ஞாயிறு, 13 ஜூன், 2010

நாட்​டுப் புறமா?​ நாட்​டுப் புரமா?



கட் ​டு​ரைத் தலைப்பு,​​ மொழி இலக்​கண அறி​ஞர்​கள் விவா​திக்க வேண்​டிய தலைப்​புப்​போல இருக்​கி​ற​தல்​லவா?​ "நாட்​டுப்​பு​றம்' என்​னும் சொல்​லில் உள்ள வல்​லின றக​ரம் சரியா?​ இடை​யின ரக​ரம்​போட்டு "நாட்​டுப்​பு​ரம்' என்று எழு​த​லாமா?​ சமச்​சீர் கல்​வித் திட்​டத்​தின்​கீழ் வெளி​யி​டப்​பட்​டுள்ள ஆறாம் வகுப்​புத் தமிழ்ப் பாட​நூல்​தான் இவ்​வாறு விவா​திக்க வைத்​துள்​ளது.​ இது​மட்​டு​மன்றி,​​ பாட அமைப்​பு​க​ளும் போக்​கும் கல்​வி​யா​ளர்​க​ளைக் கிள்​ளி​வி​டு​கின்​றன.​ நாட்​டின் எதிர்​கா​லத் தலை​முறை தவற்​றைச் சரி​யெ​னப் புரிந்​து​கொள்​ளக் கூடாதே என்ற அச்​சத்​தை​யும் இப்​பா​ட​நூல் உண்​டாக்​கி​யுள்​ளது.​​ சமச்​சீர்​கல்வி பாடத்​திட்​டத்​தின்​கீழ்,​​ ஒன்று முதல் பத்து வகுப்​பு​க​ளுக்​கான வரை​வுப் ​ பாடத்​திட்​டம் கடந்த ஆண்​டின் இறு​தி​யில் இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​பட்​ட​போது,​​ அதில் காணப்​பட்ட குறை​பா​டு​கள் சுட்​டிக்​காட்​டப்​பட்​டன.​ அவற்​றுள் ஒரு சில கருத்​து​கள் ஏற்​றுக் கொள்​ளப்​பட்ட நிலை​யில் இப்​போது ஆறாம் வகுப்பு,​​ முதல் வகுப்​பு​க​ளுக்​கு​ரிய பாட​நூல்​கள் வெளி​யா​கி​யுள்​ளன.​ அவற்​றுள் தமிழ் தவிர,​​ ஏனைய பாட​நூல்​கள் கருத்​துப் பாடங்​க​ளா​த​லால் அவற்​றின் உள்​ள​டக்​கப் பகு​தி​கள் சில இடங்​க​ளில் கூடு​த​லா​க​வும் குறை​வா​க​வும் உள்​ளன.​ ஆனால் மொழிப் பாடத்​தைப் பொறுத்​த​வரை,​​ ஆறாம் வகுப்​புத் தமிழ்,​​ மலிவு விலை​யில் கூறு​கட்டி விற்​கப்​ப​டும் வாழைப்​ப​ழம்​போல மிக​வும் நைந்த நிலை​யில் உள்​ளது.​ ​​ சமச்​சீர் கல்வி என்​ப​தற்கு,​​ வேறு​வேறு வகை​க​ளாக இருந்த பாடத் திட்​டங்​களை ஒன்​றாக்கி,​​ பொது​வாக அமைக்​கப்​பட்​டது என்​ப​து​தான் பொருள்.​ ஆனால்,​​ ஆறாம் வகுப்​புத் தமிழ்ப் பாட​நூல்,​​ தமி​ழைத் தாய்​மொ​ழி​யா​கக் கொண்​டி​ரா​த​வர்​க​ளுக்​கா​கத் தயா​ரிக்​கப்​பட்ட பால​பா​டம் போலுள்​ளது.​ ஐந்​தாம் வகுப்​பு​வரை தமிழ்​நாட்​டுப் பாட​நூல் நிறு​வ​னம் தந்த தமிழ்ப் பாட​நூல்​க​ளைக் கற்​ற​வர்​க​ளுக்​காக எழு​தப்​ப​டும் பாட​நூல் என்​பதை மன​தில்​கொண்டு எழு​தப்​பட்ட நூலாக இது தெரி​ய​வில்லை.​ இதற்கு முன்​பி​ருந்த தமிழ்ப் பாட​நூல்​களை யாரும் சுமை​யென்றோ கடி​ன​மென்றோ கூற​வில்லை.​ அப்​ப​டி​யி​ருக்க முந்​தைய கலைத்​திட்​டம்,​​ பாடத்​திட்​டம் போன்​ற​வற்​றைச் சிறி​தும் கவ​னத்​தில் கொள்​ளாது,​​ ஆளுக்​கொரு பாடத்​தைத் தயா​ரித்து,​​ கூட்​டாஞ்​சோறு ஆக்​கி​ய​து​போல ஆறாம் வகுப்​புத் தமிழ்ப் பாட​நூல் அமைக்​கப்​பட்​டுள்​ளது.​ உள்​ள​டக்​கப் பகு​தி​க​ளும் அவற்றை விளக்​கி​யுள்ள முறை​யும் இரண்​டாம் வகுப்​புக் குழந்​தை​க​ளுக்​கேற்ற வகை​யில் உள்​ளது.​​ மொழிப்​பாட நூல்​கள் தொன்​மை​யைப் போற்றி,​​ புது​மை​யைப் பேணி,​​ மாண​வர்​களை ஆர்​வத்​து​டன் சிந்​திக்​கத் தூண்​டு​வ​தாக அமைய வேண்​டும்.​ படிக்​க​வும் எழு​த​வும் போதிய பயிற்சி தரக்​கூ​டி​ய​தா​க​வும் இருக்க வேண்​டும்.​ மொழிச் சுவை​யூட்​டும் பல​வ​கைக் கூறு​பா​டு​களை விட்​டு​விட்டு,​​ கூறி​யது கூறல்,​​ ஒரு​ப​டைச் சார்பு,​​ பொரு​ளற்ற கட்​டு​மா​னம் ஆகி​ய​வற்​றைப் பாடநூ​லில் பயன்​ப​டுத்​து​வது கற்​பித்​தலை வீணாக்கி,​​ கற்​றலை வெற்​றி​ட​மாக்​கி​வி​டும்.​ இதைத்​தான் ஆறாம் வகுப்​புப் பாட​நூல் சரி​யா​கச் செய்​துள்​ளது.​​ ஆறாம் வகுப்​புத் தமிழ்ப்​பா​ட​நூல் இயல் 3-இல்,​​ உரை​ந​டைப்​ப​கு​தி​யி​லும் தொடர்ந்து சில இடங்​க​ளி​லும் "நாட்​டுப்​பு​ரம்' என்​னும் சொல் பயன்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது.​ இது "நாட்​டுப்​பு​றம்' எனும் வழக்​கத்​தில் உள்ள சொல்​லுக்கு மாற்​றா​கக் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.​ வல்​லின றக​ரம் பெற்​றுள்ள "நாட்​டுப்​பு​றம்' எனும் சொல்​லாக்​கம் பிழை​யா​னது என்​றும்,​​ இடை​யின ரக​ரம் பயின்ற "நாட்​டுப்​பு​ரம்' என்​பதே சரி​யா​னது என்​றும் பாட​நூல் குழு​வி​னர் எப்​படி முடிவு செய்​தார்​கள் என்று தெரி​ய​வில்லை.​​ தமி​ழ​கப் பல்​க​லைக்​க​ழ​கங்​கள் நாட்​டுப்​புற இயல் எனும் சொல்​லையே பயன்​ப​டுத்​து​கின்​றன.​ அப்​பெ​ய​ரில் தனித்​து​றை​க​ளும் இயங்கி வரு​கின்​றன.​ மதுரை காம​ரா​சர் பல்​க​லைக்​க​ழக நாட்​டுப்​புற இயல் துறைத் தலை​வர் முத்​தையா,​​ நாட்​டார் வழக்​காற்​றி​யல் அறி​ஞர் ஆ.​ சிவ​சுப்​பி​ர​ம​ணி​யன் போன்​றோர் நாட்​டுப்​புற இயல் எனும் சொல் அமைப்​பில் தவ​றே​தும் இல்லை என்​பதை உறுதி செய்​கி​றார்​கள்.​ வல்​லி​னம் அமைந்த சொல்லே சரி​யா​னது என்​கின்​ற​னர்.​​ சென்​னைப் பல்​க​லைக்​க​ழ​கத் தமிழ்ப் பேர​க​ராதி,​​ தஞ்​சா​வூர் தமிழ்ப் பல்​க​லைக்​க​ழ​கம் வெளி​யிட்​டுள்ள அருங்​க​லைச் சொல் அகர முதலி,​​ வின்​சு​லோ​வின் தமிழ் -​ ஆங்​கில அக​ராதி ஆகி​ய​வற்​றி​லும் நாட்​டுப்​புற இயல் என்ற சொல்லே இடம்​பெற்​றுள்​ளது.​ தமிழ்​நாட்​ட​ரசு வெளி​யிட்​டுள்ள,​​ கோவை உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டின் ஆய்​வ​ரங்க மையப் பொருண்​மைத் தலைப்​பு​க​ளின் வரி​சை​யில் நாட்​டுப்​பு​ற​வி​யல் எனும் சொல்லே இடம்​பெற்​றுள்​ளது.​​ சொற்​ப​யன்​பாடு இவ்​வா​றி​ருக்க,​​ பாடநூ​லில் "நாட்​டுப்​பு​ரம்' என்​னும் சொல்​லைத் தந்​த​வர்​கள்,​​ நூலில் அடிக்​கு​றிப்​பாக அதற்​கு​ரிய விளக்​கத்தை ஓரிரு சொற்​றொ​டர்​க​ளில் தந்​தி​ருக்​க​லாம்.​ அதை​யும் செய்​யா​மல் "நாட்​டுப்​பு​றம்' என்​னும் சொல்​லைப் புறந்​தள்​ளி​யதை எவ்​வ​கை​யில் ஒத்​துக்​கொள்​வது?​ அத்​து​டன் பாட​நூல் தயா​ரிப்பு அவ​ச​ரக்​கோ​லத்​தில் அள்​ளித்​தெ​ளித்​தது போலத் தோன்​று​கி​றது.​ நூலில் இடம்​பெற்​றுள்ள எழுத்​துப்​பி​ழை​க​ளும் இலக்​க​ணப் பிழை​க​ளும் இதை வெளிச்​சம் போட்​டுக் காட்​டு​கின்​றன.​​ எட்டு அல​கு​க​ளைக் கொண்ட பாடநூ​லில் மூன்று அல​கு​க​ளில் ​(அலகு -​ 1,​ 5,​ 6) வாழ்க்கை வர​லாற்​றுச் செய்​தி​கள் பாடங்​க​ளா​கத் தரப்​பட்​டுள்​ளன.​ இது அள​வில் அதி​கமே.​​ தமிழ்ப் பாடநூ​லில் நாட்​டுக்கு உழைத்த தலை​வர்​க​ளின் வாழ்க்கை வர​லாறு பாட​மாக வைக்​கப்​ப​டு​வ​துண்டு.​ ஒவ்​வொரு முறை​யும் பாடத்​திட்​டம் மாற்​றப்​ப​டும்​போது,​​ காந்​தி​ய​டி​கள்,​​ காம​ராஜ்,​​ தந்தை பெரி​யார்,​​ அறி​ஞர் அண்ணா,​​ எம்.ஜி.ஆர்.​ போன்​றோ​ருள் ஒரு​வ​ரது வாழ்க்கை வர​லாற்​றுச் செய்தி இப்​ப​கு​தி​யில் இடம்​பெற்​றி​ருக்​கும்.​ ஒரு​வ​ரைப் பற்​றிய பாடமே தொடர்ந்து பாடநூ​லில் இடம்​பெ​று​வ​தில்லை.​ ஆனால்,​​ பசும்​பொன் முத்​து​ராம​லிங்​கத் தேவர் வர​லாறு,​​ ஆறாம் வகுப்​பில் மட்​டுமே தொடர்ச்​சி​யாக மூன்​றா​வது முறை​யா​கப் பாட​மாக வைக்​கப்​பட்​டுள்​ளது.​ 1995,​ 2003-ம் ஆண்டு பாட​நூல்​க​ளைத் தொடர்ந்து இப்​போ​தும் ​(2010) இவ​ரைப் பற்​றிய பாடம் இடம்​பெற்​றுள்​ளது.​ இப்​போது வெளி​வந்​துள்ள பாட​நூல் ஆறு அல்​லது ஏழு ஆண்​டு​க​ளுக்கு நடை​மு​றை​யில் இருப்​பது உறுதி.​ அவ்​வா​றா​யின் இரு​ப​தாண்டு காலத்​தில்,​​ இடை​வெ​ளி​யின்​றித் தொடர்ந்து இரண்டு தலை​மு​றை​க​ளுக்கு ஒரே பாடப்​பொ​ரு​ளைக் கற்​றுக்​கொ​டுப்​பது ஏற்​பு​டை​ய​து​தானா?​ பாட​நூல் ஆசி​ரி​யர்​கள் இதை ஏன் கவ​னத்​தில் கொள்​ளாது புதிய சிக்​கலை உரு​வாக்​கி​யுள்​ள​னர் என்​ப​தும் தெரி​ய​வில்லை.​​ இயல் 2,​ செய்​யுள்​ப​கு​தி​யில் "நாய்க்​கால்' எனத் தொடங்​கும் நால​டி​யார் பாடல் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.​ இது வெண்பா இலக்​க​ணத்​தின்​படி அமைந்த பாட​லா​கும்.​ ஈற்​றடி முச்​சீ​ராக முடிந்​தி​ருக்க வேண்​டும்.​ ஆனால்,​​ பாடநூ​லில் அவ்​வா​றின்​றிச் சொற்​கள் தாறு​மா​றாக அச்​சாகி வெண்பா வடி​வ​மும் சிதைந்து காணப்​ப​டு​கி​றது.​​ இயல் -​ 3-இல் "நான்​ம​ணிக்​க​டிகை' நூலி​லி​ருந்து ஒரு பாடல் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.​ "மனைக்கு விளக்​கம் மட​வார்' என்​ப​து​தான் பாடம்.​ ​(நான்​ம​ணிக்​க​டிகை -​ கழக வெளி​யீடு -​ பாடல் எண் 105) ஆனால் பாடநூ​லில் ""மட​வாள்'' என்​னும் சொல் பயின்று வந்​துள்​ளது.​ மட​வாள் என்​பது பிழை​யான சொல் என்​றும் பாரா​மல் மட​வாள் ​ என்​ப​தற்​குப் பெண் என்று பொரு​ளை​யும் கூறு​கி​றது பாட​நூல்.​ பதி​னெண்​கீழ்க்​க​ணக்கு நூல்​க​ளுள் பெரும்​பா​லா​னவை அறக் கருத்​து​க​ளைக் கூறு​பவை.​ அவற்​றுள் நான்​ம​ணிக்​க​டிகை,​​ பழ​மொழி எனும் இரண்டு நூல்​களி​லி​ருந்து இரண்டு பாடல்​கள் நூலில் இடம்​பெற்​றுள்​ளன.​ இவ்​வி​ரண்டு பாடல்​க​ளுமே கல்வி பற்​றிக் கூறும் பாடல்​க​ளாக உள்​ளன.​ இவ்​வாறு கூறி​ய​தையே கூறி புதிய கருத்​திற்​கான வாய்ப்பு வீணாக்​கப்​பட்​டுள்​ளது.​​ கருத்​த​மைந்த திரைப்​ப​டப் பாட​லைப் பாடப்​பொ​ரு​ளாக்​கு​வது நல்ல உத்​தி​தான்.​ அதற்​காக பட்​டுக்​கோட்​டை​யார்,​​ உடு​மலை நாரா​யண கவி ஆகிய இரு​வ​ரின் பாடல்​க​ளும் ஒரே பாடநூ​லில் இடம்​பெ​றச் செய்​தி​ருப்​பது,​​ தேட​லற்ற தன்​மை​யைக் காட்​டு​கி​றது.​​ துணைப்​பா​டம் என்​பது,​​ கதையோ,​​ கட்​டு​ரையோ எது​வா​கி​னும் மாண​வர்​களே படித்​த​றிந்து,​​ அதன் கருத்தை ஒன்​றி​ரண்டு பத்​தி​க​ளில் தொகுத்து எழு​தத் தூண்​டு​வ​தாக அமைய வேண்​டும்.​ இப்​பா​டநூ​லில் உள்ள துணைப்​பா​டப் பகுதி,​​ மாண​வர்​க​ளின் படித்​தல்,​​ எழு​து​தல் திறனை வளர்க்​கக் கூடி​ய​தாக இல்லை.​ இது​வரை இப்​ப​கு​தி​யில் மாண​வர்​களை ஆர்​வத்​தோடு படிக்​கத்​தூண்​டும் சிறு​க​தை​கள் தரப்​பட்​டி​ருந்​தன.​ ஆனால் இப்​போ​துள்ள நூலில் ""வீரச்​சி​று​வன்'' என்​னும் பாடத்​தைத் தவிர மற்​றவை ஆர்​வ​மூட்​டும் பாடப்​ப​கு​தி​க​ளாக இல்லை.​ கொடுக்​கப்​பட்​டுள்ள கதை​க​ளும் ​(இயல் 5,​ 6) சுவை​யற்​றவை;​ பழம் பஞ்​சாங்​கம் என்​ப​து​தான் உண்மை.​​ இலக்​க​ணப் பகு​தி​யில் முதல் எழுத்து,​​ குறில்,​​ நெடில் என்​ப​தற்​கான இலக்​கண விளக்​கம் இல்லை.​ ஒரே பகு​தி​யில் சுட்​டெ​ழுத்​து​கள்,​​ வினா எழுத்​து​கள் ஆகிய இரண்​டும் கொடுக்​கப்​பட்​டுள்​ளன.​ இது மாண​வர்​க​ளுக்​குச் சுமை​யா​ன​தா​கும்.​ இரு இயல்​க​ளில் இத்​த​லைப்​பு​க​ளைப் பங்​கிட்​டுத் தந்​தி​ருக்​க​லாம்.​ பல இடங்​க​ளில் தரப்​பட்​டுள்ள இலக்​கண விளக்​கம் போது​மா​ன​தா​க​வும் மாண​வர்​க​ளுக்கு விளங்​கக் கூடி​ய​தா​க​வும் இல்லை.​ உதா​ர​ண​மாக,​​ எட்​டா​வது இயல் இலக்​க​ணப் பகு​தி​யில் மூன்று காலங்​கள் பற்​றிய விளக்​க​மும் எடுத்​துக்​காட்​டு​க​ளும் மிக​மி​கக் குறை​வா​கவே உள்​ளன.​​ பாடநூ​லில் உரை​நடை,​​ செய்​யுள்,​​ இலக்​க​ணம்,​​ துணைப்​பா​டம் ஆகிய பகு​தி​க​ளில் சந்​திப்​பிழை,​​ ஒருமை பன்​மைப் பிழை,​​ வாக்​கி​யப் பிழை,​​ பொருள்​பிழை போன்​றவை நிறைந்​துள்​ளன.​ லட்​சக்​க​ணக்​கான இளம் மாண​வர்​க​ளுக்​குப் பயன்​ப​டும் பாட​நூல்,​​ பிழை​கள் மலிந்​த​தாக இருத்​தல் கூடாது.​ சில இடங்​க​ளைப் பார்க்​கும்​போது,​​ இதன் அச்​சுப் பிர​தி​கள் பிழை திருத்​தப்​பட்​ட​வை​தானா என்​னும் ஐயம் ஏற்​ப​டு​கி​றது.​ தலை​சி​றந்த ஆவ​ணம்​போல தயா​ரிக்​கப்​பட வேண்​டிய பாட​நூல்,​​ பெரி​ய​எ​ழுத்து ""நல்​ல​தங்​காள் கதைப் புத்​த​கம்''போல உள்​ளது வேத​னை​ய​ளிக்​கி​றது.​ பசிக்​கேற்ற உணவு என்​றாற்​போல,​​ வகுப்​பின் நிலைக்​கேற்​ற​வாறு பாட​நூல் அமைய வேண்​டாமா?​
கருத்துக்கள்

DON'T LEARN TAMIL LESSONS FROM NEW SYLABBUS.POLITICIANS KILLED TAMIL LANGUAGE. TAKE IN HOME TUTION FROM GOOD ORIGINAL VERSION BOOKS ,PRACTICE READING ,WRITING,CONVERSATION TOWARDS WTH PARENTS THEN READ TAMIL BOOKS WHAT U LIKE.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக