வ.உ.சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.உ.சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 17 செப்டம்பர், 2021
'செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ – பன்னாட்டுக் கருத்தரங்கம்
என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள் இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . .
ஞாயிறு, 12 மே, 2013
பாரதி, வ.உ.சி.யால் போற்றப்பட்ட தலைவர் வரதராசுலு
பாரதி, வ.உ.சி.யால் போற்றப்பட்ட தலைவர் வரதராசுலு (நாயுடு)
பாரதியார், வ.உ.சிதம்பரனார், திரு.வி.க. போன்ற
தலைவர்களால் போற்றப்பட்ட தேசியத் தலைவர் வரதராஜுலு நாயுடு என எழுத்தாளர்
பெ.சு.மணி குறிப்பிட்டார்.
வரதராஜுலு நாயுடு குடும்பத்தினர் சார்பில் குருகுலம் என்ற அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பெ.சு.மணி பேசியதாவது:
வரதராஜுலு நாயுடுவின் தேசியப் பணிகள் குறித்து 1934-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ளார். "கடந்த 20 ஆண்டுகளாக மேடைகளில் பேசி வரும் வரதராஜுலு நாயுடு, நாட்டின் விடுதலைக்காக கிராமப்புற மக்களிடத்திலும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார். நமது நாடு இழந்த பண்டைய பெருமைகளை மீட்டெடுக்க மக்களைத் தூண்டி வருகிறார். தமிழ்நாட்டில் இதழியல் துறையின் முன்னோடியான ஜி.சுப்பிரமணிய ஐயரைப் போலவே வரதராஜுலு நாயுடுவும் இதழியல் பணிகளில் தனிச் சுடராக விளங்குகிறார்' என்று அவர் பாராட்டியுள்ளார்.
இதேபோல் பாரதியார், சுப்பிரமணிய சிவா, திரு.வி.க., சி.ஆர்.தாஸ் என பலராலும் போற்றப்பட்ட சிறந்த தலைவராக வரதராஜுலு நாயுடு விளங்கினார்.
ஒவ்வொரு வகுப்பினரும் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியபோதிலும், வகுப்புவாதத்தை ஆதரிக்க மறுத்த தலைவர் அவர். தேசியம்தான் நாட்டின் எல்லா நோய்களுக்கும் தீர்வு காணும் சிறந்த மருந்து என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.
பிரமணர் அல்லாதவர்களின் உரிமைகளை சற்றும் விட்டுக் கொடுக்காதவர். அதே நேரத்தில் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நீதிக் கட்சியை வேரறுக்கப் போராடியவர்.
என்னைப் பொருத்தவரை அவருடைய பணிகளிலேயே அவரது இதழியல் பணிகளைத்தான் மிகச் சிறந்த பணி என்று கூறுவேன். பிரபஞ்சமித்திரன் இதழ் மூலமாகவும், தமிழ்நாடு இதழ் மூலமாகவும் தமிழுக்கும், தேசியத்துக்கும் வரதராஜுலு நாயுடு ஆற்றிய பணிகள் ஏராளம்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையானது கல்வி. அத்தகைய கல்வி சாதாரண ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளைத் தொடங்கி கல்வி அளித்தவர். அவரது வழியிலேயே தற்போது அவரது குடும்பத்தினரும் கல்விப் பணிக்காகத் தொடங்கியுள்ள குருகுலம் அறக்கட்டளை வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் மணி.
முன்னதாக வரதராஜுலு நாயுடு குறித்து அறிமுகவுரையாற்றிய அவரது மகன் வி.தயானந்தா, "சித்த மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கிய எனது தந்தை, "மின்சார ரசம்' என்ற பெயரில் அக்காலத்தில் தயாரித்த வலி நிவாரண மருந்து மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. பின்னர் அரசியலில் நுழைந்த எனது தந்தையார், காமராஜர் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழைத் தொடங்கினார். பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு போன்ற தமிழ் இதழ்களையும் நடத்தினார். ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கில் திண்டிவனம் அருகே அசோகபுரி கிராமத்தில் குருகுலத்தைத் தொடங்கினார். அவரது வழியில் தற்போது குருகுலம் மூலம் மீண்டும் கல்வி சேவை வழங்கப்படுகிறது' என்றார்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் சமூகப் பணிகள் துறை இயக்குநர் அர்ச்சனா ரகுராம், குருகுலம் அறக்கட்டளைக்கான புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். "இந்தியா முழுவதும் 110 அரசுப் பள்ளி மாணவர்களோடு தொடர்பில் உள்ளோம். தினமும் ஏராளமான மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது. உணவுக்கு வழியின்றி ஏராளமான மாணவர்கள் பசியோடு வகுப்பறைகளில் அமர்ந்துள்ளதை அறிய முடிகிறது. ஏழைகள், தெருவோரக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியில் ஈடுபடுவோர் இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டும்' என்றார் அவர்.
சென்னை குழந்தைகள் நலக் குழுவின் தலைவரான அக்னேஸ் சாந்தி, எனது இளமைப் பருவத்தில் பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவசப் பாட நூல்களையும், மதிய உணவையும் கொண்டே நான் படித்தேன். அதனால் ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
நிகழ்ச்சியில், ஏழைக் குடும்பங்கள் மற்றும் தெருவோரக் குழந்தைகள் சிலரின் படிப்புக்கான கல்வி உதவித் தொகை குருகுலம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு வரதராஜுலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்த ஜியா ரோஹித் என்ற சிறுமி மலர்க் கொத்துகள் வழங்கி வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான பத்மாசினி தயானந்தா, இறுதியாக நன்றி
கூறினார்.
வரதராஜுலு நாயுடு குடும்பத்தினர் சார்பில் குருகுலம் என்ற அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பெ.சு.மணி பேசியதாவது:
வரதராஜுலு நாயுடுவின் தேசியப் பணிகள் குறித்து 1934-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ளார். "கடந்த 20 ஆண்டுகளாக மேடைகளில் பேசி வரும் வரதராஜுலு நாயுடு, நாட்டின் விடுதலைக்காக கிராமப்புற மக்களிடத்திலும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார். நமது நாடு இழந்த பண்டைய பெருமைகளை மீட்டெடுக்க மக்களைத் தூண்டி வருகிறார். தமிழ்நாட்டில் இதழியல் துறையின் முன்னோடியான ஜி.சுப்பிரமணிய ஐயரைப் போலவே வரதராஜுலு நாயுடுவும் இதழியல் பணிகளில் தனிச் சுடராக விளங்குகிறார்' என்று அவர் பாராட்டியுள்ளார்.
இதேபோல் பாரதியார், சுப்பிரமணிய சிவா, திரு.வி.க., சி.ஆர்.தாஸ் என பலராலும் போற்றப்பட்ட சிறந்த தலைவராக வரதராஜுலு நாயுடு விளங்கினார்.
ஒவ்வொரு வகுப்பினரும் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியபோதிலும், வகுப்புவாதத்தை ஆதரிக்க மறுத்த தலைவர் அவர். தேசியம்தான் நாட்டின் எல்லா நோய்களுக்கும் தீர்வு காணும் சிறந்த மருந்து என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.
பிரமணர் அல்லாதவர்களின் உரிமைகளை சற்றும் விட்டுக் கொடுக்காதவர். அதே நேரத்தில் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நீதிக் கட்சியை வேரறுக்கப் போராடியவர்.
என்னைப் பொருத்தவரை அவருடைய பணிகளிலேயே அவரது இதழியல் பணிகளைத்தான் மிகச் சிறந்த பணி என்று கூறுவேன். பிரபஞ்சமித்திரன் இதழ் மூலமாகவும், தமிழ்நாடு இதழ் மூலமாகவும் தமிழுக்கும், தேசியத்துக்கும் வரதராஜுலு நாயுடு ஆற்றிய பணிகள் ஏராளம்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையானது கல்வி. அத்தகைய கல்வி சாதாரண ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளைத் தொடங்கி கல்வி அளித்தவர். அவரது வழியிலேயே தற்போது அவரது குடும்பத்தினரும் கல்விப் பணிக்காகத் தொடங்கியுள்ள குருகுலம் அறக்கட்டளை வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் மணி.
முன்னதாக வரதராஜுலு நாயுடு குறித்து அறிமுகவுரையாற்றிய அவரது மகன் வி.தயானந்தா, "சித்த மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கிய எனது தந்தை, "மின்சார ரசம்' என்ற பெயரில் அக்காலத்தில் தயாரித்த வலி நிவாரண மருந்து மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. பின்னர் அரசியலில் நுழைந்த எனது தந்தையார், காமராஜர் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழைத் தொடங்கினார். பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு போன்ற தமிழ் இதழ்களையும் நடத்தினார். ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கில் திண்டிவனம் அருகே அசோகபுரி கிராமத்தில் குருகுலத்தைத் தொடங்கினார். அவரது வழியில் தற்போது குருகுலம் மூலம் மீண்டும் கல்வி சேவை வழங்கப்படுகிறது' என்றார்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் சமூகப் பணிகள் துறை இயக்குநர் அர்ச்சனா ரகுராம், குருகுலம் அறக்கட்டளைக்கான புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். "இந்தியா முழுவதும் 110 அரசுப் பள்ளி மாணவர்களோடு தொடர்பில் உள்ளோம். தினமும் ஏராளமான மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது. உணவுக்கு வழியின்றி ஏராளமான மாணவர்கள் பசியோடு வகுப்பறைகளில் அமர்ந்துள்ளதை அறிய முடிகிறது. ஏழைகள், தெருவோரக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியில் ஈடுபடுவோர் இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டும்' என்றார் அவர்.
சென்னை குழந்தைகள் நலக் குழுவின் தலைவரான அக்னேஸ் சாந்தி, எனது இளமைப் பருவத்தில் பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவசப் பாட நூல்களையும், மதிய உணவையும் கொண்டே நான் படித்தேன். அதனால் ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
நிகழ்ச்சியில், ஏழைக் குடும்பங்கள் மற்றும் தெருவோரக் குழந்தைகள் சிலரின் படிப்புக்கான கல்வி உதவித் தொகை குருகுலம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு வரதராஜுலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்த ஜியா ரோஹித் என்ற சிறுமி மலர்க் கொத்துகள் வழங்கி வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான பத்மாசினி தயானந்தா, இறுதியாக நன்றி
கூறினார்.
வெள்ளி, 19 நவம்பர், 2010
வ.உ.சி. சிலைக்கு மாலை
ஆங்கிலயேர்களின் அடிமையாட்சியிலிருந்து விடுதலை பெறப் பெரிதும் போராடித் தம் உடல், பொருள், வாழ்வை இழந்த தொழிலாளர் தோழர், தமிழறிஞர், விடுதலைப் போராளி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையும் நினைவு நாளையும் இந்திய அளவில் கொண்டாடச் செய்யவும்
அயலகங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் கொண்டாடச் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
அயலகங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் கொண்டாடச் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
Last Updated :
ஓட்டப்பிடாரம்,நவ.18: வ.உ.சிதம்பரனாரின் 74-வது நினைவு நாளையொட்டி ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ஓட்டப்பிடாரம்-புதியம்புத்தூர் பிரதான சாலையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினர் பெ.மோகன், ஊராட்சித் தலைவி ஜெயலட்சுமி ஆதிலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறந்த அரசு அதிகாரிகள்: வ.உ.சி.யின் நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது சிலை தூய்மைப்படுத்தப்படவில்லை. அங்கு தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படவில்லை. ஓட்டப்பிடாரத்தில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் அமைந்திருந்தும் எந்த ஓர் அரசு அதிகாரியும் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவில்லை.
ஊரின் பெயர் ஒட்டப்பிடாரமா? ஓட்டப்பிடாராமா? சரியாகக் குறிப்பிட வேண்டுகிறேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
