வஞ்சகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வஞ்சகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

கருணாநிதி தமிழகத்துக்கு வஞ்சகம் இழைத்துவிட்டார் : செயலலிதா

கருணாநிதி தமிழகத்துக்கு வஞ்சகம் இழைத்துவிட்டார் : செயலலிதா

தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து, திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்துக்கு  துரோகம் இழைத்து விட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னலத்திற்காக, “காவிரி நதிநீர்ப் பங்கீடு”, “கச்சத்தீவு தாரைவார்ப்பு”, “இலங்கைத் தமிழர் பிரச்சனை”, “சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு” என பல்வேறு பிரச்சனைகளில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த தி.மு.க. தலைவர். கருணாநிதி, தமிழக மக்களின் எதிர்ப்பையும் தாண்டி, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கக் கூடிய, தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து துரோகம் இழைத்துள்ளதைப் பார்க்கும் போது, “எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?” என்ற பழமொழியைத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை அறிமுகப்படுத்தி, மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னர், இதனால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை சுட்டிக் காட்டி, இந்த மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தேன்.
அதற்கு “தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்துத் தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களைத் தாங்கி வெளிவருமானால் அப்போது அதனை தி.மு.க. ஆதரிக்கும்! திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்தால் அப்போது அந்த மசோதாவினை தி.மு.க. எதிர்க்கும்” என்று பதில் அளித்து இருந்தார் கருணாநிதி.
25.8.2013 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய தொடர் வலியுறுத்தலுக்குப் பின், மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறைக்கப்பட மாட்டாது என்ற திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  அதே சமயத்தில், ஆண்டு ஒன்றுக்கு 21.88 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதத்தில் வழங்க வகை செய்துள்ள மத்திய அரசு, மீதமுள்ள 
 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கான விலையை குறிப்பிடவில்லை’’ எனச் சுட்டிக் காட்டியதோடு, இந்த 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படுவதே நியாயம்; இருப்பினும் குறைந்தபட்சம் வறுமைக் கோட்டிற்கு மேல் என வழங்கப்பட்டு வரும் அரிசியின் விலையான கிலோ ஒன்றுக்கு   8 ரூபாய் 30 காசு என்ற வீதத்திலாவது இந்த 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தேன்.  இதைத் தவிர, இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நான் பாரதப் பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அந்த அறிக்கையில் எடுத்துக் கூறி, ``தமிழக மக்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்த மசோதாவை கருணாநிதி ஆதரித்தால் அது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்’’ என்றும் எடுத்துச் சொல்லியிருந்தேன்.
இதன் தொடர்ச்சியாக, 26.8.2013 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசே 14.90 லட்சம் டன் அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளாது’’ என்றும், ``அந்த அரிசியும் கிலோ ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 8.30 ரூபாய் விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்க வேண்டும்’’ என்றும், ``தி.மு.க. சார்பில் கடந்த 21.8.2013 அன்றே நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அவர்களிடம் கடிதம் மூலமாக உறுதியான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் 26.8.2013 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட திருத்தம் மசோதா நிறைவேறும் தருணத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அறிவித்தும், கடைசி வரை இதற்கான திருத்தம் கொண்டு வரப்படவில்லை. மேலும், மற்ற திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், இந்த மசோதாவினை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. ஆனால், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து தமிழகத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்திருக்கிறார்.
நான் ஏற்கெனவே பல முறை தெரிவித்துள்ளபடி, மாநிலங்களுக்குச் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கவில்லையெனில் அதற்குரிய ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும், ஆனால் உணவு தானியங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு மாநில அரசைச் சாரும் எனவும் சட்டப் பிரிவு 23-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, இந்த மசோதாவுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை-1 இல் அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மிகாமல் அரிசியின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், “உணவுக் கூப்பன்கள்” வழங்குவது, “பண மாற்றம் செய்வது” ஆகியவற்றை மத்திய அரசு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமலேயே நடைமுறைப்படுத்தவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், இந்த தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவின் 37-வது பிரிவில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அரிசியின் அளவையும், விலையையும் மாற்றுவதற்குரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்க இந்தச் சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட தமிழகத்திற்கு எதிரான மசோதாவை ஆதரித்துவிட்டு, “ஏழைகளுக்கான உணவு மசோதா தி.மு.க. ஆதரவுடன் நிறைவேறியது!” என்று தன் முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி. 
இந்த மசோதாவை ஆதரித்ததோடு நின்று விடாமல், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவை ஆதரித்ததை மறைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சித் தலைவரை ‘மணிமேகலை’ என்று வருணித்து இருக்கிறார் கருணாநிதி. இதன் மூலம், இந்த மசோதா உணவுப் பாதுகாப்பை அளிக்கும் என்ற பொய்மை தோற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார் கருணாநிதி.
 இலங்கைத் தமிழர் பிரச்சனை, பொருளாதாரக் கொள்கை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, முல்லைப்பெரியாறு பிரச்சனை என அனைத்திலும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்படும் மத்திய காங்கிரஸ் கட்சிக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
சொல்வா ரடீ! கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி!’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. 
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை தி.மு.க. ஆதரித்துள்ளதன் மூலம் இரட்டை வேடம் போடுவதில் கருணாநிதி தெளிவாக இருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு, தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்(10)

200% உண்மை. இது என்ன இப்போ நேத்தா நடக்குது .. முள்ளிவாய்க்கால் ல தொடங்கி மகள் மாநிலங்கள் அவையில் இடம் பெரும் வரையில் ஏற்கனவே தொடங்குனதுதானே
திரு மு. கருணாநிதியின் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வந்த ஆதரவு வாபஸ் இயற்க்கையானாதாக இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. மேலும், முதலில் அளித்துவந்தது நிபந்தயுடன் ஆதரவு தற்போது அளித்து வருவது நிபந்தனையற்ற ஆதரவு என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டுக் களவாணிகள் என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தமிழக மக்கள் நினைக்க மாட்டார்களா?
லூப் லைன்லே தலை வச்சிப் படுத்து "கல்லக்குடி கொண்டான்" அப்பிடின்னு பட்டம் வாங்குனாரு. இப்போ அந்த அம்மாவுக்கு "மணிமேகலை" அப்பிடின்னு பெயரைக் கொடுத்து தன குடும்பத்தை இன்னும் நல்ல வச்சிகிட்டாரு. இதுக்கு பேரு துரோகமா?
இந்த உணவு பாதுகாப்பு சட்டமே ஏற்கெனவே உள்ள பொது விநியோக முறைக்கு முற்று புள்ளி வைக்க ஐ எம் எப் ,அமேரிக்கா தரும் அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்ட சட்டம் தான்.இந்தியாவில் எல்லோரும் எல்லாவற்றிற்கும் அன்னியரை எதிர்நோக்க வைக்கும் அடிமை சாசனத்தின் முதல் அத்தியாயம் இந்த மசோதா.இதை வாய் கிழிய வழி மொழிந்த நவீன ஆபுத்திரனுக்கும்,நவீன காய சண்டிகை(மணிமேகலை அல்ல)க்கும் மக்கள் 2014 இல் தக்க பாடம் புகட்டுவார்கள்..
இந்தப் பல்லவியை இனி எத்தனை நாட்கள்தான் பாடிக் கொண்டிருப்பது? கச்சத் தீவை கலைஞர் தாரைவார்த்தது உண்மையென்றால் தமிழர்கள் இதுநாள்வரை அவரை சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.அன்று, மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுக்க தவறிவிட்டார். இதுதான் உண்மை. அன்று இலங்கை தமிழர் படுகொலை செய்யப் பட்ட நிலையில் அவர் மத்திய அரசை விட்டு உடனே வெளியேறி இருந்திருக்கவேண்டும். வெளியேறி இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியும் இங்கு வெளியேறியிருக்கும். தமிழக ஆட்சியும் கவிழ்ந்திருக்கும். "நாம்" கட்சித் தலைவர் சீமான் சொன்னதுபோல் இலங்கையில் ஒவ்வொருக் கணமும் தமிழர் பிணங்கள் விழுந்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் இங்கு ஆட்சியையும் ஒருக் கேடா என்று வேதனைபட்டதும் நியாயம்தான். ஆனால், ஈழ மக்களைக் காப்பாற்ற, அன்று வலுவான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, திமுக விற்கு ஆதரவு நல்கியிருக்கலாம்.செய்யவில்லையே உச்சநீதி மன்றத்தில் கச்சத் தீவைப் பற்றி மத்திய அரசு சொன்னது தமிழர்களுக்கே ஒரு பெரும் அதிர்ச்சிதானே!தீவு இலங்கைக் கடலோரப் பகுதிக்குள் வருகின்றதாம்.தமிழர்களுக்கு அங்கு மீன் பிடிக்கின்ற உரிமையில்லையாம்.இது எப்படியிருக்கு?

கச்சத் தீவு: மத்திய அரசின் வஞ்சகம் - இராமதாசு

கச்சத் தீவு  தொடர்பில் மத்திய அரசின்   வஞ்சகத்தை மன்னிக்க முடியாது: இராமதாசு

கச்சத் தீவு விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை மன்னிக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதை மீட்க முடியாது என்றும் கூறியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில்  அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 1966-ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி. பெரிஸ் வெளியிட்ட அறிக்கையில்,‘‘கச்சத்தீவில் இலங்கைக்கு எந்த உரிமையும் இல்லை. அது இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்று விக்டோரியா அரசி காலத்திலேயே ஆங்கிலேய அரசு அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது’’ என்று கூறியுள்ளார். இவ்வாறு  இராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்த கச்சத்தீவை 1974-ஆம் ஆண்டில் இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததையும், அதன்பின் அங்கு மீன் பிடிக்கும் உரிமை பறிக்கப்பட்டதையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 40 ஆண்டுகளாகவே  குரல் கொடுத்து வருகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி என்று கூறுவது முழுப் பொய் ஆகும்.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு பின்னர் 600-க்கும் அதிகமான மீனவர்களை சிங்களப்படை சுட்டுக் கொன்றிருக்கிறது; ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர்; லட்சக்கணக்கான மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர்களின் உடமைகளை சிங்களப் படை அழித்துள்ளது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் கச்சத்தீவை தாரை வார்த்தது என்பது தான் என்பதால், அதை மீட்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அண்மையில் பிரதமரை சந்திக்க தில்லி வந்த இலங்கை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்  கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதை திரும்பத் தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மார்தட்டினார். இந்நிலையில் தான் மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல், சிங்கள அமைச்சரின் குரலாக மாறி கச்சத்தீவை மீட்க முடியாது என்று கூறியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, கச்சத்தீவு  குறித்து தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மக்களவையில் பிரச்சினை எழுப்ப முயன்ற போது, அது நட்பு நாடான இலங்கையின் உறவை பாதிக்கும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தொடர்பான எந்த சிக்கலாக இருந்தாலும் அதில் தமிழகத்தின் நலனை கைவிட்டு விட்டு சிங்களர்களை ஆதரிப்பதே மத்திய அரசின் வழக்கமாக உள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இந்திய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் எந்த ஒரு பகுதியையும் அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது; நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த ஒரு காரணத்தை வைத்தே 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க முடியும். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால், 1987-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சிறிதும் மதிக்காமல் கொழும்பு உச்சநீதிமன்றத்தின் துணையுடன், வடக்கு- கிழக்கு மாநிலங்கள் இணைப்பு செல்லாது என்று இலங்கை அரசு அறிவித்தது. சட்டத்தை மீறுவதில் இலங்கை அரசுக்கு உள்ள துணிச்சல் கூட அரசியல் சட்டத்தை பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு இல்லாதது வேதனை அளிக்கிறது.
மத்திய அரசின் இந்த அணுகுமுறை தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை எற்படுத்திவிடும். தமிழக நலன் சார்ந்த விவகாரங்களில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருவதற்கு தமிழக கட்சிகளிடையே போதிய ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணமாகும். எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின்  அணுகுமுறையை மாற்றுவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்  ஒன்றுபட்டு அழுத்தம் தர வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(6)

.. .. .. .. ....
நீங்க சொல்லி என்ன ஆகபோகுது கச்சதீவை மீட்டேதீருவோம் என்று வீரவசனம் பேசிய அம்மாவின் எதிர்ப்பு குரலையோ கண்டனமோ தெரிவிக்கவில்லையே கூட்டணி மாறுதோ !!வாழ்க இளிச்சவாயன் தமிழன்கள் !!
தமிழருக்கு துரோகம் செய்ய செய்ய இந்தியாவுக்கு அழிவு வந்துகொண்டே இருக்கும். பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகளால் அழிவுதான். ஆனால் நாடுப்பற்று இல்லாதவர்கள் இந்தியாவை ஆள்வதால் அவர்கள் இது பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
"கச்சத் தீவை மீட்க முடியாது. அது இலங்கை கடலோரப் பகுதியில் உள்ளது; அது இலங்கைக்கு சொந்தம்" என்று மத்தியரசு உச்ச நீதி மன்றத்தில் கூறியிருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியச் செய்தி. இதையும் சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வது தமிழர்களின் நம்பிக்கைக்கு உரிய செயலா? நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டும் பலர் இன்னும் கொடுமை துன்பங்கள் அனுபவிக்கப்பட்ட நிலையில் இப்போதுக் கூறுவது அதுவும் கட்டாயத்தின் பேரில் உச்ச நீதிமன்றத்தில்- தமிழர்கள் சிந்திக்கவேண்டிய விஷயம்! கடந்தக் காலங்களில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகள் மத்தியில் மாறி மாறி ஆட்சியில் இடம் பெற்றிருந்தார்களே? அவர்களிடம் ஏன் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டது, இந்த உண்மைகளை இவர்கள் கண்டறிய முயற்சிக்கவில்லையா? எது எப்படியிருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் வழி இந்தத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு சொன்னக் "காரணங்கள்" சரியானதா, நியாயமானதா, மேலும் சரியான முறையில் இந்தத் தீவை இலங்கையிடம் கொடுத்தார்களா என்பதையெல்லாம் சம்பத்தப்பட்டவர்கள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்க் கொள்வது நன்று.
கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் ஆட்சி.அப்போது வேடிக்கை பார்த்தது கலைஞர்.ஈழத்தமிழர்களை கொல்வதற்கு உதவி செய்தது தற்போதைய காங்கிரஸ் ஆட்சி.அப்போது வேடிக்கை பார்த்ததும் கலைஞர்தான்.காவரியில் கர்நாடகா அணை கட்டுவதையும் முல்லைபெரியாறு பிரச்சனையிலும் வேடிக்கை பார்த்தவர் அதே கலைஞர்தான்.தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதையும் வேடிக்கை பார்த்தவர்தான் கலைஞர்.இதே சம்பவம் கேரளாவில் நடந்திருந்தால் கேரளா கொந்தளித்திருக்கும்.ஆனால் இங்கு அப்படிப்பட்ட ஒற்றுமை இல்லை.
சரி பாஸ். காங்கிரஸ் திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள், கூல்டௌன்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தமிழர்களுக்கு வஞ்சகம் புரிந்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது - வை கோ

தின இதழ் Home / அரசியல் / தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது
தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது

தமிழர்களுக்கு  வஞ்சகம் புரிந்த காங்கிரசுக்கு மன்னிப்பு கிடையாது

ஈரோடு, ஆக. 26
தமிழ் இனத்திற்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் செய்த காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என்று ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ஈரோட்டில் நடைபெற்ற ‘இணையதள நண்பர்கள் முன்னெடுக்கும் மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்கள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:‘‘மாற்றம் வேண்டும் என்று இந்த இணையதள நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். நாட்டிலேயே திராவிட இயக்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே மதிமுக தொடங்கப்பட்டது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு திமுக கட்சி கூட்டத்தில் பேசியதற்காக கைதட்டல் கிடைத்தது. அதற்காக என்னை அந்த கட்சியிலிருந்து நீக்கினார்கள். மதிமுக இயக்கத்தில் புதிய ரத்தம் பாய்ச்சுவதற்காக இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். அவர்கள் கட்டுப்பாட்டுடன் உள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுள்ளது. அரசியல் மாற்றம் வேண்டும்.
முதலில் இந்திய அரசியலில் மாற்றம் வேண்டும். தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் செய்த சோனியா காந்தி தலைமையிலான, மன்மோகன்சிங் பிரதமராக உள்ள காங்கிரசை அகற்றியே தீர வேண்டும். வாஜ்பாய் அரசு ஈழத்தமிழர்களுக்கு செய்த உதவிபோல எந்த தலைவரும் செய்யவில்லை. கருணாநிதி வார்த்தை ஜாலத்தால் அரசியல் செய்து வருகிறார். இப்போது அரசியல் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சி செய்தவர்களின் சுயநலத்தால் எடுக்கப்பட்ட முடிவால், கட்அவுட் கலாச்சாரத்தால், ஜாதி பெயரால் அரசியல் சீரழிந்து வருகிறது.
இளைஞர்கள் இதை முறியடித்து சாதிக்க வேண்டும். ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் அப்பட்டமாக ஈழத்தமிழர்களை குறை கூறி தயாரிக்கப்பட்ட படமாகும்.அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மதிமுக எப்போதும் ஆதரவளிக்கும். இவ்வாறு வைகோ பேசினார். கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சனி, 13 ஏப்ரல், 2013

இலங்கையின் வஞ்சகத்தை உணருங்கள்: இராமதாசு கண்டனம்

இலங்கையின் வஞ்சகத்தை இப்போதாவது உணருங்கள்: கோத்தபய இராசபட்ச பேச்சுக்கு இராமதாசு கண்டனம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா குறித்த அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இப்போதாவது இலங்கையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். அவரது குற்றச்சாற்றுக்கள் கடுமையாக கண்டிக்கத் தக்கவை.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நடத்தியதே இந்தியா தான் என்றும், இலங்கைப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளிடமிருந்து நெருக்கடி வந்த போதெல்லாம் அதை சமாளித்து இலங்கையை காப்பாற்றியது இந்தியா தான் என்றும் தான்  கோத்தபாய ராஜபக்சே இதுவரை கூறி வந்தார். ஆனால், இப்போது தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளார். இதற்குக் காரணம் இலங்கை அரசு தற்போது முழுக்க முழுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது தான். சீனாவைக் காட்டி மிரட்டியே இந்தியாவிடம் காரியம் சாதித்துக் கொண்ட இலங்கை, இப்போது காரியம் முடிந்ததும் இந்தியாவை கைவிட்டு சீனாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது.
இலங்கை அரசு வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்ட போதிலும், இலங்கை எங்கள் நட்பு நாடு என்ற வசனத்தையே இந்தியா திரும்பத் திரும்ப கூறிவருகிறது. கோத்தபாய ராஜபக்சேவின் இந்தக் குற்றச்சாற்று குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, அந்த குற்றச்சாற்றுகளை மறுக்காமல், இலங்கையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று கூறியிருப்பதை பார்க்கும்போது இலங்கையை இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லையோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 1962-ஆம் ஆண்டு சீனா போரின் போதும், அதன் பின்னர் நடந்த பாகிஸ்தானுடனான போர்களின் போதும் இலங்கை அரசு இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கவில்லை.
இலங்கையை எந்தக் காலத்திலும் நம்பக்கூடாது என்று மத்திய அரசை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக சீனா பக்கம் இலங்கை சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக கச்சத்தீவு போன்ற தமிழகத்தின் சொத்துக்களை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்தது. இப்போது இந்தியாவுக்கு எதிராக இலங்கை திரும்பியிருப்பதன் மூலம் அந்நாடு தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தோல்வியடைந்து விட்டது உறுதியாகிவிட்டது.
எனவே, இனியாவது இலங்கையின் வஞ்சகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அண்டை நாடு, நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இலங்கையின் தவறுகளுக்கு துணை போவதை விட வேண்டும். இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை திருமபப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழம் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கேற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்.
- என்று கூறியுள்ளார்.

கருத்துகள்(2)

"இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்ட 1988-ம் ஆண்டில் இந்தியாவில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், மாலத்தீவு மீது தாக்குதல் நடத்தினர். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை.- கோத்தபய ராஜபட்ச". இவருக்கு போராடவீரர்களுக்கும், உண்மையான பயங்கரவாதி களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்றது 1948-ல். புலியிக்கம் தோன்றியது 1983-ல். 35 ஆண்டுக் காலமாக அறவழியில் நின்று போராடினார்கள்; பெளத்தமத்ததை சார்ந்த இலங்கைத் தலைவர்கள் முன் இந்த அறவழிக்கு எந்த மரியாதையுமில்லை. ஆயுதம் ஏந்தக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்; இவர்கள்தான் புலிகளைப் பார்த்து பயங்கரவாத இயக்கம் என்று சொல்கின்றார்கள்? ராஜீவ் கொலைக்குப் பின் தானே இந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டது. ராஜீவ் உயிரோடு இருந்தப் போதுதானே மாலத் தீவில் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்பு புலி இயக்கம் எப்படி அப்போது பயங்கரவாதியானார்கள்? புலியக்கம் தோன்றுவதற்கு முன்னும் பின்னும் இதே இலங்கை ஆகாயப் படை தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசி எத்தனையோ தமிழர்களை கொன்று குவித்தார்களே! இது என்ன?
yes


திங்கள், 25 மார்ச், 2013

மத்திய அரசு தமிழர்களுக்குவஞ்சகம் இழைத்துவிட்டது: டி. இராசா

மத்திய அரசு தமிழர்களுக்குத்

துரோகம் இழைத்துவிட்டது: டி.

இராசா

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது: டி.ராஜா
வேலூர், மார்ச் 24: இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார்.
வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 25 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஆனால் இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானத்தில் திருத்தம் செய்யாமல், வாய்மொழியாக மட்டுமே சில கருத்துகளை முன்வைத்தது.
எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொண்டு வர தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கோரிக்கை வைத்தபோதும், நாடாளுமன்றத்தில் இதனை எழுப்பியபோதும், மத்திய அரசுக்கு அதை கண்டுகொள்ளாமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
தமிழகத்தில் எழுச்சிமிக்க போராட்டத்தை மாணவர்கள் நடத்தி, சர்வதேச அளவில் இலங்கை பிரச்னைக்கு வலிமை சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடுவது சாத்தியமா என யோசிக்க வேண்டும்.
இப் போராட்டத்தை ஒருமுகப்படுத்த மாணவர்கள் அடுத்தக்கட்ட யோசனை செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீக்குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போராட்டத்துக்கு தீர்வாக அமையாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக போராட வேண்டும். இலங்கை மீது இந்தியாவே தீர்மானம் முன்மொழிந்திருந்தால் அந்தத் தீர்மானம் மிக வலிமையாக இருந்திருக்கும் என்றார் ராஜா.கூறினார்.
வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 25 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஆனால் இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானத்தில் திருத்தம் செய்யாமல், வாய்மொழியாக மட்டுமே சில கருத்துகளை முன்வைத்தது.
எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொண்டு வர தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கோரிக்கை வைத்தபோதும், நாடாளுமன்றத்தில் இதனை எழுப்பியபோதும், மத்திய அரசுக்கு அதை கண்டுகொள்ளாமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
தமிழகத்தில் எழுச்சிமிக்க போராட்டத்தை மாணவர்கள் நடத்தி, சர்வதேச அளவில் இலங்கை பிரச்னைக்கு வலிமை சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடுவது சாத்தியமா என யோசிக்க வேண்டும்.
இப் போராட்டத்தை ஒருமுகப்படுத்த மாணவர்கள் அடுத்தக்கட்ட யோசனை செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீக்குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போராட்டத்துக்கு தீர்வாக அமையாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக போராட வேண்டும். இலங்கை மீது இந்தியாவே தீர்மானம் முன்மொழிந்திருந்தால் அந்தத் தீர்மானம் மிக வலிமையாக இருந்திருக்கும் என்றார் ராஜா.