greetings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
greetings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

new year promise: ponkal greetings

திருவள்ளுவர் புத்தாண்டில் மேற்கொள்வோம்
பொங்கல் சூளுரை

வாழ்க தழிழ்மொழி; வளர்க குறள்நெறி
உழவர் திருநாள்; புலவர் பெருநாள்
மக்கள் மகிழ்நாள்; வண்டமிழ்ப் பொங்கலில்
எடுக்கும் சூளுரை இன்தமிழ் போற்றலே
பொங்குக பாலே! பொலிக நல்வளம்!
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரந்து வையகம்
குறள்நெறி போற்றிக் கூடி வாழ்கவே.
குறன்நெறி மலரவும் குடியர சோங்கவும்
ஆற்றுவோம் தொண்டே அனைவரும் வம்மின்;
போற்றுவோம் இறையை; பொங்குக இன்பமே.

 - பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
 குறள்நெறி (இதழ் 1 மலர் 1) தை2,1995:15.1.1964


நன்றி : நட்பு
http://ebook.natpu.in/index.html

--

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

சனி, 31 டிசம்பர், 2011

Every day is our day எல்லா நாளும் நம் நாளே என்றும் நமக்கு நன்னாளே! Happy New year 2012

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம்
எல்லா நாளும் சிறந்திடுவோம்!

வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!

வாழ்க்கை என்பது போராட்ட மானால்
போரில் கலந்து வென்றிடுவோம்!

வாழ்க்கை என்பது விளையாட் டெனில்
ஆடி வாகை சூடிடுவோம்!

வாழ்க்கை என்பது பயண மாயின்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்!

வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!

வாழ்க்கை என்பது கணக்கு என்வே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!

வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!

வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!

எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!

மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!

நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!

நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!

நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!

எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்



என்றும் நமக்கு நன்னாளே!~நட்பு இணைய இதழ்

வியாழன், 14 ஏப்ரல், 2011

chithirai year greetings of Jaya : ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து


சென்னை, ஏப்.13- அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வளர்ச்சியையும், மலர்ச்சியையும், விடுதலையையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில், மக்களாட்சி மலரும் ஆண்டாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆண்டாக, இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக மாற்றும் ஆண்டாக, மாற்றங்களை மக்களுக்குத் தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்!மலர இருக்கும் கர ஆண்டில் தமிழர் தம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இனிமையும், இன்பமும் கொழிக்க வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

தாங்களுக்கும் எங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் கோடானு கோடி தமிழர்களின் உணர்வை மதித்து, சித்திரை திங்களை தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்கவும்.
By S GNANASEKAR
4/13/2011 7:33:00 PM
நீங்கள் என்றைக்கு மன்னார்குடி மாபியா கும்பலான சசிகலாவின் பிடியில் இருந்து விடுபடுகிரீர்களோ அன்றைக்குத்தான் உங்கள் தொண்டர்களுக்கு உண்மையான தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக இருக்கும் என பணிவுடன் தெரிவிக்க கடமைபட்டுல்லன். கரிசல் இரவி, சிதம்பரம்.
By ரவிச்சந்திரன்.R
4/13/2011 7:04:00 PM
உலகத் தமிழர்கள் அனைவருக்கும், மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழகத்தை சூழ்ந்திருந்த இருள், பீடைகள் ஒழிந்து மக்கள் வாழ்வில் இன்பம் தழைக்கட்டும்.
By A.Alagesan
4/13/2011 6:39:00 PM
இவ்வினிய புத்தாண்டில் இரட்டை இலை மலர்கிறது ! அதனில் மலர்கள் பூத்துக் குலுங்கப் போகிறது ! நல்ல காய்கள் விளைந்து மக்களுக்கு சுவையுள்ள கனிகளைக் கொடுக்கப் போகிறது ! புரட்சித் தலைவிக்கு பெருமைகளும் புகழும் கூடி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதுடன் உலகம் அமைதியில் திளைத்திருக்கப் போகிறது ! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! @ rajasji
By rajasji
4/13/2011 5:57:00 PM
பிறக்கும் இப்புதிய ஆண்டில் பெரும்பான்மையான மக்களின் சார்பாக ஒரு விண்ணப்பம், ஆட்சியில் அமர்ந்தவுடன் மரம்வெட்டி ராமதாஸ், கூஜா தூக்கும் தங்கபாலு, பாவம் வைகோவை விட்டுவிடுங்கள், தறுதலை கரும்பன்னி வடிவேலு,மதுரையில் ரௌடி மு க அழகிரி,இவள் கனிமொழி, பாவம் E.V.K.S. இளங்கோவனை ஒன்றும் செய்ய வேண்டாம் அவருக்கு இவர்கள் கொடுத்த நெருக்கடி கலைஞருக்கு ஆதரவாக இருந்தார், இந்த நாய்களை உள்ளே தள்ளி கழி கொடுக்க வேண்டும்.
By Tajudeen
4/13/2011 5:56:00 PM
muthalvarukku (amma avarkalukku) Nantri tamil puthaandu vazhthukkal
By Tamilan
4/13/2011 5:56:00 PM
muthalvar jeyalalitha avarkalukku nantri. Tamil Puththaandu vazhthukkal
By Tamilan
4/13/2011 5:47:00 PM
வாழ்த்துக்கள் அம்மா, நீங்கள் ஆட்சி கட்டிலில் அமர தமிழர்களின் சார்பாக மீண்டும் வாழ்த்துக்கள்.
By Tajudeen
4/13/2011 5:47:00 PM
இவ்வினிய புத்தாண்டில் இரட்டை இலை மலர்கிறது ! அதனில் மலர்கள் பூத்துக் குலுங்கப் போகிறது ! நல்ல காய்கள் விளைந்து மக்களுக்கு சுவையுள்ள கனிகளைக் கொடுக்கப் போகிறது ! புரட்சித் தலைவிக்கு பெருமைகளும் புகழும் கூடி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதுடன் உலகம் அமைதியில் திளைத்திருக்கப் போகிறது ! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! @ rajasji
By rajasji
4/13/2011 5:42:00 PM
தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தில்தான் துவங்கும். ஜெயலலிதாவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிப்போம்.மேலும் அவர் ஆட்சி அமைத்தவுடன் தமிழ் புத்தாண்டு சித்திரையில்தான் தொடங்குகிறது என்ற ஆணையை முதல் ஆணையாக பிறப்பிக்க வேண்டும். இது உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களின் அவாவாகும்.
By மு.நாட்ராயன்
4/13/2011 5:37:00 PM
Thanks J, for your acknowledgment and wishes on Tamil New Year which has been celebrated for hundreds of year not just in Tamil Nadu and other states in India but in Sri Lanka, Thailand, Cambodia, Laos..People can't change the history for their personal interest..
By Jai
4/13/2011 5:35:00 PM
இப்புத்தாண்டு உங்களுக்கும் எல்லா நலங்களையும் அளிக்கட்டும். பதவிக்கு வந்ததும் முதலில் சித்திரை முதல் நாளை புத்தாண்டு பிற்ப்பாக மாற்ற வேண்டும்.
By Nandhini
4/13/2011 5:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Chithirai thiru naal greetings by Vaiko : சித்திரைத் திருநாள்: வைகோ வாழ்த்து

தை முதல் நாளைத் தமிழ் ஆண்டுத் தொடக்கம் என
மீள் நடை முறைக்குக் கொண்டு வந்ததற்காக
நன்றி சொல்லும் நாள்
சித்திரை முதல் நாள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



சித்திரைத் திருநாள்: வைகோ வாழ்த்து


சென்னை, ஏப்.13- சித்திரைத் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நெருப்பாகத் தகிக்கும் அனல் வெயிலோடு தொடங்கும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் வழக்கம், தமிழ்நாட்டு மக்களிடம் தொடர்ந்து வருகிறது. மதுரை மூதூரில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கிறது.சித்திரைத் திங்களில் முழுநிலவு நாளில், காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் கடற்கரையில் கூடி, இந்திர விழா கொண்டாடியதாக, சிலப்பதிகாரம் கூறுகிறது.இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவீசும் விடிவெள்ளியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த திருநாளாகிய ஏப்ரல் 14-ஆம் நாளில், சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற வகையில், சாதி, மத பேதங்கள் இல்லாத சகோதரத்துவம் தழைக்க, தமிழக மக்கள் உறுதி ஏற்போம்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

ஒரு நாலு சீட்டு, கூடக் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு மெகா கூட்டணியிலிருந்து பிரிந்து, உலகமகா கொள்ளைக் காரனுக்கு ஆதரவாக தனது நிலையையே மாற்றிக் கொண்ட இந்த உத்தமரா(!) ஊழலை ஒழிக்கிறவர் என்று சொல்கிறீர்கள்! அட போங்க பொன்மலை ராஜா! நீங்க ரொம்ப அப்பாவியா இருப்பீங்க போல இருக்கு!
By வைஷ்ணவி
4/13/2011 8:10:00 PM
வசை பாடிய வாயால், கலைஞருக்கு வாழ்த்துப்பாப் பாடப் புறப்பட்ட வசன வியாபாரி இவர்! இவர் எப்படித் தமிழ்ப் புத்தாண்டு என்று துணிந்து சொல்வார். இனி ரொம்பப் பாதுகாப்பாகத்தான் வார்த்தைகளைப் பிரயோகிப்பார். சரியான வேஷதாரி.
By செந்தமிழன்
4/13/2011 8:01:00 PM
தமிழ் வருட பிறப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைகோ அவர்களே, துணிவுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறுங்கள்.
By Shankar
4/13/2011 6:14:00 PM
ஆமா ....டாக்டர் அம்பேத்காருக்கும் .... சித்திரைத் திருவிழாவிற்கும் என்ன சம்பந்தம் ?....தற்பொழுது தமிழன் தனது தனித்தன்மையினையும் ...தனது மொழி பண்பாடு கலாச்சாரம் இவைகளையும் கலப்படம் செய்து சீரழிக்காமல் விட மாட்டான் போல் தெரிகிறது ! இப்படியே நம்ப தமிழனை விட்டால் கூடிய சீக்கிரம் இந்திய சுதந்திர தினத் தன்று அமெரிக்க அதிபர் ஒபமா வின் பிறந்த நாள் வந்தால் அதனைக் கொண்டாட கிளம்பி விடுவான் ! இந்த அப்பிப்பிராயத்தை நான் சொன்னதால் நான் டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு விரோதமானவனாக யாராவது கருதினால் அது சரியல்ல !!! @ rajasji
By rajasji
4/13/2011 5:56:00 PM
தமிழ்ப் புத்தாண்டை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது. சித்திரை முதல் நாளே, சித்திரைத் திருநாளே தமிழ்ப் புத்தாண்டு. தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய வம்பர்கள் விரைவில் ஆட்சியிலிருந்து மாற்றப்படுவார்கள். இந்த வருடத்திய தமிழ்ப் புத்தாண்டின் பலன் இது. சக்திவேல்
By சக்திவேல்
4/13/2011 5:39:00 PM
தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள் என்று கூற வேண்டியது தானே !! ஏன் மழுப்ப வேண்டும் ???!!!!
By எல் சி நாதன்
4/13/2011 4:48:00 PM
பாவம், இப்படிப்பட்ட அறிக்கைகள் மூலமாக‌த்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என தமிழ் நாட்டுக்கு தெரிய வரும்
By thamiimul அன்சாரி
4/13/2011 4:41:00 PM
மக்கள் மாற்றம் வேண்டி மாறி மாறி வாக்களித்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர மக்களின் மனதில் மக்களாட்சி மீது வெறுப்பு பரவலாக பெருகியே வருகிறது! .. .. இந்நிலை போக்கிட வைகோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி அணி மலர்வது காலத்தின் கட்டாயம்! வேறு எவரையும் நம்பிப் பயனில்லை என்பதே யதார்த்தம்! .... .... .... முல்லைப் பெரியாறு போராட்டத்தில் வைகோ தனது தலைமையை ஏற்றுக் கொண்ட இயக்கங்களோடு இணைந்து சிறப்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததைப் போன்றே, தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் தனது தலைமையை ஏற்கின்ற இயக்கங்களை ஒருங்கிணைத்து தன்னம்பிக்கையோடு எப்போதும் போல் துணிச்சலாக செயல்பட்டால் போதும்! மோடி, நிதிஸ் குமார் வரிசையில் வைகோ இடம்பெற்று தமிழ் நாடும் குஜராத், பீகார் வரிசையில் ஊழலை ஒழித்திடும் நடவடிக்கைகளில் இறங்கி மறுமலர்ச்சிப் பாதையில் நாடு ஏற்றம் பெற முடியும்! தமிழகம் வாழ் இந்தியர் அனைவருக்கும், வருங்காலம் வைகோவின் தலைமையில் சிறப்பாக அமைந்திட சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
By பொன்மலை ராஜா
4/13/2011 4:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *