மு.முருகேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.முருகேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

வந்தவாசியில் தொடங்கியது குழந்தைகள் வாசிப்பு இயக்கம்

 அகரமுதல

      



       அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு

      அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

    மகுடை(கரோனா) பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு சிற்றூரைச் சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளருமான எழுத்தாளர் மு.முருகேசு எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலை மத்திய அரசு ‘பால சாகித்திய புரசுகார் விருது’க்கு தேர்வு செய்துள்ளது. அரசுப் பள்ளி குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும், ‘பால சாகித்திய புரசுகார் விருது’ பெற்ற நூலை அனைத்துப் பள்ளி குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையிலும் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

        இந்த இயக்கத்தின் தொடக்க விழா கடந்த பிப்பிரவரி 7-ஆம் தேதியன்று வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி நூலக அரங்கில் தொடங்கப்பட்டது.

        குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்த வந்தவாசி இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலின் 100 படிகளை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினார்.

      பிப்பிரவரி-8-ஆம் தேதி அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தவாசி ஆசிய மருத்துவக் கழகத்தின் இயக்குநர் பீ.இரகமத்துல்லா, 100 நூல்களை இலவசமாக வழங்கினார்.

      பிப்பிரவரி-9-ஆம் தேதி வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிக்குக் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மருத்துவ இணை இயக்குநர் மரு.எசு.குமார், 100 நூல்களை இலவசமாக வழங்கினார். அதே நாளில், வந்தவாசி கிழக்குப் பாடசாலையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சுரேசு முருகன், 50 நூல்களை இலவ்சமாக வழங்கினார்.

      பிப்பிரவரி-11-ஆம் தேதி வந்தவாசி பொட்டிநாயுடு தெருவில் நடைபெறும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மாலை நேர வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு கிருட்டிணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி மரு.செ.வெங்கடேசன், 100 நூல்களை இலவசமாக வழங்கினார்.

       ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை இலவசமாகப் பெற விரும்பும் புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ள வந்தவாசி ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 9444360421 எனும் பேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் தெரிவித்தால், குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் மூலமாக அவர்களுக்கு நூல் இலவசமாக வழங்கப்படும் என்றும் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







திங்கள், 18 ஜனவரி, 2021

பாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா

 அகரமுதல


பாதிரி ஊரில்
தைத்திருநாள் கலை இலக்கிய விழா

பாதிரி ஊராட்சி மன்றமும் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கமும் இணைந்து தைத்திருநாள் பொங்கல் கலை இலக்கிய விழா வந்தவாசியை அடுத்த பாதிரி ஊரில் உள்ள காந்தித் திடலில் நடைபெற்றது.

இந்த விழாவில் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ. இரகமத்துல்லா தலைமை வகித்தார். பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ.அரிகிருட்டிணன் வரவேற்றார்.

செல்வி. இரீனாவின் பரத நாட்டியத்துடன் தொடங்கிய இவ்விழாவில், தமிழிசைப் பாடல்களை இரா.அருண்குமார், பெ.பார்த்திபன் ஆகியோர் பாடினர். உழவர் திருநாள் சிறப்புக் கவிதைகளைக் கவிஞர்கள் வந்தை குமரன், க.புனிதவதி, ஊடகவியலாளர்
தமிழ் இராசா ஆகியோர் வாசித்தனர்.

மேலும், ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ என்ற தலைப்பில் சீ.கேசவராசுஜ், ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் வி.எல்.இராசன், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் வந்தை பிரேம், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற தலைப்பில் சா.தமீம் ஆகியோர் கருத்துரையாற்றினர். பள்ளி மாணவன் இல. கோபாலகிருட்டிணன் ‘ஓகாசனம்’ செய்து காட்டினார்.

பின்னர், குறும்பாக் கவிஞரும், தமிழ்ச் சங்க அறிவுரைஞருமான மு.முருகேசு நடுவராகப் பங்கேற்ற ‘இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களின் பயணம் – சிகரத்தை நோக்கியே!,
சிரமத்தை நோக்கியே!’ எனும் தலைப்பிலான சிந்தனைச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
‘சிகரத்தை நோக்கியே’ என்ற அணியில் செயலாளர் பா.சீனிவாசன், இரா.பாசுகரன், ஆசிரியை எசு.இரசீனா ஆகியோரும், ‘சிரமத்தை நோக்கியே’ என்ற அணியில் துணைத் தலைவர் ம.சுரேசு பாபு, பேராசிரியர் க.பூபாலன், இரா.நளினி ஆகியோரும் பங்கேற்றனர். இறுதியில், ‘இன்றைய இளைஞர்களின் பயணம் சிகரத்தை நோக்கியே’ என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார்.

‘நாமும் தமிழும்’ என்ற தலைப்பில் மனோசு குழுவினரின் குறுநாடகம் நடைபெற்றது. மேலும், கலைநிகழ்ச்சிகளிலும் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைத் துணைச் செயலாளர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, இளைஞர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ம.பாபு நன்றி கூறினார்.


வியாழன், 17 அக்டோபர், 2019

கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல

செங்கற்பட்டில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா
   செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் புது நிருமலா விழா அரங்கில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
   இவ்விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சேம்சு தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி முன்னிலை வகித்தார்.  கவிஞர் சீனி.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். 
   சா.கா.பாரதிராசா எழுதிய ‘சருகின் சத்தம்’ நூலை மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட்டார். பாவரசு பாரதி சுகுமாரன் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
  ‘சிறகுகள் வரையும் வானம்’ ஐக்கூ கவிதைத் தொகுப்பு நூலைக் கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு வெளியிட்டார். பாவையர் மலர் ஆசிரியர் முனைவர் வான்மதி பெற்றுக்கொண்டார்.
  நூல் குறித்துக் கவிஞர் அமுதகீதன், சமூக சேவகி பரஞ்சோதிகவிசேகர், வழக்கறிஞர் அசோக்கு ஆகியோர் உரையாடினர்.
  நிகழ்ச்சியைக் கவிஞர் யாழன் தொகுத்து வழங்கினார். சா.கா.பாரதி ராஜா ஏற்புரையாற்றினார். கவிஞர் ப.குணா நன்றியுரை வழங்கினார்.
  நிகழ்வில் செங்கற்பட்டைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள், தமிழ் ஆர்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொணடனர். நிகழ்வில் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திலுள்ள 15 பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஏடுகளை மின்பொறியாளர் சங்கர் வழங்கினார்.. 

செவ்வாய், 11 ஜூன், 2019

வந்தவாசியில் முப்பெரு விழா

அகரமுதல

வந்தவாசியில் முப்பெரு விழா


வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நேற்று (வைகாசி 27, 2050/  சூன் 10, 2049) முப்பெரு விழா நடைபெற்றது.
        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார்.
கிளை நல்நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
       இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
         குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள், உலக இரத்தத்தான நாள், போதைப் பொருள்- சட்டவிரோதக் கடத்தலுக்கான பன்னாட்டு எதிர்ப்பு நாள்ஆகிய முப்பெரு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கரூர் வைசியா வங்கியின் வந்தவாசி கிளை மேலாளர் சி.சங்கர் பங்கேற்றார்.
        தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் குப்பன், கவிஞர் சாகீர் உசேன் முதலானோர் கலந்துகொண்டனர்.
        நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் சா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர்
பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
  –   வந்தை அன்பன்