செவ்வாய், 15 ஜூன், 2010

தமிழர் மறு குடியமர்வுக்கு ராஜபட்ச உறுதி: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்



சென்னை, ஜூன் 14: இலங்கையில் முகாம்களில் வசிக்கும் 47 ஆயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என அந் நாட்டு அதிபர் ராஜபட்ச தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச 3 நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன்னதாக, இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்தும், அவர்களது மறு குடியமர்வு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடந்த 5-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.இதன் பின்னர், இந்தியாவுக்கு வந்த ராஜபட்சவை தி.மு.க. அணி எம்.பி.க்கள் சந்தித்து மனு அளித்தனர். அதில், முள்வேலி முகாம்களில் வாழும் தமிழர்களை மறு குடியமர்வு செய்வதில் ஏற்படும் தாமதம் கவலை அளிப்பதாகக் கூறியிருந்தனர்.இந்த நிலையில், முதல்வர் எழுதிய கடிதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் உள்ள முகாம்களில் வாழும் தமிழர்களை மறு குடியமர்வு செய்வது தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இலங்கை அதிபர் உடனான விவாதத்தின் போது இந்தப் பிரச்னையை எழுப்பினேன். முகாம்களில் வசிக்கும் 47 ஆயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மறு குடியமர்வு செய்யப்படுவார்கள் என்று என்னிடம் ராஜபட்ச உறுதி அளித்தார்.மேலும், அந்த மக்களை மறு குடியமர்த்தும் வகையில் இந்தியா - இலங்கை கூட்டு முயற்சியாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறு குடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குரிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை வகுத்துத் தருவதிலும் இந்திய அரசு பணியாற்றி வருகிறது.இலங்கையில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரிடையே வேறுபாடுகளை நீக்குவது அவசியம் என்பதை அந்த நாட்டு அதிபரிடம் வலியுறுத்தினேன்.மேலும், இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மையினருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை ராஜபட்சவுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளேன் என்று தனது கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.போர் முடிந்து ஓராண்டாகியும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.அந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் விடுதலைப் புலிகளும் இருக்கக் கூடும் எனக் கூறி மறு குடியமர்வை இலங்கை அரசு தாமதப்படுத்தி வருகிறது.தமிழர் மறு குடியமர்வு தொடர்பாக இலங்கை அரசு முழு மனதுடன் செயல்படவில்லை.இதை இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன.இலங்கை அரசின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலுக்கு சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன.அண்மையில் இந்தியாவுக்கு ராஜபட்ச வந்தபோது, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரிழப்புக்கும், தற்போது அனுபவித்து வரும் துயரத்துக்கும் காரணமான அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கக் கூடாது என தமிழகத்திலும் கண்டனக் குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

பேரின அழிப்பாளர்கள் சந்தித்த பொழுது தமிழர் நலன் குறித்து ஒன்றும்பேசப்படவில்லை என்றே செய்திகள் வந்தன. ஆனாலும் ஏதேதோ பேசியதாகவும் வலியுறுத்தியதாகவும் கூட்டாளி கூறுகிறார். ஆனால், மடல் வந்து சேரும் முன்னே சிங்கள அமைச்சர் தமிழர் நலன் குறித்து ஒன்றும் அழுத்தம் கொடுக்கவில்லை என்கிறார். சிங்களர்கள் வாக்குறுதிகள் காற்றில் கரைவனவே. அத்தகைய வாக்குறுதிகூடக் கொடுக்காத பொழுது கூட்டாளிகள் பேசியிருந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.குறைந்த காலக்கெடு கொடுத்து அதற்குள் தமிழர்களுக்கு உரிய அதிகார வழங்கலும் தமிழ் நிலங்கள் இணைப்பும் நிகழாவிட்டால் தமிழ் ஈழத்தை ஏற்றுக் கொண்டதாகப் பொருள் என இந்தியா அறிவித்தால் ஏதும் நிகழலாம். ஆனால், சிங்களர்களே ஒத்துக் கொண்டாலும் இந்தியம் ஒத்துக் கொள்ளாதே. எனவே, இருக்கின்ற ஒரே வழி உலக மனித நேய உணர்வாளர்களை ஒன்று திரட்டுவதுதான். தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழம் தனியுரிமை பெறும் வரை எல்லா நாடகங்களும் அரங்கேறத்தான் செய்யும்.நாம் வேடிக்கை பார்க்காமல் நம் கடமையை ஆற்றுவோம். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 1:11:00 PM

இலங்கைத்தமிழர் நலன்களை முன்னிட்டு செற்படும் இந்தியப் பிரதமருக்கு நன்றிகள் பல! அமரர் ராஜீவ் காந்தி அவர்களால் இலந்கைத்தமிழர் வரலாற்றில் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியப் பிரதமராக இருந்த அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக இலங்கை வந்து, சிங்களச் சிப்பாயால் தாக்கப்பட்டும், தமிழர் நலன் காக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதிசயமும் நடந்தது. இலங்கைத்தமிழரில் சில நன்றி கெட்டவர்களால் அமரர் ராஜீவ் காந்தியின் உயிர் பறிக்கப்பட்டது. ஆனாலும் இந்திய அரசுகள் தமிழ்மக்கள் மீது தொடாந்தும் அக்கறை காட்டிவருவது பாரட்டத்தக்கது. ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நண்ணயம் செய்து விடல்'

By Ravi
6/15/2010 12:29:00 PM

HE..HE..HE THIS POODLE OF SONIA IS TALING ABOUT LETTER FROM BUTCHER TO WALKING CORPSE CHEAP MINISTER KARUNANIDHI..SAME RAJAPAKSE TOLD SAME STORY TO BUDDHIST BAN-KI-MOON LONG AGO...EVEN SOME PEOPLE WENT TO THEIR OWN HOUSE HAVE FOUND THERE ARE NO HOUSES..NO FOOD AND FACING DAILY HARRASSEMENT FROM SINHALA MILITARY....HE..HE..HE..POVERTY .INDIANS LEADERS ARE GOING TO EAT THEIR OWN SHIT SOON...ALREADY OVER 50,OOO CHINESE ARE IN SRI LANKA SOON THEY WILL TEACH A LESSON TO POVERTY INDIA

By KOOPU
6/15/2010 12:20:00 PM

HE..HE..HE THIS POODLE OF SONIA IS TALING ABOUT LETTER FROM BUTCHER TO WALKING CORPSE CHEAP MINISTER KARUNANIDHI..SAME RAJAPAKSE TOLD SAME STORY TO BUDDHIST BAN-KI-MOON LONG AGO...EVEN SOME PEOPLE WENT TO THEIR OWN HOUSE HAVE FOUND THERE ARE NO HOUSES..NO FOOD AND FACING DAILY HARRASSEMENT FROM SINHALA MILITARY....HE..HE..HE..POVERTY .INDIANS LEADERS ARE GOING TO EAT THEIR OWN SHIT SOON...ALREADY OVER 50,OOO CHINESE ARE IN SRI LANKA SOON THEY WILL TEACH A LESSON TO POVERTY INDIA

By KOOPU
6/15/2010 12:20:00 PM

ALSO TAMIL..DONT BARK WITHOUT KNOWING THE REALITY..HOW THE HELL A GUY LIVE IN A DAMIL NADU SHANTY KNOW THE FACTS....??? SOON YOUR SINHALEASE WILL SAY 50,000 TAMILS DISAPPEARED DURING TSUNAMI.....BETTER SHUT UP AND ENJOY MONEY BEING PAID TO YOU BY SL CONSULATE IN CHENNAI..

By KOOPU
6/15/2010 12:16:00 PM

ALSO TAMIL..DONT BARK WITHOUT KNOWING THE REALITY..HOW THE HELL A GUY LIVE IN A DAMIL NADU SHANTY KNOW THE FACTS....??? SOON YOUR SINHALEASE WILL SAY 50,000 TAMILS DISAPPEARED DURING TSUNAMI.....BETTER SHUT UP AND ENJOY MONEY BEING PAID TO YOU BY SL CONSULATE IN CHENNAI..

By KOOPU
6/15/2010 12:16:00 PM

Sir, In NDTV Interview , Congress spokeswomen Mrs Jeyanthi Natarajan was admitted that there is tamil Genocide in Srilanka . Now , Congress govt giving Red carpet wel come to those butchers . How congress Govt has courage to do that .Every one knows the reasons. It is very painful but true that we tamil nadu tamils are sold our soul for money and lost self respect.

By Mohan
6/15/2010 11:48:00 AM

அப்பா மன்மோகனே!உன்னையும் தெரியும்,உன் அப்பனையும் தெரியும் என உனக்கு விரைவில் செருப்படி கொடுப்பான் இந்த இரசபட்ச!சிங்களவர்கள் எனறைக்கும் தன சொல்லைக் காப்பாற்றியதாக வரலாறே இல்லை!கையெழுத்துப்போட்ட ஒப்பந்தங்களையே கிழித்துப்போட்ட உததமார்கள் இவர்கள்! வழக்கம்போல மன்மோகன் முகத்தில் கரிக்குப்பதில் சாணி பூசப்போகிரர்கள்! மன்மோகன் அவர்களே தயாராக இருங்கள்! வாழ்த்துக்கள்!

By vendhan
6/15/2010 11:31:00 AM

ராஜபக்சே மற்றும் மன்மோகன் சிங் இருவருமே மாபாவிகள். ஒருத்தன் புத்தனை கொண்டு புதைத்தான் , இன்னொருத்தன் பாபா ஜி குருநானக்கை குழித் தோண்டி புதைத்தான். பணத்துக்காக மரணத்தை வியாபாரம் செய்பவர்கள் தான் இருவருமே. தனக்காகவும் சுடுகாட்டில் இடம் உண்டு என்பதை மறந்துப் போனவர்கள். இவர்களின் தலைவி சோனியா காந்தியும் ரோம ராஜ்யத்தின் ரத்தின கம்பளத்தில் நடை பயின்றவர் தான். இவர்கள் மூவருமே அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

By bhagya
6/15/2010 11:21:00 AM

இப்பொது வெளிவருகின்ற பல மனித உரிமை அத்துமீறல்காட்சிகளை முன்பே பலரிடம் ஆதாரமாக இருந்தும் கூட கொஞ்சம் கொஞ்சமாக ளியிடுவதற்கான காரணம்தான் எனக்குத்தெரியவில்லை! இவ்வாறான கோரக்காட்சிகள் புலிகளால் வெளியிடப்பட்ட பிவுகளில் அதே தாக்கங்களுடன் பல வருடங்களாக வெளியிட்டவைகளே என்பதனை தமிழர்களும் புலிகளின் சார்பில் மறந்துவிட்டார்கள். எனவே புலிகளின் முன்னாள் பதிவுகளை எடுத்து பார்க்கும் படி தமிழர்களை வேண்டப்படுகின்றீர்கள். அப்பொதே இவ்வாறான தாக்கங்களை வெளியிட்டு புலிகள் ஏன் இலங்கை அரசிற்கெதிரான வழக்குகளைத் தெடுக்கவில்லை… தீர்வு காணவில்லை??? இவ்வாறான சான்றுகள் வியாபார நோக்கில் தற்போது பரிமாற்றப்பட்டும், தமது டகங்களை பிரபல்யப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு செயல் என்பதனை மக்கள் எப்போது றியப்போகின்றார்கள்.

By Also Tamil
6/15/2010 10:48:00 AM

Why India post is running in losses. they are sending and replying letters or i misunderstand them even they are using emails. India is grown like that???...........I dont think so, Unbelievable. aanaa onnu kaditham podrannu solli indiavila ulla marathhayellaam kaali pannitaathingadaa...............

By ram
6/15/2010 10:33:00 AM

Life of people especially of Tamils have become a joke for this learned PM. His half baked economics has given him this post. Let some body advice him to study a chapter in humanity.

By karunakaran
6/15/2010 10:30:00 AM

Finally you and sonio give indian's money to them to kill the tamil people. You ppl are doing great game and making tamilian as a fool. Especially you, sonia and other great cheatted fellow karunanithi all making tamilian as fool.

By Tamilan
6/15/2010 7:16:00 AM

Priminister is joking to Indian Tamils. (2ம் இணைப்பு) விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கு: நான்கு இராணுவத்தினரை அடையாளம் காட்டியுள்ளனர் [ திங்கட்கிழமை, 14 யூன் 2010, 03:14.08 PM GMT +05:30 ] விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் இவர்களை குறித்த பெண்கள் அடையாளம் காட்டியுள்ளனர். இந்தநிலையில் அடையாளம் காட்டப்பட்ட நான்கு இராணுவ வீரர்களையும் வவுனியா சிறைச்சாலையில் தப்பியோடாதவாறு பாதுகாப்பாக தடுத்து வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் எஸ் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்கள், இருவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு மாங்குளம் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆஜராகியிருந்தார். இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய

By Subas
6/15/2010 4:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக