சனி, 15 ஜனவரி, 2011

pongal greettings by stalin: (இஃச்)தாலின் பொங்கல் வாழ்த்து

துணை முதல்வரின் முதல்வராகும் கனவு நனவாக வாழ்த்துகள்! ஆனால் அக்கனவு நனவாக உலகத்தமிழர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்! தமிழும் தமிழரும் முதன்மை பெற்றுத் தன்னுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

சென்னை, ஜன.14- துணை முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:எல்லாத் திசைகளிலும் நம்பிக்கை ஒளியைப் பரவச்செய்கிறது புத்தாண்டு சூரியன்.  இது தமிழ்ப் புத்தாண்டு. தமிழர்களின் புத்தாண்டு. திமுக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளுமே சாதனைத் திருநாள்தான். மகிழ்ச்சி பொங்கிய நாட்கள்தான். அவற்றைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள் தமிழக மக்கள்.தமிழ் மகளாம் தை மகளை வரவேற்கும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு நாளில் இல்லங்கள்தோறும் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடவேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர். ஒவ்வொரு இல்லத்திலும் ஒளிப்பூக்கள் பூத்துக் குலுங்கின என்கிற அளவுக்கு மாநிலமெங்கும் ஒளிரட்டும் புத்தாண்டு விளக்குகள். சூரியன் இல்லாமல் பகல் இல்லை, பொழுது  இல்லை, விடியல் இல்லை என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. தமிழர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். சூரியக் கதிர்களின் துணையுடன்தான் புத்தாண்டும் புலர்கிறது. அந்த வெளிச்சம் என்றென்றும் வாழ்வில் நிலைப்பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும்  மாலைவேளையில் இல்லங்கள்தோறும் ஒளிவிளக்குகள் பூத்துக் குலுங்கட்டும். முதல்வரின் வேண்டுகோளை ஆணையாக ஏற்போம். ஆறாவது முறையாகவும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கப்போகும் திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நிறைவேற்றவுள்ள அரிய பல திட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் கட்டியம் கூறும் வகையில் ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும், கூடத்திலும், மாடத்திலும் ஒளிரட்டும் விளக்குகள். அகல் விளக்கு, குழல் விளக்கு, வண்ணவண்ண ஒளி விளக்கு  என வகைவகையான விளக்குகளால் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம். நம்பிக்கை ஒளி பெருகட்டும் !நம் தலைவரின் சாதனைகள் தொடரட்டும் !!இனிய புத்தாண்டு-பொங்கல் நல்வாழ்த்துகள் !!!இவ்வாறு ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

தொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..?ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ... அடுக்கு மொழி அடுப்பில் ஒரு ரூபாய் அரிசியுடன் வார்த்தைஜால வெல்லம் கலந்து இலவச நெய் ஊற்றி `கை`பார்த்து இறக்கினால் தி மு க பொங்கல் கணக்கு கேட்டு கனன்ற அடுப்பில் எம் ஜி ஆர் பானை ஏற்றி அம்மா களைந்த அரிசியுடன் அதிரடி வெல்லம் கொட்டி கொஞ்சம் ஆன்மிக ஜோதிட நெய் கலந்தால் ஆச்சு ...அ தி மு க பொங்கல் கதிர் அறுவாள் கொண்டறுத்த வெண்மணி அரிசியுடன் கைசுத்தி வென்றெடுத்த வியர்வையை வெல்லமாக்கி நெய்யற்று நீரற்று வறண்ட போராட்ட அடுப்பில் எழும் சிவந்த தழல் மேலே பொங்கி பொங்கி எழுந்தால் அது காம்ரேட்களின் கம்யூனிஸ்ட் பொங்கல் நேரு குடும்ப அடுப்பில் காந்தி பெயரிட்ட பானையில் மதசார்பற்ற நெல் குத்தியெடுத்த மைனாரிட்டி அரிசியுடன் கூட்டணி வெல்லம் கொட்டி கோஷ்டி மார்க் நெய் ஊற்ற எமர்ஜென்சி மறந்து பொங்கும் காங்கிரஸ் பொங்கல் அகிம்சை அரிசியுடன் சத்திய சர்க்கரை கலந்து எளிமை நெய் ஊற்றி இறக்கினால் பாவ்ம் யாரும் சாப்பிட விரும்பாத காந்தி பொங்கல்
By வல்லம் தமிழ்
1/14/2011 10:37:00 PM
அரண்மனையில் வசிக்கும் அழகிரி, கனிமொழி, தயாநிதி மற்றும் கருணா குடும்பத்திற்கு திமுக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளுமே சாதனைத் திருநாள்தான்! மகிழ்ச்சி பொங்கிய நாட்கள்தான். அவற்றைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ... ... ... நினைவு கூர்கிறார்கள் தமிழக மக்கள். விலைவாசி உயரவிடாமல், மின்வெட்டு இல்லாமல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், தமிழக உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் அடகு வைக்காமல், ஈழத் தமிழர்களுக்கு சிறுபாதிப்பு கூட நேர விடாமல் தமிழக மக்களின் உழைப்பை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்காது காத்துவருவதால், ஆறாவது முறையாகவும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கப்போகும் திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நிறைவேற்றவுள்ள அரிய பல திட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் கட்டியம் கூறும் வகையில் ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும், கூடத்திலும், மாடத்திலும் ஒளிரட்டும் விளக்குகள். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பங்குபெறாத கட்சிக்காரர்கள் ஒதுங்கிஉள்ளதால் 'முதல்வரின் வேண்டுகோளை ஆணையாக ஏற்போம்' என பொதுமக்களிடம் கூறுகிறார் துணை முதல்வர்!
By பொன்மலை ராஜா
1/14/2011 9:59:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக