செவ்வாய், 1 டிசம்பர், 2009

இளங்கோவனுக்கு நெடுமாறன் எச்சரிக்கை



சென்னை, ​ நவ.30:​ "ஈ.வி.கே.எஸ். இளங்​கோ​வன் மீது முதல்​வர் கரு​ணா​நிதி நட​வ​டிக்கை எடுக்​கா​விட்​டால் மக்​களே அவரை அடக்​கும் நிலை உரு​வா​கும்' என்று இலங்​கைத் தமி​ழர் பாது​காப்பு இயக்​கத்​தின் ஒருங்​கி​ணைப்​பா​ளர் பழ. நெடு​மா​றன் எச்​ச​ரிக்கை விடுத்​துள்​ளார்.
இது குறித்து திங்​கள்​கி​ழமை அவர் வெளி​யிட்ட அறிக்கை:​
இலங் ​கை​யில் படு​கொலை செய்​யப்​பட்ட ஈழத் தமி​ழர்​க​ளுக்கு அஞ்சலி செலுத்​தும் வகை​யில் வைக்​கப்​பட்​டி​ருந்த பேனர்​க​ளை​யும்,​ சுவ​ரொட்​டி​க​ளை​யும் கிழித்​தெ​றிந்து பகி​ரங்​க​மாக நடத்​தப்​பட்ட அரா​ஜ​கத்தை வன்​மை​யா​கக் கண்​டிக்​கி​றேன்.
​ சட்​டத்தை கையில் எடுத்​துக் கொண்டு கல​வ​ரத்​தில் ஈடு​பட்​ட​வர்​க​ளைக் கைது செய்ய வேண்​டிய முதல்​வர் கரு​ணா​நிதி,​ அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு கொடுப்​பது கண்​டிக்​கத்​தக்​கது.
தடை செய்​யப்​பட்ட விடு​த​லைப் புலி​கள் இயக்​கத்​துக்கு ஆத​ர​வா​கப் பேசு​வது சட்​டப்​படி குற்​ற​மல்ல என்று மாவட்ட நீதி​மன்​றங்​கள் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை பல தீர்ப்​பு​கள் வழங்​கி​யுள்​ளன. அதனை மதிக்​கா​மல் நடந்து கொண்​ட​வர்​கள்​தான் நீதி​மன்​றத்தை அவ​ம​தித்​த​வர்​க​ளா​கின்​ற​னர்.
​ ஈழத் தமி​ழர்​கள் விஷ​யத்​தில் காங்​கி​ரஸ் தலைமை செய்த தவ​று​கள் கார​ண​மா​கவே ஈ.வி.கே.எஸ். இளங்​கோ​வன் உள்​ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் தோற்​க​டிக்​கப்​பட்​ட​னர். இதனை உண​ராத இளங்​கோ​வ​னின் செயல்​கள் தமி​ழ​கத்​தில் காங்​கி​ரûஸ குழி​தோண்டி புதைத்​து​வி​டும்.
​ தமி​ழ​கத்​தின் அர​சி​யல் பண்​பாட்​டின் இலக்​க​ண​மா​கத் திகழ்ந்த ஈ.வெ.கி. சம்​பத்​தின் நற்​பெ​ய​ருக்கு இளங்​கோ​வ​னின் செயல் பெரும் இழுக்​கைத் தேடித்​தந்​துள்​ளது.
​ இத்​த​கைய செயல்​களை முதல்​வர் கரு​ணா​நிதி வேடிக்கை பார்ப்​பா​ரே​யா​னால் மக்​களே முன்​வந்து அவற்றை அடக்​கும் நிலை உரு​வா​கும் என்று எச்​ச​ரித்​துள்​ளார் நெடு​மா​றன்.

கருத்துக்கள்

தமிழ்நாட்டின் அமைதியைக் கருத்தில் கொண்டு கோவன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தரக் குறைவாகப் பேசி அவரது பணியில் குறுக்கிட்டதற்காக முதலில் கைது செய்ய வேண்டும். இங்ஙனம் தமிழ் நாட்டு அமைதியை விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/1/2009 2:56:00 AM

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களைப் பற்றித் தமிழரல்லாதவர் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும். கோவன் போன்றவர்கள் தமிழ் பேசுவதாலோ தமிழ் நாட்டில் தமிழர்களை ஏமாற்றி வாழ்வதாலோ தமிழர்களாக முடியாது. தேர்தலில் மண்ணைக் கவ்விய தனக்குக் காங்.கின் தலைமைப் பதவியாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊடகங்களில் பெயர் வரவேண்டும் என்பதற்காகத் தமிழினததிற்கு எதிராகப் பேசுவதையும் செயல்படுவதையும் தொழிலாகக் கொண்டுள்ள கோவனை உடனடியாகக் குண்டர் சட்டத்தின் கீழ்ச்சிறையில் அடைக்க வேண்டும். தாயாலும் மதிக்கப்படாத ஈனப் பிறவிகள் இனப் பகையைத் தூண்டி விடுவதற்குத் தமிழக முதல்வர் இடம் அளிக்ககக் கூடாது. கலவரங்களைத் தூண்டிக் குளிர் காய எண்ணும் அவருக்கு அடைக்கலம் தருவதால் அவருக்குத்தான் முதல் ஆபத்து என்பதை முதல்வர் உணர வேண்டும். தன்னை அரசியல் மேதையாக எண்ணிக் கொண்டும் தனக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருப்பதாக நடித்துக் கொண்டும் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் உளறுபவர் கண்டு முதல்வர் அஞ்ச வேண்டிய தேவையில்லை.எனவே, தமிழ்நாட்டின் அமைதியைக் கருத்தில் கொண்டு கோவன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By Ilakkuvanar Thiruvalluvan
12/1/2009 2:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக