tamilnadu high court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamilnadu high court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்



 சென்னை, ஆக. 28: சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி வழக்குரைஞர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் வழக்குரைஞர் கே.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  உயர் நீதிமன்றத்தில் தமிழையும் வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட பலரும் இந்தக் கோரிக்கையை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர்.  இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா வரும் செப்டம்பர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். ஆகவே, இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக தமிழையும் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அங்கீகரித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.  அதேபோல் சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.  இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிடுமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதல் கையெழுத்து இயக்கத்தை வழக்குரைஞர்கள் மேற்கொள்வார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் செப்டம்பர் 3-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் பாலு.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ், பொருளாளர் சுதா, வழக்குரைஞர்கள் ரஜினி, மு. பழனிமுத்து, பாரி, இரா. சிவசங்கர், முத்துராமலிங்கம், விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்



சென்னை, ​​ பிப்.2: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மன்றம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக,​​ அந்த மன்றத்தின் தலைவர் அய்யாதுரை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துக்கு 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்று ஆங்கிலேயர்கள் பெயரிட்டனர்.​ இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 'மெட்ராஸ் மாகாணம்' பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவானது.மெட்ராஸ் மாகாணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமானது.​ ஆனால்,​​ தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பிறகு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமற்றதாகும்.எனவே,​​ சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும்.உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழி...சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழ்நாட்டின் தலைமை நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தில் தமிழ் உள்ளே நுழைய முடியவில்லை.உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக மாற்றக் கோரி தமிழக சட்டப்பேரவையில் 2008-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​ அந்த தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை.பெயர்ப் பலகை...கேரளம்,​​ கர்நாடகம்,​​ ஆந்திர மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களின் பெயர்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற்றுள்ளன.​ ஆனால்,​​ சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் இடம்பெறவில்லை.​ இதற்காக எங்கள் மன்றம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ் மன்றம் சார்பில் என்.எஸ்.சி.​ போஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழ்நாடு உயர்நீதி மன்றம் எனப் பெயர்சூட்ட வேண்டும்; தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்பதுடன் முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத தமிழ்தான் இடம் பெற வேண்டும் எனப் போராடி வெற்றி காணுங்கள். பிற மாநிலங்களில் மொழி உணர்வு இயல்பாக உள்ளதாலும் அந்தந்த மொழியாளர்களே முதன்மைப்பதவிகளில் உள்ளமையாலும் விசையைத் தட்டினால் விளக்கொளி எங்கும் சீராகப் பரவுவதுபோல் மொழிசார் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஆணை தேவை. ஆணை இருந்தாலும் பொறுப்பில் உள்ளவர்க்கேற்ப நடவடிக்கை இருக்கும் என்ற அவல நிலை உள்ளது. மேலும் மாநிலத் தன்னாட்சி பேசும் கட்சியினர் இது போன்ற அதிகாரங்களையாவது பெறலாமே. தமிழுக்கே தலைமை;தமிழர்க்கே முதன்மை என்னும் நிலை தமிழ்நாட்டில் நிலவினால்தான் தமிழ் வாழும். தமிழர் வளம் பெறுவர்.மாறான சூழ்நிலையிலான வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *