counseling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
counseling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தனியார் தொழிற்பயிற்சிகளில் இலவசமாக த் தொழிற்பயிற்சி

தனியார் தொழிற்பயிற்சிகளில் இலவசமாக த் தொழிற்பயிற்சி பெற கலந்தாய்வு

First Published : 16 Aug 2012 06:12:24 PM IST


சென்னை, ஆக.,16: தமிழ்நாடு முதலமைச்சர் தொiலைநோக்குத் திட்டம் 2023-ன் படி அடுத்த 11 ஆண்டுகளில் 20 மில்லியன் மக்களுக்கு திறன் வளர்க்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற இலக்கினை நிறைவேற்றிடும் வகையில் தமிழகத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிரப்பப்படாமல் உள்ள 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலைங்களில் நடக்கும் மாவட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்பிடவும், அம்மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஆகும் செலவை அரசே அந்தந்த தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற இடம் கிடைக்காத மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேர்ந்து பயன்பெறலாம்.  சென்னை மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சிநிலையங்களில் காலியாக அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பயிற்சி இடங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் துணை இயக்குநர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சென்னை-21என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.தங்களது கல்வி மற்றும் சாதி சான்றிதழ் நகலுடன் நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறும், விரைவில் நடைபெற உள்ள மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற்று பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் இது குறித்த விபரங்களுக்கு 044 – 25209268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

திருமணத்திற்கு த் தேவை ஆற்றுப்படுத்தல் !

சொல்கிறார்கள்  தினமலர்


                                           திருமணத்திற்கு த் தேவை ஆற்றுப்படுத்தல் !
மன நல ஆலோசகர் லட்சுமணன்: பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போவதற்கு காரணம், பரஸ்பரம் புரிதல் இல்லாமை தான். அதனால் தான், காதல் திருமணமோ, பெரியோர் நிச்சயித்த திருமணமோ, எதுவானாலும், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத்திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்களையும், குறைகளையும் வெளிப்படையாக பேசுவதில்லை. தன்னை தியாகியாகவும், உதவும் குணமுடைய ஆளாகவும் காட்டிக் கொள்வர். திருமணத்திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத்தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலைகுலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதிகலங்க வைக்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திருமண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போது தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத்திற்கு முந்தைய, "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு பிந்தைய, "கவுன்சிலிங்'கில், தாம்பத்தியம் பற்றிய அலசல் மிக மிக முக்கியமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்படும் தகராறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், "செக்ஸ்' பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை அலசுவோம். "செக்ஸ்' பற்றி புரிதலே இல்லாமல் இருப்பவர்களுக்கு, "கவுன்சிலிங்'கும், பிரச்னைகளைப் பொறுத்து, மருத்துவத் தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக்காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுக வேண்டும். இதனால், வாழ்க்கையை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.

செவ்வாய், 10 மே, 2011

counseling at thiruchi, madurai and kovai - Vaiko demant: திருச்சி, மதுரை, கோவையில் கலந்தாய்வுநேர்முகம் நடத்த வேண்டும்: வைகோ

மக்கள் கருத்தை எதிரொலிக்கும் சரியான வேண்டுகோள். உரியவர்கள் கருத்து செலுத்திஆவன செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திருச்சி, மதுரை, கோவையில் கவுன்சலிங் நடத்த வேண்டும்: வைகோ

First Published : 10 May 2011 04:38:18 AM IST


 சென்னை, மே 9: உயர் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று நிறைந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கி வாழ்வில் முன்னேற உறுதியேற்க வேண்டும். அதன் மூலம் பெற்றோருக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.  தமிழக அரசின் உயர் கல்வித் துறை நடத்தும் உயர் கல்விக்கான கலந்தாய்வு இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்படுகிறது. வசதி இல்லாதவர்கள் காலையில் சென்னைக்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து மாலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.  தகவல் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சென்னையில் மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.