new year greettings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
new year greettings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 1 ஜனவரி, 2013
புதன், 4 ஜனவரி, 2012
New year greetings, All the days are ours:எல்லா நாளும் நம் நாளே
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம்
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது போராட்ட மானால்
போரில் கலந்து வென்றிடுவோம்!
போரில் கலந்து வென்றிடுவோம்!
வாழ்க்கை என்பது விளையாட் டெனில்
ஆடி வாகை சூடிடுவோம்!
ஆடி வாகை சூடிடுவோம்!
வாழ்க்கை என்பது பயண மாயின்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கணக்கு என்வே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!
வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!
நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!
நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
என்றும் நமக்கு நன்னாளே!~நட்பு இணைய இதழ் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கணக்கு என்வே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!
வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!
நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!
நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சனி, 31 டிசம்பர், 2011
Every day is our day எல்லா நாளும் நம் நாளே என்றும் நமக்கு நன்னாளே! Happy New year 2012
ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம்
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது போராட்ட மானால்
போரில் கலந்து வென்றிடுவோம்!
வாழ்க்கை என்பது விளையாட் டெனில்
ஆடி வாகை சூடிடுவோம்!
வாழ்க்கை என்பது பயண மாயின்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கணக்கு என்வே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!
வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!
நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!
நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது போராட்ட மானால்
போரில் கலந்து வென்றிடுவோம்!
வாழ்க்கை என்பது விளையாட் டெனில்
ஆடி வாகை சூடிடுவோம்!
வாழ்க்கை என்பது பயண மாயின்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கணக்கு என்வே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!
வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!
நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!
நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
என்றும் நமக்கு நன்னாளே!~நட்பு இணைய இதழ்
சனி, 1 ஜனவரி, 2011
english new year:Officeal met C.M.: ஆங்கிலப் புத்தாண்டு: முதல்வருடன் பேரவைத் தலைவர், அதிகாரிகள் சந்திப்பு
First Published : 01 Jan 2011 12:33:26 PM IST
Last Updated :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல்வர் தாம் எண்ணுவதுபோல் தமிழ்ப்புத்தாண்டிற்கு முதன்மை வரவேண்டும் எனில் ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்துப் பரிமாறும் சடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/1/2011 7:04:00 PM
1/1/2011 7:04:00 PM
new year greettings from Thamizh Eezha govt.: ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து
தமிழ் ஈழ அரசிற்கு வாழ்த்துகள். ஆக்கமுறையிலான பணிகளால் உலக மக்களின் உள்ளங்களை வென்றெடுத்து விரைவில் தமிழ் ஈழக் குடியரசை அமைக்க ௨௦௧௧ ஆம் ஆண்டுப் பிறப்பில் வாழ்த்துகிறேன். தமிழ்ஈழம் அமைந்தது. தமிழரெல்லாம் மகிழ்ந்தனர். தரணியெங்கும் வாழ்த்தினர். பாரெங்கும் தமிழ் ஈழக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்னும் செய்தி விரைவில் வரட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து
First Published : 01 Jan 2011 04:10:41 PM IST
Last Updated :
கொழும்பு, ஜன.1- நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதிய ஆண்டு மலரும் இத் தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.கடந்து சென்ற 2010 ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப் புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசகங்களும் தனித்தனியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கும் தாயகத்துக்கும் இடையிலான தொடர்பு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறோம். நமது பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. நமது பூமி சிங்கள பௌத்த இனவாதக் குழுவினரால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்களால், அரசியல் தலைமைகளால் பங்குகேற்பதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதைய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஆவன செய்யும். தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்படுவதில் இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புகள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது. இரண்டாவதாக, சர்வதேசரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது. புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழ் ஈழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.இவ்வாறு ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
new year greetings by leaders.:தலைவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து
தலைவர்களின் தன்நலக் கனவுகள் சிதையவும் நாட்டு மக்களின் நன்னலக் கனவுகள் ஈடேறவும் தினமணி நேயர்கள் சார்பில் வாழ்த்துகள். இனியேனும் விழிக்கட்டும் இந்தியம். இனிதாக மலரட்டும் தமிழ் ஈழம். இனிய வாழ்வைத் தரும் இனிதான ஆட்சிகள் அமையட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 01 Jan 2011 12:14:00 AM IST
Last Updated :
சென்னை,டிச.31: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா: நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தையும், வளமையையும் போற்றிப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.முதல்வர் கருணாநிதி: பல்வேறுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது இந்த அரசு. இந்த அடிப்படையில் இந்த புத்தாண்டிலும் தமிழர் நலம் காத்து, தமிழகத்தின் வளம் பெருக்கி என்றும் வெற்றிகளை குவித்திடுவோம். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா: மலர்கின்ற புத்தாண்டில் அராஜகம், அத்துமீறல், வன்முறை ஆகியவை ஒழிந்து, அமைதியும், ஆனந்தமும் பிறக்கட்டும். 2011-ல் உண்மையான மக்களாட்சி மலர நாம் அனைவரும் புத்தாண்டில் உறுதி ஏற்க வேண்டும்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு: இந்தப் புத்தாண்டில் ஜாதி, மத, மொழி, இன பேதங்களைத் தாண்டி தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காப்போம்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: கடந்த புத்தாண்டில் மனதில் மேற்கொண்ட தீர்மானங்களை எண்ணிப் பார்த்து, அவற்றில் முடிக்க முடியாத தீர்மானங்களை இந்த ஆண்டில் நிறைவேற்ற சபதமேற்போம்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நலிவுகளில் இருந்து நாட்டை மீட்க, வரும் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வோம்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்: உயர்வு தாழ்வு இல்லாத சமநிலை சமுதாயம் அமைய வேண்டும். 2011-ல் அமைதியும், முன்னேற்றமும் ஏற்படும் வகையில் நல்லாட்சி மலர ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்: சமத்துவ உலகை நோக்கி அழைத்துச் செல்லும் சோசலிசப் பாதையை அமைப்பதற்கான போராட்டத்தை வேகப்படுத்தும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன்: தமிழர் பண்பாட்டைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை மீட்க வேண்டிய கடமைகள் நம் முன் நிற்கின்றன. புத்தாண்டில் இவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய மாற்றத்துக்காகப் பாடுபட உறுதியேற்போம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: கடந்த ஆண்டு எவ்வாறு கடந்து போனது என்பதை எண்ணிப் பார்க்கும் அதே வேளையில் புத்தாண்டு எவ்வாறு அமைய வேண்டும் என்பது நமது தொலைநோக்குப் பார்வையிலும், திட்டமிடுவதிலும் அடங்கியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திருநாவுக்கரசர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர், கொங்குநாடு முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
new year greetings by P.M.: தலைமை யமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து
விலைவாசி உயர்வு, ஆட்சியதிகாரத்தில் தூய்மை, தேசியப் பாதுகாப்பு,எளிய மக்களுக்கு பாடுபடுதல் ஆகியவற்றில் இப்போது எதிர்மறைச் செயலபாடுகள் அல்லவா உள்ளன! இதை இரட்டிப்பாக்கப் போகிறாரா! ௨௦௧௧ ஆம் ஆண்டிலாவது மனித நேயம் கொண்டு நம் நாட்டு மக்களையும் நம் அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களில் எஞ்சியவர்களையும் வாழவிடும் ஆட்சியைத் தரட்டும்! நல் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 01 Jan 2011 12:00:46 AM IST
Last Updated :
புது தில்லி, டிச. 31: நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நம்பிக்கையற்ற, மனச்சோர்வு நிலையை நீக்கி இந்த ஆண்டில் புதிதாகத் தொடங்குவோம். விலைவாசி உயர்வு, ஆட்சியதிகாரத்தில் தூய்மை, தேசியப் பாதுகாப்பு, சாதாரண மக்களுக்கு பாடுபடுதல் ஆகியவற்றில் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
