நேர்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 அக்டோபர், 2013

ஊழியமும், நேர்மையும் தேவை!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_817896.jpg

சேவையும், நேர்மையும் தேவை!
2,500 போலி ரேஷன் கார்டுகளை நீக்கி, தமிழக அரசுக்கு, மாதம், 23 லட்சம் மிச்சப்படுத்திய துடன், ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவும், விசயராகவன்: நான், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். 1994ல், வருவாய் துறையில், ‘டைப்பிஸ்ட்’டாக சேர்ந்தாலும், அடுத்தடுத்து அரசு தேர்வு எழுதி, 2010ல், தாசில்தார் ஆனேன். இடைப்பட்ட காலங்களில், பல நேர்மையான கலெக்டர்களிடம், பி.ஏ.,வாக பணியாற்றினேன். அதனால், சமூகத்துக்காக தன்னலமில்லாமல் உழைக்கவும், சேவை மனப்பான்மையோடு நடக்கவும் முடிவு செய்தேன். கஷ்டப்பட்டு படித்ததால், ஆரம்பம் முதலே, ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவி வந்தேன். கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை, தனி வட்டாட்சியராக பதவியேற்றதும், ‘இனி, ரேஷன் பொருட்கள் வாங்க, பள்ளி மாணவர்கள் வரக் கூடாது’ என, உத்தரவிட்டேன்.
இதனால், ஏழை மாணவர்களின் படிப்பு தடைபடுவது தடுக்கப்படும். மேலும், படிப்பறி
வில்லா பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகளின் படிப்பின் முக்கியத்துவமும் விளங்கும். வாரத்திற்கு, 14 ரேஷன் கடைகளை பார்வையிட்டாலே போதும். ஆனால், 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனையிட்டு, தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 2,500 போலி ரேஷன் அட்டைகளை, பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே கண்டுபிடித்து நீக்கினேன்.
இதன் மூலம், தமிழக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்ததோடு, அதற்காக மாதந்தோறும் செலவிடப்படும், 23 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தினேன். இதற்காக, சுதந்திர தின விழாவில், கலெக்டர், டி.பி ராஜேஷ், விருது வழங்கி பாராட்டினார். கிருஷ்ணகிரியின் நிலத்தடி நீரில், ‘புளோரைடு அமிலம்’ அதிகம். இதனால், குழந்தைகளின் பற்களில், மஞ்சள் கறை படிவதோடு, ஓட்டையும் விழுகிறது. எனவே, அரசு பள்ளிகளில், 30 ஆயிரம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தி, சுத்தமான தண்ணீர் தருகிறேன்.
தொடர்புக்கு: 94435 12245

வியாழன், 16 மே, 2013

நேர்மையற்ற உரூ. 1.9 கோடி திருப்பியனுப்பிய மிதியூர்தி ஓட்டுநர்

நேர்மையற்ற பணம் வேண்டா: உரூ. 1.9 கோடி  திருப்பியனுப்பிய மிதியூர்தி ஓட்டுநர்
ஆமதாபாத்: தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.
குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து கிளம்பிய அந்த நிறுவனம் தற்போது சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. தற்போது ஒரு பிகா நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. பிகா என்பது வட இந்தியாவில் நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும். இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு 10 பிகா நிலம் இருந்தது. இதில் 3 பிகா நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். தற்போது அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை.

தற்போது, அந்த 3 பிகா நிலத்திற்கான நஷ்ட ஈடான ரூ. 1.9 கோடி ராஜூவின் பெயருக்கு செக்காக வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வந்த செக்கை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ. அவர் கூறுகையில், "எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்" என்று கூறியுள்ளார்.
ராஜூவின் இந்த செயலால் குஜராத் தொழில் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வில் இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ள அவர்கள், வெறும் ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை நடத்தும் ராஜூ, இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்படாதது தங்களுக்கு மிகவும் ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்குத் தெரியாது நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம் என்று....