car லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
car லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஏப்ரல், 2013

ஒரு புதுப்படி எரிபொருளில் 1000 கல் செல்லும் உந்து!

ஒரு புதுப்படி எரிபொருளில் 1000 கல் செல்லும் உந்து!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களின் அண்மைக்கால உழைப்பின் மூலம், ஒரு லிட்டர் எர்பொருளில் 1000 கி.மீ. தொலைவு வரை செல்லும் கார் வடிவமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மிகவும் லேசான எடை கொண்ட இந்தக் காருக்கு ஈக்கோ-துபை1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறுதிக் கட்ட கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த இரு வாரங்களில் இதன் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
துபை ஆடவர் கல்லூரியின் தொழில்நுட்ப உயர் கல்லூரிப் பிரிவு ஆராய்ச்சி மாணவர்களின் இரண்டு வருட முயற்சியில் இந்தக் கார் உருவாகியுள்ளதாம். இது அரை மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் நீளமும், அரை மீட்டர் உயரமும், 25கிலோ எடையும் கொண்டதாக அமைந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது ஓட்டத்துக்குத் தயாராகும் என்றும், யு.ஏ.இ. நாட்டில் இதுபோல் 4 தயாரிப்புகள் சோதனை முயற்சியில் உள்ளன என்றும் கூறியுள்ளனர்.
இந்தக் கார் தயாரிப்பின் பின்னணியில் உள்ள ஒரு மாணவரான அஹ்மத் காமிஸ் அலி சுவைதி கூறுகையில், “பெட்ரோல் கடைசி வரை இருக்கப் போவதில்லை. ஒரு நாள், பெட்ரோல் தீர்ந்து போய் அதற்கு அல்லாடும் நிலையும் வரும். எனவே, உள்ளூர் அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  ஈக்கோ-கார்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்போது நாங்கள் இதைத் தொடங்கியுள்ளோம். இதுவே யுஏஇ நாட்டின் எதிர்காலம்” என்றார்.
வரும் ஜூலை 4-7ம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் உலக ஈக்கோ-மாரத்தானில் இந்தக் கார் இடம்பெறும் என்று கூறியுள்ளனர். குறைந்த எரிபொருளில் எவ்வளவு உச்சபட்ச தொலைவு கார் செல்கிறது என்பது போட்டியாம். இந்த இலக்கை அடைவதற்காக, மாணவர்கள் மின்சாரம், சூரிய ஒளி, மரபு சாரா எந்த வழிகளையும் மேற்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டதாம்.
முன்னர், பிரான்ஸ் நாட்டின் பாலிடெக் நாண்டெஸ் பல்கலை மாணவர்கள் 4,900 கி.மீ. தொலைவு பயணம் செய்யக்கூடிய ஒரு காரை வடிவமைத்திருந்தனராம். அதுவே சாதனையாக உள்ளது. 


ஒரு  கல்  கல்நெய்யில்  1000  கல்  ஓடும்உந்து: துபாய் மாணவர்கள் சாதனை
  
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை
அபுதாபி, ஏப். 4-

ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர். கோலாலம்பூரில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7 தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

நாடு எங்கே போகிறது? வெறி பிடித்த மாணாக்கர்களும் பிற இளைஞர்களும்

மாணவி அடித்துக் கொலை:மாணவர்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்

தினமணி  First Published : 11 Aug 2012 02:15:39 PM IST

Last Updated : 11 Aug 2012 03:47:06 PM IST

ஹிசார், ஆக., 11 : ஹரியானா மாநிலம் ஹிசரில் உள்ள ஜிஜஸ்ட் கல்லூரி வளாகத்தில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவி வர்ஷா யாதவ், அவளது ஆண் நண்பரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது என்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும்.தன்னை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதால் கொலை செய்தேன் என்று இந்த படுபாதக செயலைச் செய்த 19 வயதாகும் பிடெக் மாணவன் சேட்டன் ஷியோரன் கூறியுள்ளான். மேலும், தான் கொலை செய்ததை மறுக்கவில்லை என்றும் காவல்துறையிடம் கூறியுள்ளான்.  கொலை நடந்த இடத்தில் ஏராளமான மாணவர்கள் இருந்துள்ளனர் என்றும், ஒருவர் கூட அந்த பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வளரும் இளைஞர்களுக்கு சமுதாய நோக்கே இல்லாமல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தனர்.
கருத்துகள்

வளரும் தலைமுறைனர் காதல் ,சினிமா இவற்றை பார்த்து கெடுகின்றனர்.பண்பாடு இல்லாத பாட முறைகளே காரணம்
By venkatasubramanian

8/11/2012 2:46:00 PM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தில்லியில் இளம்பெண்ணை க் கடத்தி 8 பேர் கற்பழித்த கொடூரம்
டெல்லியில் இளம்பெண்ணை கடத்தி 8 பேர் கற்பழித்த கொடூரம்
புதுடெல்லி, ஆக.11-
 
டெல்லியில் உள்ள டெல்லி ஜல்போர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சுஜாதா 22 வயது (பெயர் மாற்றப்பட்டள்ளது). அவரது தோழியின் காதலர் இந்திரஜித். இவர் 55-வது செக்டார் அருகே உள்ள ஜர்சைடலி பகுதியில் வசித்து வருகிறார். இந்திரஜித்துக்கு தன் காதலியின் தோழியான சுஜாதா மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.
 
டெல்லியில் பதர்பூர் பகுதியில் வசித்து வரும் சுஜாதாவிடம் இந்திரஜித் போனில் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கும், என் காதலிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவளை பிரிட்டானியா தொழிற்சாலை அருகே வரச்சொல்லி உள்ளேன். நீங்கள் வந்து பேசி எங்கள் தகராறை தீர்த்து வைக்க வேண்டும் என்று இந்திரஜித் கூறினார்.
 
இதை உண்மை என்று நம்பி சுஜாதா இரவு 8 மணி அளவில் அங்கு சென்றார். அங்கு இந்திரஜித் தன் நண்பர்கள் ஜாகா, நவீன், சிந்து ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் சுஜாதாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். ஓடும் காரிலேயே சுஜாதாவை இந்திரஜித் கற்பழித்தான். பிறகு அவனது நண்பர்களும் அவரை கற்பழித்தனர். இதற்கிடையே இந்திரஜித்தின்  நண்பர்கள் மேலும் 4 பேர் மற்றொரு காரில் அங்கு வந்தனர்.
 
அவர்கள் அந்த பெண்ணை டெல்லி- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கும் வெட்டவெளியில் அந்த பெண்ணை நண்பர்கள் 8 பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்தனர். நள்ளிரவு 1 மணி வரை 8 பேரிடமும் சிக்கி அந்த பெண் படாதபாடு பட்டார்.
 
2 மணி அளவில் அந்த பெண்ணை காரில் ஏற்றி வந்த இந்திரஜித் பல்லாப்கர் மேம்பாலம் பகுதியில் தள்ளி விட்டு சென்றான். உடனே அந்த பெண் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்திரஜித் கைது செய்யப்பட்டான். மற்ற 7 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.