சனி, 8 செப்டம்பர், 2012
இன்று "இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் அடையாளம்...
உயர்நீதிமன்றத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா: காலனை வென்ற நீதிமன்றம்! chennai high court completed 150 years
புதன், 29 ஆகஸ்ட், 2012
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
இப்படியெல்லாம் கேட்டால் என்ன செய்வது? மத்திய அரசைக் ்காட்டிக் கொடுத்தால் தமிழக அரசு நிலைக்க முடியுமா? தமிழக அரசு உடந்தையாக இருந்ததைத்தான் ஒத்துக கொள்ள முடியுமா ? ஏற்னெவேதான் விரும்பினால் கேட்டால் கேட்டு முடியாது என்ற மறுமொழியைத் தெரிவிப்பதாகக் கூறியாயிற்றே! இதை விட வேறு வளா வளா கொளாகொளா விடை வேண்டுமா? சாமானியர்கள் ஆட்சி செய்வது மேட்டுக்குடி நீதிபதிகளுக்குப் பிடிக்கவில்லையா? எதிர்க்கட்சியாக இருந்தால் வீரமாக நடந்து கொள்வோம என்பதும் இல்லையேல் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடப்போம் என்பது்ம் இவர்களுக்குத் தெரியாதா என்ன? சரி! சரி! மாநாடு முடியும் வரையாவது வழக்கினை ஒத்தி வைக்கச் செய்வோம்.
(இலக்குவனார் திருவள்ளுவன்)
4/30/2010 2:59:00 AM
§"$&/$&((//$/%$"///&%$§(/%/§///%%$§)(=/($$"§/=)((&%$§"&%&(%&(%/§$§"&%%§"&%%$$%$$§%$$§%$$$%$"%&&%"!$$/((%$§$%$§§/&%(/%&&§§"%%&$"%%&%%&%%$::...இது என்னடான்னு பாக்குறீங்களா !...தமிழ்நாடு அரசு சீலிடப் பட்ட கவருல நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கை !!! @ rajasji
4/30/2010 1:37:00 AM
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
தமிழ்நாடு உயர்நீதி மன்றம் எனப் பெயர்சூட்ட வேண்டும்; தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்பதுடன் முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத தமிழ்தான் இடம் பெற வேண்டும் எனப் போராடி வெற்றி காணுங்கள். பிற மாநிலங்களில் மொழி உணர்வு இயல்பாக உள்ளதாலும் அந்தந்த மொழியாளர்களே முதன்மைப்பதவிகளில் உள்ளமையாலும் விசையைத் தட்டினால் விளக்கொளி எங்கும் சீராகப் பரவுவதுபோல் மொழிசார் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஆணை தேவை. ஆணை இருந்தாலும் பொறுப்பில் உள்ளவர்க்கேற்ப நடவடிக்கை இருக்கும் என்ற அவல நிலை உள்ளது. மேலும் மாநிலத் தன்னாட்சி பேசும் கட்சியினர் இது போன்ற அதிகாரங்களையாவது பெறலாமே. தமிழுக்கே தலைமை;தமிழர்க்கே முதன்மை என்னும் நிலை தமிழ்நாட்டில் நிலவினால்தான் தமிழ் வாழும். தமிழர் வளம் பெறுவர்.மாறான சூழ்நிலையிலான வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/2/2010 3:43:00 AM
ஞாயிறு, 31 ஜனவரி, 2010
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்-அமைச்சர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரை `சென்னை ஐகோர்ட்டு' என்று மாற்றம் செய்வது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
`மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டதை `தமிழ்நாடு மாநிலம்' என்று அண்ணா பெயர் மாற்றம் செய்தார். அதுபோல `மெட்ராஸ்' என்ற பெயரை சென்னை என்று பெயர் மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார். அதன்படி, சென்னை என்ற பெயரில் அனைத்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், ஐகோர்ட்டு மட்டும் `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரிலே இயங்குகிறது.