புதன், 2 டிசம்பர், 2009

எம்.ஜி.ஆரை கொச்​சைப்படுத்​து​வதா?​​ - கரு​ணா​நி​தி​யி​டம் விஜ​ய​காந்த் கேள்வி



சென்னை, ​ டிச. 1:​ பால் கமி​ஷன் அறிக்கை வெளி​யான விவ​கா​ரத்​தில் எம்.ஜி.ஆரை கொச்​சைப்​ப​டுத்​து​வதா?​ என முதல்​வர் கரு​ணா​நி​திக்கு தே.மு.தி.க. தலை​வர் விஜ​ய​காந்த் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.÷இது குறித்து அவர் செவ்​வாய்க்​கி​ழமை கூறி​யது:​÷எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்​தில் திருச்​செந்​தூர் கோயில் உதவி ஆணை​யா​ள​ராக இருந்த சுப்​பி​ர​ம​ணிய பிள்ளை தற்​கொலை செய்து கொண்​டார் என்று குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது குறித்து விசா​ரிக்க நீதி​பதி பால் என்​ப​வரை எம்.ஜி.ஆர். நிய​மித்து உத்​த​ர​விட்​டார்.÷நீ​தி​பதி பால் விசா​ரித்து அறிக்​கையை அர​சுக்கு தாக்​கல் செய்​தார். அர​சின் சார்​பில் சட்​டப்​பே​ர​வை​யில் அந்த அறிக்கை வைப்​ப​தற்கு முன்பு அன்​றைய எதிர்க்​கட்சி தலை​வ​ராக இருந்த கரு​ணா​நிதி தன்​னிச்​சை​யாக வெளி​யிட்​டார். இந்த சட்​ட​வி​ரோத காரி​யத்​துக்கு யார் பொறுப்பு?​÷இது தொடர்​பாக அன்று பத​வி​யில் இருந்த அமைச்​சர்​கள் பதவி வில​கி​னார்​களா என்று இப்​போது கரு​ணா​நிதி கேள்வி எழுப்​பி​யுள்​ளார். ஆனால் இந்​தக் கேள்​வியை அப்​போது அற​நி​லை​யத்​துறை அமைச்​ச​ராக இருந்த ஆர்.எம். வீரப்​ப​னி​டம் கேள்வி கேட்க வேண்​டும்.÷பால் கமி​ஷன் அறிக்கை திருடு போனது குறித்து இரண்டு அதி​கா​ரி​களை தாற்​கா​லி​கப் பணி​நீக்​கம் செய்து அன்​றைய அரசு விசா​ரணை செய்​தது.÷பொ​ருளை வாங்​கு​ப​வர்​கள் யாரும் இல்​லை​யென்​றால் அதை யாரும் உற்​பத்தி செய்​ய​மாட்​டார்​கள். அதே​போல்​தான் அன்​றைக்கு பால் கமி​ஷன் அறிக்​கையை கரு​ணா​நிதி வாங்​கத் தயா​ராக இருந்​த​த​னா​லேயே அரசு அலு​வ​லர்​க​ளால் திரு​டப்​பட்​டது. ஆகவே இந்த குற்​றத்தை செய்​யத் தூண்​டிய பொறுப்பு கரு​ணா​நி​திக்கு உண்டா?​ இல்​லையா?​ எந்​தக் குற்​றத்​தி​லும் குற்​றம் செய்​த​வ​ரை​விட குற்​றம் செய்​யத் தூண்​டி​ய​வர்​தானே முதல் குற்​ற​வாளி.÷இந்த நிலை​யில் பால் கமி​ஷன் அறிக்​கையை திரு​டிய குற்​றத்​துக்​காக பதவி நீக்​கம் செய்​யப்​பட்ட அதி​கா​ரிக்கு,​ 1989}ம் ஆண்டு ஆட்​சிக்கு வந்த கரு​ணா​நிதி மீண்​டும் பதவி வழங்கி தனது நேர்​முக உத​வி​யா​ள​ராக ஆக்​கிக் கொண்​டார்.÷மே ​லும் அந்த அதி​கா​ரிக்கு 8 ஆண்​டு​கள் பணி​யில் இல்​லாத காலத்​துக்​கும் ஒரே நாளில் சம்​பள பாக்​கியை வழங்​கி​னார் கரு​ணா​நிதி. அப்​படி என்​றால் இந்த குற்​றத்​துக்கு யார் கார​ணம் என்​பது தெரி​ய​வில்​லையா?​÷இ​வை ​கள் எல்​லாம் ஒரு அர​சின் நிர்​வா​கத்தை சீர்​கேடு அடை​யச் செய்​வது மட்​டு​மல்​லா​மல்,​ சட்​ட​வி​ரோத காரி​யங்​களை அதி​கா​ரி​கள் துணிந்து செய்​வ​தற்கு தூண்​டி​விட்​டது ஆகாதா?​÷க​ரு​ணா​நிதி விஞ்​ஞான முறை​யில் ஊழல் செய்​தார் என்று நீதி​பதி சர்க்​கா​ரியா அறிக்கை தாக்​கல் செய்​தார். ஆனால் அந்த அறிக்​கை​யின் அடிப்​ப​டை​யில் கரு​ணா​நி​தியை கைது செய்ய வேண்​டாம் என்று அன்​றைய தினம் எம்.ஜி.ஆர். பெருந்​தன்​மை​யோடு நடந்து கொண்​டார்.÷ஆ​னால் பால் கமி​ஷன் தொடர்​பாக அன்​றைய முதல்​வர் எம்.ஜி.ஆர் ஏன் பதவி வில​க​வில்லை என்று இன்று கரு​ணா​நிதி கேள்வி கேட்டு அவரை கொச்​சைப் படுத்​து​கி​றார் என்று கூறி​னார் விஜ​ய​காந்த்.
கருத்துக்கள்

நுணலும் தன் வாயால் கெடும். கலைஞர் ஏன் தேவையில்லாப் பெருமை பேசி இவரிடமெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்? இப்பொழுதெல்லாம் அமைதி காக்க வேண்டிய நேரங்களில் எதையாவது பேசியோ எழுதி்யோ தேவையற்ற வம்பில் மாட்டி க் கொள்கிறாரே ! நல்ல வேளை புதுச்சேரியில் முன் கூட்டி வெளியிடப்பட்டு ஆட்சியைக் கவிழ்த்ததாகப் பெருமை பேசவில்லை. சிதம்பரத்திற்குத் தொண்டர்அடிப் பொடியாளாக இருக்க வேண்டும என்று கருதினால் பொதுவாகக் கூறியிருநதிருக்கலாம். அதிமுக தலைவியை விடத் தேதிமுக தலைவர் தெளிவாக அறிக்கை அளித்துள்ளார். இனியேனும் முத்தமிழறிஞர் அமைதி - மௌனம் - கா்ககட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/2/2009 4:06:00 AM

Both karunanidhi and vijayakanth has the secret allaince to split the ADMK and MGR Votes. Please do not trust these two peoples acting.

By Abdulla, Oman
12/2/2009 4:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
Hi Ilakkuvanar Thiruvalluvan, I have been reading your comments whenever I open dinamani site. It is really superb. I appreciate your good comments.
By Marianandan
12/2/2009 7:50:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக