
கடவுச் சீட்டு அலுவலகத்தில்...
என்ன சொல்கிறீர்கள்
தமிழ் இ(ஈ)னமானத் தலைவர்களின் ஆட்சியில்
அம்மணமாகவே வாழ்ந்து பழகிய
எங்களுக்கென்ன தெரியும்
ஆடை பற்றி..!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக