pranab லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pranab லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜூன், 2012

மூவரின் மரணத்தண்டனையை விலக்க உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

பொய்யான வாக்குறுதி கொடுப்பதில் அரசியல்வாதிகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. காங்.கிற்குக் கேட்கவே வேண்டா. எனவே, இவ்வாறு சொல்லாமல்,  காங்.அரசு இப்பொழுது மூவர் தண்டனையையும் நீக்கினால் அதன் வேட்பாளரான பிரணாப்பை ஆதரிப்பதாகக்  கூறலாம் எனத் தெரிவிக்கலாம். இப்படியெல்லாம் வெளிப்படையான பேரம் பேசுவது தலைமைக்குப் பழக்கமில்லை. எனவே,  மறைமுகப்  பேரத்தின்அடிப்படையில் பிரணாப்பைத்தான் ஆதரிக்கும்.  எனவே, போக விரும்பாத ஊருக்கு வழிகாட்டிப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

First Published : 22 Jun 2012 12:13:39 PM IST

Last Updated : 22 Jun 2012 12:17:51 PM IST

ராமநாதபுரம், ஜூன் 22: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாக உறுதி அளிக்கும் பட்சத்தில் திமுகவும், திருமாவளவனும் பிரணாப் குடியரசுத் தலைவராக ஆதரவு அளிக்கலாம் என்றார் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான்.இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கூறியது...குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு தரவேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம். அப்படி இல்லாவிடில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வேன் என்ற உறுதிமொழியின் பேரில் வேண்டுமானால் ஆதரவு அளிக்கட்டும். இதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 வருடங்கள் வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபட்ச பேசியிருக்கிறார். அப்படி இந்திய எல்லைக்கு வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 வருடங்கள் சிறையில் அடைக்கும்படி நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு போடுவார்கள் என்றனர் இருவரும்.முன்னதாக, ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான், அமீர் ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. அது தொடர்பாக இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். இந்த வழக்கில் மீண்டும் ஜூலை 20ம் தேதி இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்



புதன், 20 ஜூன், 2012

Tamil leaders wearing tamil mask: தமிழ் முகமூடி அணிந்த தமிழகத்தலைவர்கள்!

தமிழ் முகமூடி அணிந்த தமிழகத்தலைவர்கள்!

பிரணாப்பிற்கு மரு.இராமதாசும்  தன் கட்சி வாக்களிக்கும் என அறிவித்துள்ளார்.  கொலை காரக் கூட்டாளியின் அரசில்  வாய்மூடியாக இருந்த தி.மு.க. தன் வண்ணம் வெளுத்துக் கொண்டு வந்தாலும்
காங்.ஐ அடி யொற்றிப் பிழைப்பு நடத்துவதில் வியப்பில்லை. நான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனப் பிறரை அழைத்தேன். ‌ என் பேச்சைச் செவி மடுப்பார் யாருமில்லை. எனவே, நானும் 'சோரம் போனேன்' என்பது போல் பேசி வரும் திருமாவும்  சாதிக் கூட்டத்தினரை நம்பி இனப் பாதையில் தடம் புரள்வதால்
மதியாதார்  தலை வாசல் மிதியாமை  கோடிபெறும் என்பதை மறந்து சொக்கத்தங்கம் இல்லம் சென்று ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். மரு.மட்டும் சும்மா இருக்க இயலுமா?  கொத்துக் குண்டுகள் அடை மழை போல் பெய்த பொழுதே ஆட்சிச் சுவையைச் சுவைத்தவராயிற்றே. எனவே இன்னும் பின் தங்கினால்  பேரத்தில் பின்வாங்க நேரும் என அஞ்சிக் காங்.ஐ ஆதரிக்கிறார்.
விசயகாந்த்து காங். ஐ எதிர்ப்பதில் உறுதியாக இருந்தால் பாராட்டலாம்.
பொய்க்காரணம் கூறிக் கொ‌லைகாரக் கட்சிக்கும்
 போரை நிறுத்துவதாகப் பொய்  சொல்லி இனப்படுகொலையில்
 பங்கு வகித்தவர்க்கும்  ஆதரவு தருவதை விட சங்மாவை ஆதரிக்கலாமே. அ.தி.மு.க. ஆதரிப்பதால்  எதிர்க்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.  தனிப்பட்ட முறையில ஆதரிக்கலாம். அல்லது தேர்தலைப் புறக்கணிக்கலாம்.  இவர்களின்  பொய்ம்முகங்கள‌ை நம்பும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு இதை ப்பற்றி எல்லாம்
 என்ன கவலை?

சனி, 16 ஜூன், 2012

தமிழக நா.உ., ச.உ. கள் கொலைக்கூட்டாளி பிரணாப்பிற்கு வாக்களிகக்கூடாது. - சீமான் வேண்டுகோள்

வெள்ளி, 2 ஜூலை, 2010

ஐ.நா.  குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும்: ஜெயலலிதா

First Published : 02 Jul 2010 01:15:35 AM IST


 சென்னை, ஜூலை 1: இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. குழுவை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரில் நடைபெற்ற உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை, குழு ஒன்றை அமைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு அரசும், முதல்வர் கருணாநிதியும் கைவிட்டு விட்டனர். இந்நிலையில் ஐ.நா. சபை ஆதரவு கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. சபை தலைவரின் இந்த நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபட்ச அரசு குற்றம் செய்யவில்லை என்றால், ஐ.நா. குழுவை இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், ராஜபட்ச அரசு செய்த கொடுமைகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என்பதில் சந்தேகமில்லை.÷கருணாநிதி மீது குற்றச்சாட்டு: இலங்கையில் போர் முடிந்த 19.5.2009-ம் தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறி முதல்வர் கருணாநிதி சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.  போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறியதை தமிழக மக்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள தமிழர்களும் நம்பினார்கள். போர் முடிந்து விட்டது என்று நம்பி, பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தவர்கள் மீது, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த விமானங்கள் கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இரண்டே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  போர் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்காத அப்பாவி மக்களுக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றம் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதபோது, போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதனால், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொல்ல, இலங்கை அரசுக்கு கருணாநிதி உதவி செய்திருக்கிறார்.  எனவே, ராஜபட்ச சகோதரர்கள், இலங்கை ராணுவ வீரர்கள் போல கருணாநிதியும் போர் குற்றவாளிதான்.  ஐ.நா. சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அ.தி.மு.க. குழு அவர்களைச் சந்திக்கும். கருணாநிதி போர் குற்றவாளி என அறிவிக்கத் தேவையான ஆதாரங்களை ஐ.நா. குழுவிடம் அ.தி.மு.க. அளிக்கும்.  சதிச் செயல்களால் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்காக இதையாவது நாம் செய்ய வேண்டும். இதைத்தான் நம்மால் செய்ய முடியும் என்று ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


சோனியா முதலான தலைவர்களையும் மன்மோகன்சிங், பிரணாப் முதலான ஆட்சிப்பொறுப்பாளர்களையும் , நாராயணன் முதலான அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்க்க நடவடிக்கை எடுத்தால் இவரது நிலைப்பாட்டை நிலையானது என்று கருதலாம். இல்லையேல் அரசியல் நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுதித்தந்தவர்கள் பிறரைச் சேர்க்காமல் இருந்தாலும் அவர்கள் சேர்த்து இவர் எடுத்திருந்தாலும் இவரது நம்பகத்தன்மை எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தேர்தல் நேரத்தில் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதாக அறைகூவிய எதிர்க்கட்சித் தலைவியே! ஈழச்சிக்கலைத் தேர்தல் கருவியாகக் கருதாமல் வாழவேண்டிய மூத்த இனம் வஞ்சகத்தால் மடியும் அவல நிலையில் இருந்து காக்க வேண்டிய கட்டாயக் கடமை எனக் கருதிச் செயல்படுக! உள்ளுணர்வுடன் உண்மையாகத் தமிழ் ஈழம் அமைய, தமிழர்தாயகம் உரிமையுடன் திகழப் பாடுபட்டீர்கள் என்றால் உலகம் உங்கள் பின்னால் அணிவகுக்கும்.இல்லையேல் உங்கள் தொண்டர்கள்கூட உங்கள் பேச்சை நம்ப மாட்டார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2010 4:12:00 AM

நீங்க விஷயம் புரியாம பேசுறீங்க அம்மா !...ஒரு குண்ட போட்டு ராஜபட்சே ஒரே நேரத்துல லட்சக்கணக்கான தமிழர்கள கொன்னுபுட்டாறு ! எதோ விதிப் பயன் அப்படின்னு நெனச்சு மனச கல்லாக்கிக்கிட்டு கிடந்துடலாம் !!! அனால்...இந்த மேப்படியார் இருக்குறாரே ...நீங்க வீரமான பொம்பளை பேர சொல்லிப் புட்டீங்க! நாங்கெல்லாம் பயந்து போயி கெடக்குறோம் ! கெட்டசாதிப் பய தொந்தரவு கொடுப்பான்!....அந்த மோசக்காரப் பய தமிழன சாகவும் விட மாட்டேங்குறான் ....வாழவும் விட மாட்டேங்குறான் ....அப்படியே ரத்தத்த சுரக்க சுரக்க ..உறிஞ்சிக்கிட்டே இருக்குறான் !கடவுளா பாத்து இரக்கப் பட்டு....அவன் கதைய முடுச்சு ....தமிழ் இனத்துக்கு என்றைக்கு ஒரு நல்ல சேதியைக் கொடுத்து தீபாவளி கொண்டாடச் சொல்லப் போறாரோ தெரியல !!!! @ rajasji
By rajasji
7/2/2010 3:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *