வெள்ளி, 7 ஜனவரி, 2011

swine flue in ilangai: இலங்கை செல்பவர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை

பன்றிக் காய்ச்சலுக்குத்தான்அறிவுரை கூறமுடியுமே தவிர உயிர்க் கொலைகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் சிங்கள அரசிற்குத்தான் உதவ முடியும் என்பதையும் மனத்தில் கொள்ளுமாறும்  தெரிவிக்கிறோம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை செல்பவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை



சென்னை, ஜன.6: இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண் உள்ளிட்ட பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை பயணத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.பயணத்தின்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஏஎச்1என்1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இலங்கையில் பயணம்செய்யும்போது பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள இலங்கை அரசு மருத்துவமனையை அணுகி நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.இலங்கைக்கு பயணம் செய்யத் தொடங்குவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பு ஏஎச்1என்1 நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவும். இந்த நோய்க்கான தடுப்பு ஊசி சலுகை விலையில் கிண்டி கிங் நிலையத்தில் வழங்கப்படுகிறது.இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக