திங்கள், 30 நவம்பர், 2009

தீவிரவாத நடவடிக்கையால் தமிழக வளர்ச்சி பாதிக்கும்: ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன்



மதுரை, நவ. 29: தீவிரவாத நடவடிக்கைகளால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும். எனவே ஆரம்பத்திலேயே தீவிரவாதத்தை தடுக்கவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் கூறினார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:சென்னையில் எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர். போலீஸôரின் விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது.கைதானவர்கள் அனைவரும் குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. எனவே அவர்களைத் தூண்டியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.பெட்ரோல் குண்டு வீச்சுக்குப் பிறகு எனக்குப் பாதுகாப்பு கோரவில்லை. ஆனால், போலீஸôரே முன்வந்து எனக்குப் பாதுகாப்பை அளித்துள்ளனர். இதற்காக தமிழக முதல்வருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை பல இடங்களில் வைத்து உள்ளனர்.சில இடங்களில் மட்டுமே அப்படத்தை போலீஸôர் அகற்றி உள்ளனர். எனவே தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ தீவிரவாதத்தை முழுவதுமாக தடுக்கவேண்டும்.தீவிரவாதத்தை ஆரம்பத்திலேயே அழிக்காவிட்டால் காஷ்மீர், அசாம், பிகார், மேற்குவங்கம் போல தீவிரவாதிகளது ஆதிக்கம் அதிகமுள்ள இடமாக தமிழகம் மாறிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.யார் தீவிரவாதத்தை ஆதரித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமிழர்கள் கொல்லப்படக் கூடாது. அவர்கள் நலமோடு வாழவேண்டும் என்பதில் மத்திய அரசும், மாநில அரசும் அக்கறையும், உறுதியும் கொண்டுள்ளன.அதே சமயம் தீவிரவாதம் பரவிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.மத்திய அரசுக்கும் கோரிக்கையை அனுப்பியுள்ளோம். அதன்படி விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை அதிகாரிகள் விளக்குவார்கள் என்றார் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன்.
கருத்துக்கள்

அமைதியான சூழலை வன்முறைக்கு இடமளிக்கும் வகையில் தன்வன்முறைச் செயல்களால் தூண்டி விடும் கோவனை உடனே கைது செய்துவிசாரணை செய்வதுடன் குண்டர்கள் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கவேண்டும். தன் சொந்த நன்மைகளுக்காகவும் ஊடகங்களில் பெயர் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும் அமைதி்ப் பூங்காவான தமிழ்நாட்டைச் சிதைத்து அரசிற்குக் களங்கம் ஏற்படுத்த முயலுவதால் மத்திய அரசு இவரது செயல்களுக்கு ஊக்கமளிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தமிழக மக்கள் பேசிக் கொள்கின்றனர. எனவே,காவல் துறைக்குச் சிக்கல்களை ஏற்படுத்து வதைக் கருதி மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேண்டுகோளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:09:00 AM

இளங்கோவன் அவர்களே, பெரும்பான்மையான நேரம் குடி போதையில் இருக்கும் நீங்கள் , தமிழ் குடி உயிரோடு இருகிறதா என்பது கூட தெரியாமல் இருப்பது ஆச்சிரியம் அல்ல !

By veeramani
11/30/2009 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
he is a another national defender, goverment must give him latest weapon to fight against trrorist,then he can clear terresam from state. this use less idiot must be chased away rom state.
By singaitamilan
11/30/2009 7:19:00 AM

Keerthi, you lack decency when you talk about a great scholar, Thiruvalluvan Ilakkuvanar, don't say "shud" up. Apart from spelling mistake the content of your comment is meaningless. Thiruvalluvan's comments are always very good,thought provoking and appreciated by many. I request Thiruvalluvan to ignore you, and your comments.

By ATamil
11/30/2009 7:16:00 AM

If Trrorist Activities Are The Reasons For Halting Development Activies In Tamilnadu,What About The Ulfa,Kashmir Terrorists And Moists.?Are They Operating In Tamilnadu?. Those People Are Waging War Against The Nation And The Central Government is just acting as a spectator! If Exibition Of Sympathy for Tamil’s Cause In Srilanka Will Be The Problem To This Nation, What This EVKA Elago Wants To Comment About The Inactive Central Government Which Could Not Counter The Maoists And Ulfa And Kashmiri Terrorists. He Is Now Fish Out Of Water. Somehow He Wants Atleast Rajya Sabha Seat To Enter In Parliament And Enjoy The Royal Life. He Wants To Draw The Attention Of The Delhi High Command. To Impress That He Is Fighting Against Terror. What Has Happened In His Adayar Rented House Is Suspected To Be A Drama As Was Staged By NKKP Raja From His Ownplace.CBI Should Inquire As This Is A Matter Of National Security As Per Elango’s's Statement

By Thangam.Murugesan
11/30/2009 6:14:00 AM

Dear Ilakkuvanar Thiruvalluan!! PLEASE SHUD UP YOUR NON-SENSE TALK!! Are tamilian lives so cheap like your fishermen????

By keerthi
11/30/2009 5:44:00 AM

Talking about Tamil Nadu's future and development, we Tamils should get rid of Tamil's enemies like EVKS Elangovan. Elangovan himself is a obstacle to Tamil's future. While working for North Indians, and their wellfair, he has no legitimate ground to speak about Tamils and Tamil Nadu. He is enemy of Tamils as well as Mr "Eddappan" Karunanithi. Tamils are awakened and no longer fallen for their idiotic speech. God bless Tamils.

By Elangovan goes to hell
11/30/2009 5:42:00 AM

இளங்கோவன் அவர்களே, உங்களுக்கு பிரச்சினை என்றால் தமிழகத்தின் வளர்சி பாதிக்கிறதோ! 30 ஆயிரம் தமிழிழர்களின் உயிரை உன்னால் திருப்பி தர முடியுமா? பலிக்குப் பலி வாங்கிய நீங்கள்தான் கொடுர தீவிரவாதிகள். புதிய தீவிரவாதிகளை தயவு செய்து உருவாக்காதீர்கள். என்று ஒழியும் உங்களது இந்த வக்கிரப்புத்தி!. காந்தி மகானின் பெயரை சொல்லிக் கொண்டு கொடுர கொலைகளை நடத்தியவர்கள்தானே நீங்கள்!

By vino
11/30/2009 3:25:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக