கருத்துகள்(10)
200% உண்மை.
இது என்ன இப்போ நேத்தா நடக்குது ..
முள்ளிவாய்க்கால் ல தொடங்கி மகள் மாநிலங்கள் அவையில் இடம் பெரும் வரையில் ஏற்கனவே தொடங்குனதுதானே
திரு மு. கருணாநிதியின் இதுபோன்ற நடவடிக்கைகளைப்
பார்க்கும்பொழுது மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வந்த ஆதரவு வாபஸ்
இயற்க்கையானாதாக இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. மேலும், முதலில்
அளித்துவந்தது நிபந்தயுடன் ஆதரவு தற்போது அளித்து வருவது நிபந்தனையற்ற
ஆதரவு என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தி.மு.க.
மற்றும் காங்கிரஸ் கூட்டுக் களவாணிகள் என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு
வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தமிழக மக்கள் நினைக்க
மாட்டார்களா?
லூப் லைன்லே தலை வச்சிப் படுத்து "கல்லக்குடி கொண்டான்"
அப்பிடின்னு பட்டம் வாங்குனாரு. இப்போ அந்த அம்மாவுக்கு "மணிமேகலை"
அப்பிடின்னு பெயரைக் கொடுத்து தன குடும்பத்தை இன்னும் நல்ல வச்சிகிட்டாரு.
இதுக்கு பேரு துரோகமா?
இந்த உணவு பாதுகாப்பு சட்டமே ஏற்கெனவே உள்ள பொது விநியோக
முறைக்கு முற்று புள்ளி வைக்க ஐ எம் எப் ,அமேரிக்கா தரும் அழுத்தம் காரணமாக
கொண்டுவரப்பட்ட சட்டம் தான்.இந்தியாவில் எல்லோரும் எல்லாவற்றிற்கும்
அன்னியரை எதிர்நோக்க வைக்கும் அடிமை சாசனத்தின் முதல் அத்தியாயம் இந்த
மசோதா.இதை வாய் கிழிய வழி மொழிந்த நவீன ஆபுத்திரனுக்கும்,நவீன காய
சண்டிகை(மணிமேகலை அல்ல)க்கும் மக்கள் 2014 இல் தக்க பாடம் புகட்டுவார்கள்..
இந்தப் பல்லவியை இனி எத்தனை நாட்கள்தான் பாடிக்
கொண்டிருப்பது? கச்சத் தீவை கலைஞர் தாரைவார்த்தது உண்மையென்றால் தமிழர்கள்
இதுநாள்வரை அவரை சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.அன்று, மத்திய
அரசுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுக்க தவறிவிட்டார். இதுதான் உண்மை. அன்று
இலங்கை தமிழர் படுகொலை செய்யப் பட்ட நிலையில் அவர் மத்திய அரசை விட்டு
உடனே வெளியேறி இருந்திருக்கவேண்டும். வெளியேறி இருந்திருந்தால் காங்கிரஸ்
கட்சியும் இங்கு வெளியேறியிருக்கும். தமிழக ஆட்சியும் கவிழ்ந்திருக்கும்.
"நாம்" கட்சித் தலைவர் சீமான் சொன்னதுபோல் இலங்கையில் ஒவ்வொருக் கணமும்
தமிழர் பிணங்கள் விழுந்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் இங்கு ஆட்சியையும்
ஒருக் கேடா என்று வேதனைபட்டதும் நியாயம்தான். ஆனால், ஈழ மக்களைக்
காப்பாற்ற, அன்று வலுவான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, திமுக விற்கு
ஆதரவு நல்கியிருக்கலாம்.செய்யவில்லையே உச்சநீதி மன்றத்தில் கச்சத் தீவைப்
பற்றி மத்திய அரசு சொன்னது தமிழர்களுக்கே ஒரு பெரும் அதிர்ச்சிதானே!தீவு
இலங்கைக் கடலோரப் பகுதிக்குள் வருகின்றதாம்.தமிழர்களுக்கு அங்கு மீன்
பிடிக்கின்ற உரிமையில்லையாம்.இது எப்படியிருக்கு?