புதன், 29 ஆகஸ்ட், 2012
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
தமிழ்நாடு உயர்நீதி மன்றம் எனப் பெயர்சூட்ட வேண்டும்; தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்பதுடன் முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத தமிழ்தான் இடம் பெற வேண்டும் எனப் போராடி வெற்றி காணுங்கள். பிற மாநிலங்களில் மொழி உணர்வு இயல்பாக உள்ளதாலும் அந்தந்த மொழியாளர்களே முதன்மைப்பதவிகளில் உள்ளமையாலும் விசையைத் தட்டினால் விளக்கொளி எங்கும் சீராகப் பரவுவதுபோல் மொழிசார் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஆணை தேவை. ஆணை இருந்தாலும் பொறுப்பில் உள்ளவர்க்கேற்ப நடவடிக்கை இருக்கும் என்ற அவல நிலை உள்ளது. மேலும் மாநிலத் தன்னாட்சி பேசும் கட்சியினர் இது போன்ற அதிகாரங்களையாவது பெறலாமே. தமிழுக்கே தலைமை;தமிழர்க்கே முதன்மை என்னும் நிலை தமிழ்நாட்டில் நிலவினால்தான் தமிழ் வாழும். தமிழர் வளம் பெறுவர்.மாறான சூழ்நிலையிலான வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/2/2010 3:43:00 AM