pan kee mun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pan kee mun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மார்ச், 2011

Reward to pan kee mun: அரசியல் தந்திரத்தை இந்தியாவில் கற்றேன்: பான் கி மூன்


கண்டிப்பாக இந்தியம் பான்கிமூனுக்கு ஆதரவாக  இருக்கும். இந்தியச் சிங்களக் கூட்டுப் படுகொலைகளுக்கு உடந்தையாக  இருந்தமைக்காகப்  பரிசு வழங்கவேண்டாவா?
பான்கிமூன் கண்டுகொள்ளாமல்  இருந்தமையாலும் நம்பியார் முதலான தன் கீழ்ப் பணியாற்றுவோரைக் கட்டுப்படுத்தாமல்   இருந்ததாலும் வெண்கொடஏந்திய அமைதிப் புறாக்களையகொல்ல முடிந்ததே! ஈழத்தமிழ் மக்களின் பேரழிவுச் செயல்களுக்கு உதவிய நன்றிக்காக இந்தியம் அவருக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /



அரசியல் தந்திரத்தை இந்தியாவில் கற்றேன்: பான் கி மூன்

ஐ.நா.வில் புதன்கிழமை நடந்த இந்திய இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த பொதுச் செயலாளர் பான் கி மூன் (வலமிருந்து 3-வது), வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியம் (வலமிரு
நியூ யார்க், மார்ச் 9: அரசியல் தந்திரத்தை இந்தியாவில்தான் கற்றுக் கொண்டேன் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார்.ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பணியாற்றியபோது, இந்திய அரசியல் தந்திர முறைகளையும், இந்திய இசையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன் என அவர் புதனன்று தெரிவித்தார். ஐ.நா. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பிரபல இசைக் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் வயலின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது அவர் இவ்வாறு கூறினார்.பான் கி மூன் தனது கல்வியை முடித்ததும் தென் கொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். முதலில் இந்தியாவிலுள்ள தென்கொரிய தூதரகத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் பணிபுரியும் காலத்தில் ராஜதந்திரம் என்றால் என்ன என்று படித்தேன். அந்த காலகட்டத்தில்தான் இந்திய இசை குறித்தும் தெரிந்து கொண்டேன் என அவர் தெரிவித்தார்.இசை நிகழ்ச்சியின்போது, ஐ.நா.வில் உள்ள இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி உடனிருந்தார். அப்போது அவர் கூறியது: ""அரசியல் தந்திரத்துக்கு என்று ஒரு விசித்திரமான மொழி உண்டு. ஆனால் இசை என்பது உலக மொழி. இதன் சூட்சுமங்களைத் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை'' என அவர் குறிப்பிட்டார்.பான் கி மூனின் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக் காலம் இந்த ஆண்டின் இறுதியோடு முடிவடைகிறது. அவர் இரண்டாவது முறையாக பதவி வகிக்க இந்தியா போன்ற நாடுகளின் பின்துணை அவசியம். அவர் மீண்டும் பதவிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியா அவருக்கு ஆதரவளிக்கும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

புதன், 30 டிசம்பர், 2009

பான் கீ மூன் மகள் இந்தியரை திருமணம் முடித்திருக்கிறார்: மேலும் அதிர்சி

28 December, 2009 by admin

8 வது ஹிந்தி மாநாடு நியூயோர் நகரில் கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாடிய பான் கீ மூன் அவர்கள் தனது மகள் ஒரு இந்தியரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் தாம் புது டெல்லியில் தூதுவராகப் பணியாற்றியபோது விஜய் நம்பியார் தனக்கு மேலதிகாரியாகக் கடைமையாற்றியதாகவும், விஜய் நம்பியாரை தனக்கு 1972 ஆண்டு முதல் தெரியும் எனவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த மாநாடு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் பான் கீ மூன் உரையாற்றியதில் பல திடுக்கிடும் தகவல்கள் மறைந்திருப்பது தமிழர்களுக்குத் தெரியவில்லை.



இவர்கள் கென்யாவில் வாழும் பல இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. கொரிய தூதரகத்தில் முதல் முதலாக ஒரு ராஜதந்திரியாக பான் கீ மூன் பதவி ஏற்றபோது, அவரது ஆசானாக விஜய் நம்பியார் விளங்கியிருக்கிறார். ஐ.நாவில் ஒரு பொறுப்பதிகாரியாக விஜய் நம்பியார் கடமையாற்றி இருந்ததும் அவருக்கு கீழ் பான் கீ மூன் கடமையாற்றியதும் நடை பெற்ற மாநாட்டிலிருந்து வெளியாகியுள்ள செய்திகள்.

இறுதிச் சமரில் விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முயற்சிக்கும் போது அதன் ஏற்பாட்டாளர்களாக திகழ்ந்த முக்கிய நபர் விஜய் நம்பியார் என்பது யாவரும் அறிந்ததே. சரணடைய வரும் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்துமே நம்பியார், அவர்களை வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின் படி தாமே யுத்த களத்திற்குச் சென்று சரணடைவதைப் பார்வையிட இருப்பதாகவும் இவர் சிலரிடம் கூறியிருக்கிறார். இவர் தொடர்பாக பல முறைப்பாடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், விஜய் நம்பியாரும், பான் கீ மூனும் பாலிய சிநேகிதர்கள் என்ற விடயம் தற்போது அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலை தெரியாமல் பல தமிழ் அமைப்புக்கள் விஜய் நம்பியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பான் கீ மூனை கோரிவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இதுவரை எந்த விசாரணையும் விஜய் நம்பியாருக்கு எதிராக நடத்தப்படவில்லை என்பதற்கு தற்போது தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பான் கீ மூனும் ஒரு இந்தியாவின் செல்லப் பிராணியே என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எவ்வளவு இதய சுத்தியுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகுவார் என்பது தற்போது மிகுந்த சந்தேகத்திற்கு இடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாநாட்டில் பான் கீ மூன் பல்லிளித்து பேசிய சில ஹிந்தி வார்த்தைகள் கீழே..

ஹிந்தி தோடா தோடா மாலும் ! அப்படி என்றால் எனக்கு ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் !

இதை விட நீண்ட வசனத்தையும் இவர் பேசிக்காட்டியிருக்கிறாராம் என்றால் பாருங்களேன் !


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 23781

புதன், 9 செப்டம்பர், 2009

சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
தமிழ் மக்களின் அழிவினைக் கூடப் பொருட்படுத்தாமல், தான் சர்வதேச ரீதியில் புகழ் பெறுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்திருந்த பான் கீ மூன் இந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட தமிழர்களை அரசியல் ஆறுதலை வழங்குவதன் மூலமும், கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுவிப்பதன் மூலமும் இந்த புகழை அடைவதற்கு சிறீலங்காவின் இனப்படுகொலையை மூடி மறைக்கும் பெரும் திட்டத்தை வகுத்துள்ளார்.
அந்தத் திட்டத்தின் பிரகாரம் வன்னி மக்களை விடுவித்தால், அதற்கு பிரதி உபகாரமாக சிறீலங்கா மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு கொண்டுவரும் பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபை அந்த விசாரணைக்கான ஆதரவினை வழங்காது எனவும், அத்துடன், சர்வதேச விசாரணைகள் இன்றி, போர்க் குற்றங்களை புரிந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீது சிறீலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் எனவும் தான் அறிவிப்பதாக அந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
இந்த உடன்படிக்கை கொடுத்த துணிவிலேயே ஐ.நாவின் உயர் அதிகாரிகளும், மனித உரிமைவாதிகளும் உருவாக்க முனைந்த போர்க் குற்ற விசாரணைகளை சிறீலங்காவின் இராஜதந்திரிகளும், அரச உயர்மட்டத் தலைவர்களும் திமிருடன் அவற்றை உதாசீனம் செய்து புறக்கணிக்கும் துணிவைப் பெற்றிருந்தார்கள்.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம், உலகின் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தவறிவிட்டார் என அமெரிக்காவில் வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தனது செய்தியில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஐ.நா. உயரதிகாரிகளையும் மனித உரிமை அதிகாரிகளையும் இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டாம் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக அவை நம்பகத்தன்மை அற்றவை என்ற நொண்டிச்சாட்டையும் பான் கீ மூன் உருவாக்கினார் என அவருடன் நெருங்கிப் பணிபுரிந்து ஐ.நா. அதிகாரிகளே இப்போது குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இத்தனையையும் மறைத்து இவரால் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியவில்லை எனவும், இருநாள் போர் இடைவேளையையே அவரால் பெற முடிந்தது எனவும் கூறியுள்ள அவர்கள், இந்தப் படுகொலைகளை மறைத்ததன் மூலம் 20 ஆயிரம் தமிழர்களை அழிக்கும் அளவிற்கு மகிந்த ராஜபக்சவிற்கு இவர் துணைபோயுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, சிறீலங்கா இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டினை சர்வதேச ரீதியில் பலமாக முன்வைத்து சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தியதுடன், ஊக்கிவித்தும் உள்ளார் என குற்றச்சாட்டுக்கள் தற்போது அவரைச் சூழ உள்ளவர்களாலேயே எழுப்பப்பட்டு வருவதுடன், அவரது ஆளுமை பற்றிய சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
பான் கீ மூனின் இந்தச் செயற்பாடுகளானது, ஐ.நா. இராஜதந்திரிகள் இடையே இவரின் இரண்டாவது பகுதி சேவைக்காலம் எதையும் சாதிக்க இயலாத பிரயோசனமற்ற சேவைக்காலமாகவே கருதுகின்றனர்.
இதுஇவ்வாறிருக்க, அதிகாரமற்ற மற்றும் நேர்மையற்ற தனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு சாட்சியாக இருந்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தை போர்க் குற்றவாளியாக்க தவறியதன் மூலமும் ஐ.நாவின் கட்டமைப்பையும் ஐ.நாவின் கொள்கைகளையும் பான் கீ மூன் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நோர்வேக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மோனா யூல் பகிரங்கமாக கண்டித்துள்ளார்.

சனி, 29 ஆகஸ்ட், 2009

சர்வதேச சட்டத்தை மீறும்
அச்சம் நிறைந்த வீடியோ -
ஐ.நா நிபுணர்
பிரசுரித்த திகதி : 29 Aug 2009

இலங்கை ராணுவத்தினரின் இன அழிப்பு வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற திகிலூட்டும் பயங்கர வீடியோ எனக் கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்.

கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற ஒரு இன அழிப்பு நடவடிக்கை என விவரித்துள்ளார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன சிறப்பு தொடர்பாளரான பிலிப் ஆல்ஸ்ரன். இந்த வீடியோவை மறுத்து தாம் அப்படியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என அரசாங்கம் மறுத்தால், அதற்கு எதிராக சர்வதேச சமூகமானது விசாரணை நடத்துவது மிக எளிதாகிவிடும் என்றும், அரசாங்கத்தைப் பழிவாங்கலாம் என்றும் அவர் மேற்கொண்டு கூறியுள்ளார்.

அண்மைக்காலங்களில், இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக ஆல்ஸ்ரன் பல முறை அனுமதி கேட்டிருந்தபோதும், அரசாங்கம் தனக்கு அனுமதி தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2009, மே 9 ஆம் திகதி ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தொடர்ந்து பொதுமக்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அங்கு என்ன நடக்கிறது அதைப்பற்றிய விவரம் ஒன்றுமே அறிய முடியாதுள்ளமை பற்றியும் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமது கருத்தையும் எழுதியுள்ள அல்ஸ்ரன், இலங்கை அரசானது ஊடகவியலாளர்களையோ, மனிதாபிமான கண்காணிப்பாளர்களையோ அங்கு அனுமதிக்காமல் இருப்பதானது கடந்த மூன்று மாதத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதன் காரணமாகத் தான் எனக் கூரியுள்ளார்.

2009, மே 29 ஆம் திகதிய பிரிட்டிஸ் த ரைம்ஸ் பத்திரிகையானது, கடைசிநேர போரில் குறைந்தது 20,000 மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள வேளை, ஐ.நா இன் ரகசிய அறிக்கையில் ஏப்பிரல் மாத முடிவில் மட்டும் 7,000 மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நோர்வே தூதுவரான மோனா ஜூல் கடிதத்தால்
பான் கீ மூனுக்கு நெத்தியடி
பிரசுரித்த திகதி : 22 Aug 2009

ஐ.நா செயலர் பான் கி மூன் தலைத்துவமேந்த அருகதை இல்லாதவர், மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடத் தெரியாதவர், கோபக்காரர் என பல குற்றங்களை ஐ.நா வுக்கான நோர்வே தூதுவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நோர்வே ஒஸ்லோ பத்திரிகை ஆஃப்டன்போஸ்டன் கூறியுள்ளது. நோர்வே தூதுவரான மோனா ஜூல், ஜ.நாவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மற்றும் சர்வதேச தலையீடுகள் தேவைப்பட்ட சந்தர்ப்பத்திலெல்லாம் பான் கி மூன் அமைதியாக இருந்துள்ளார். பான் கீ மூன் ஒரு தகுதியில்லாத செயலர் என்ற கோணத்தில் அவருடைய பதவி நோக்கப்படுவதற்கு இலங்கை ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு படை நடவடிக்கையில் நடைபெற்ற பாரதூரமான மானித அவலங்களை அவர் நேரடியாகச் சென்று பார்த்தும் கூட அதுபற்றி எதுவித அக்கறையும் மகிந்த அரசுக்குக் காண்பிக்கவில்லை.

இது போல படு மோசமான அராஜக இராணுவ ஆட்சி நடந்து வருகின்ற மியன்மாரில் எதிர்க்கட்சித் தலைவியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ குயி வீட்டுக்காவலில் இருப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க பான் கி மூன் தவறியுள்ளார் என இக்கடிதத்தில் திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கடிதத்தின் ஆங்கீகாரம் பற்றி, நோர்வே வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். நோர்வே மொழியில் உள்ள இக்கடிதமானது, பான் கி மூன் நோர்வேக்கு வருகின்ற 31 ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள நிலையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல பாகிஸ்தான், டார்பர், சோமாலியா, சிம்பாவே மற்றும் மிகச் சமீபமாக கொங்கொ நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகளுக்கும் பான் கி மூன் ஒருவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

இவரோடு சர்வதேச விவகாரங்களை பேச முடியாதுள்ளதாகவும், எப்படி உலக விவகாரத்தை கையாள்வது என்ற தொழில் நுட்பம் தெரியாத ஒருவராகவும், பேசும்போது கோபமாக சகலதையும் நிராகரிப்பவராகவும் இவர் இருப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் கூறப்படுகிறது. இவ்வாறான குற்றச் சாட்டுகளால் பான் கி மூனின் நோர்வே விஜயம் ரத்துச் செய்யப்படுமா என்று கேட்டபோது அவ்விஜயம் திட்டமிட்டபடி நடக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஐ.நா ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.