வாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இந்திய அரசின் காரணமாகவே இலங்கையில் தேர்தல் நடைபெற்றது: வாசன்

1 / 2 ) தனி  இறையாண்மை உடைள சிங்கள அரசின்  செயல்பாடுகளில் இந்தியா தலையிடாது எனக் கூறி அங்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகச் செயல்படாதது உண்மையா? இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தேர்தல் நடைபெறுவதாகக் கூறுவது உண்மையா? இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாததுடன் திட்டமிடுதலிலும் படையணிகளை அனுப்புவதிலும் படைக்கருவிகள், வேதியல் குண்டுகள் கொண்டு அழிப்பதிலும் உடந்தையாக இருந்த இந்திய அரசு, இப்பொழுதும் தொடரும் இனப்படுகொலைகளையும் கற்பழிப்புகளையும்  கட்டாயக் கருத்தடைகளையும் நிலப்பறிப்புகளையும் படையினரின் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தலாமே! தமிழக மீனவர்களின் படுகொலைகளைக்கூடத் தடுத்து நிறுத்த வகையற்ற சிங்கள அடிமையான இந்திய அரசு, தேர்தலுக்காகப் பொய்களை அவிழ்த்து விடுவதில் பயனில்லை. இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் இருப்பது உண்மையானால், ஈழப்பகுதிகளில் இருந்து சிங்களப் படைகளையும்  சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/ (தொடர்ச்சி  2/2 காண்க)

2 / 2) அப்படி எல்லாம் அடுத்த நாட்டில் மூக்கை நுழைக்க மாட்டோம் என்றால்,  (ஒன்று) வக்கற்ற அரசு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். (இரண்டு, ) சிங்களக் கூட்டாளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியில் தன் அணியின் செல்வாக்கிற்காக மிரட்டும் பாணியில் தமிழர் நலனில் கருத்து உள்ளதுபோல் வாசன் நடிப்பதைக் காங்கிரசார் நம்பினாலும் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது:  வாசன்

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஜி.கே. வாசன்.தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சிதான் எப்போதும் முதன்மையான அணி. இரண்டாவது அணி, மூன்றாவது அணி பற்றியெல்லாம் தெரியாது.காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 15 ஆண்டுகளாகவும், ராகுல் காந்தி 10 ஆண்டுகளாகவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மூலை முடுக்குக்கு எல்லாம் எந்தவித லாபத்தையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணிக்காகச் சுற்றுப் பயணம் செய்கின்றனர்.பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார். அதில், தமிழகம் வருகையும் ஒன்று.
சோனியா காந்தி, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவர்கள். அவர்கள் காட்டும் வழியை அனைத்து மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநிலத் தலைவர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற, உள்ளாட்சி உறுப்பினர்கள், அடிதட்டு தொண்டர்கள் பின்பற்றி வருகிறோம். அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துவது எங்களது கடமை என்ற உரிமையோடு செயல்பட்டு வருகிறோம்.கடந்த 65 ஆண்டுகளாக இந்திய மக்கள் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினாலும், அது 3 அல்லது 4 முறைதான் நிகழ்ந்தது. அதிலும், பாஜக ஒரு முறைதான் ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை பழைமை மாறாமல் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளது. விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தலைவர்களின் வழியைப் பின்பற்றி வருவதால், எங்களுடைய பணிக்கு மக்கள் உறுதியோடு வாக்களிப்பர் என நம்புகிறோம்.
இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறுவதற்காகவும், நலனுக்காகவும் அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும். இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் மூலம், தமிழர் நலன் சார்ந்த நல்ல முடிவு ஏற்பட்டுள்ளது.இந்த வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து அமைதி திரும்ப வேண்டுமானால், அப்பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே வடக்கு மாகாணத்தின் முதல் கோரிக்கை என அம்மாகாணத்தின் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தகைய சூழலை இந்திய அரசு உடனடியாக ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படுத்தினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மீனவர் பிரச்னையில் முழுமையான தீர்வு ஏற்படுவதற்கு மத்திய அரசு தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றார் வாசன்.
அப்போது, பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


வியாழன், 12 செப்டம்பர், 2013

இலங்கைக்குப் போர்க் கப்பல்களை இந்தியா வழங்கக்கூடாது: வாசன் எதிர்ப்பு

இலங்கைக்கு ப் போர்க் கப்பல்களை இந்தியா வழங்கக்கூடாது: மத்திய அமைச்சர் வாசன் எதிர்ப்பு





இலங்கைக்கு போர்க் கப்பல்களை, இந்தியா வழங்கக்கூடாது என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோட்டில் காங்கிரஸ் பிரமுகர்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை இரவு அளித்த பேட்டி:
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது பற்றிய தமிழக மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே ஆகியோரிடம் விளக்கமாக கூறி உள்ளேன்.
 இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு இந்திய போர்க் கப்பல்கள் வழங்குவது போன்ற கொள்கை முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகள் நியாயமானது என்று பிரதமரிடம் எடுத்து கூறுவேன் என்றார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் எம். எல்.ஏ.க்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, விடியல் எஸ்.சேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் எம்.யுவராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 12 மே, 2013

பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வாசன்

இலங்கை :பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வாசன்

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என பிரதமரிடம் வலியுறுத்துவோம் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சனிக்கிழமை வருகை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் வேறுநாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அதனையும் மீறி இலங்கையில் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என பிரதமரிடம் வலியுறுத்துவோம்.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே விசாரணைக்கும் தயாராக உள்ளது. ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் நாடாளுமன்றத்தை முடக்குவதிலேயே பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன. இதனை மக்கள் நன்கறிவார்கள்.
நிலையான, உறுதியான ஆட்சிக்காக கர்நாடக மக்கள் காங்கிரûஸ வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த வெற்றி வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.
வறட்சி நிவாரணம்: தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிபுணர் குழு பார்வையிட்டுச் சென்றுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும். அதன் மூலம் தமிழகத்தின் மின் தட்டுப்பாடு குறையும் என்றார் ஜி.கே.வாசன்.