தலைமை நீதிபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமை நீதிபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 செப்டம்பர், 2013

தமிழை வழக்கு மொழியாக்க நடவடிக்கை: தலைமை நீதிபதி உறுதி

"தமிழைச், சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்} என்பதுதான் முதன்மை வேண்டுகோள். இதற்கான நடவடிக்கை எடுக்க உரியன செய்வதாகத்தலைமை நீதிபதி (பொ) உறுதி அளித்துள்ளார். அவ்வாறிருக்க, "தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதி மன்றங்களில் தமிழை கட்டாய மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்"  என முதன்மையைத் திரிப்பது ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தமிழை வழக்கு மொழியாக்க நடவடிக்கை: தலைமை நீதிபதி உறுதி

Comment (1)   ·   print   ·   T+  
தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதி மன்றங்களில் தமிழை க் கட்டாய மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டுவந்த வழக்குரைஞர்கள் கு.ஞா.பகத்சிங், மு.வேல்முருகன் மற்றும் இறை.அங்கயற்கண்ணி ஆகிய மூவரும் தங்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் 3 பேர் உயர்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரும் 2006-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என இருப்பதை திருத்தம் செய்து அந்தந்த மக்களின் தாய்மொழியே உயர் நீதிமன்றங்களின் மொழி என மாற்றம் செய்ய வேண்டும்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் 1961-ம் ஆண்டிலேயே அந்த மாநிலங்களின் மொழியான இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக மத்திய அரசு ஆக்கியது. தமிழுக்கு மட்டும் தடை விதிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் தாய்மொழியிலேயே சாட்சியங்கள் முதலானவற்றை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கீழமை நீதி மன்றங்களில் தமிழை கட்டாய மொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று தமிழை சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் உறுதியளித்ததைத் தொடர்ந்து, வழக்குரைஞர்கள் மூவரும் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனிடையே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதன், 21 ஆகஸ்ட், 2013

உயர்மன்ற வழக்காடும் மொழியாகத் தமிழ்? : தலைமை நீதிபதி சதாசிவம்

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அறிமுகப்படுத்த போதிய தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் , தமிழில் சட்ட நூலு்கள  முதலான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை எனத்  தமிழக் அரசிற்குப் பலமுறை தெரிவித்துள்ளதாகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.  இதற்கு, இதுவரையிலான அரசுகள் என்ன செய்துள்ளன என விளக்க வேண்டும்.
எனினும் இப்பொழுதே இதனை நடைமுறைப்படுத்தலாம். போதிய தமிழ்ச் சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்பெற வேண்டு்ம். அவ்வாறு அவர்கள் கிடைப்பினும் கிடைக்காவிடினும், ஒலிப்பதிவு முறையில் தீர்ப்பைப் பதிந்து கொண்டு பின்னர் கணியச்சிடும் முறையை நடைமுறைப்படுத்தலாம். தேவை இருக்கும் பொழுதுதான் சட்ட நூல்கள் வெளியீடு பெருகும். எனவே, ஆங்கில நூல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கூறித் தீர்ப்புகள் வழங்கினால், அதுவே சட்டக் கூறாக மாறும். தமிழில் வாதிடும் தேவை கருதித் தமிழில் சட்ட நூல்கள் பல பெருகும். எனவே, முதலில் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரை மொழியாக அரங்கேற உடனே ஆவன செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்திலும் தமிழ் இடம் பெறவும் நடவடிக்கை எடுத்து வெற்றி காண வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


உயர்மன்றத்தில் வழக்காடும் மொழியாக த் தமிழ்? : தலைமை நீதிபதி சதாசிவம் 
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_785245.jpg 

சென்னை: "சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வருவதில், இதுவரை முடிவு எட்டப்படவில்லை' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு, சென்னை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு பார் கவுன்சில் உடன் இணைந்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன், ஆகிய சங்கங்கள், இந்த நிகழ்ச்சியை நடத்தின.

நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது: நான் வழக்கறிஞராக பதிவு செய்த பின், முதல் நாள், என் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, ஒரு வழக்கில், விசாரணையை தள்ளிவைக்க கோரும்படி, அனுப்பி வைத்தார். அது தான், நான் ஆஜரான முதல் வழக்கு. இளம் வழக்கறிஞர்கள், கடுமையாக உழைத்தால், நல்ல நிலைக்கு வரமுடியும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். நீதித்துறையில், உயிர் நாடியாக, வழக்கறிஞர்கள் உள்ளனர். சாதாரண மனிதனுக்கும், சட்டத்துக்கும், பாலமாக, வழக்கறிஞர்கள் திகழ்கின்றனர். பொது மக்கள் மத்தியில், வழக்கறிஞர்கள் பற்றிய எண்ணம் மாற வேண்டும். வழக்கறிஞர்களாக மட்டுமல்லாமல், ஆலோசகர்களாக திகழ வேண்டும். அப்போது தான், வழக்கறிஞர் தொழிலில், மக்களுக்கு மரியாதை ஏற்படும். நீண்ட வாதம், தேவையில்லாமல் வாய்தா கேட்பது, நடைமுறையை தவறாக பயன்படுத்துவது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தற்போது தகவல் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், 100 சதவீதம், மின்னணு முறை அமல்படுத்தப்படுகிறது. வழக்கு தாக்கல் செய்யும்போது, வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்களின் இ-மெயில், மொபைல் போன் எண்களை வாங்குகிறோம். வழக்கு தொடர்பான விவரங்களை, அவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.டில்லி ஐகோர்ட்டில், ஏழு கோர்ட்களில், மின்னணு முறை பின்பற்றப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டையும், மின்னணு கோர்ட் ஆக உருவாக்கவேண்டும். முல்லை பெரியாறு வழக்கு விசாரணை, 21ம் தேதி (இன்று) முடிவுக்கு வரும் என, நம்புகிறேன். இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.

பின், நிருபர்களிடம், தலைமை நீதிபதி கூறியதாவது: சென்னை ஐகோர்ட்டில், வழக்காடும் மொழியாக, தமிழை கொண்டு வரவேண்டும் என்றால், தமிழ் சுருக்கெழுத்தாளர், தமிழில் சட்டநூல்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே பல கோரிக்கைகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் நீதிபதியாக நான் பதவி வகித்த போது, நீதிபதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. வழக்கறிஞர்களும், போலீசாரும், பொதுமக்களுக்காக பணி செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இருதரப்பினரும் சுமூகமாக பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ளவேண்டும். தென் மாநிலங்களில், சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பது பற்றி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூட்டம், பல முறை நடந்தது. தலைமை நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டிலும், ஆலோசிக்கப்பட்டது. எந்த முடிவும் எட்டப்படவில்லை. தென் மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் மாநிலத்தில், சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என கோருகின்றனர். தென் மாநிலங்களில் அமைக்க, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. சென்னை ஐகோர்ட்டுக்கு, தேவையான அனைத்து நிதி உதவிகளையும் செய்வதாக தமிழக முதல்வரும், மத்திய அரசும் கூறியுள்ளது. ஐகோர்ட்டை மின்னணு கோர்ட் ஆக மாற்றுவதற்கு, நான், ஒரு பாலமாக இருந்து செயல்படுவேன். இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்
.
 

சனி, 20 ஜூலை, 2013

தலைமை நீதிபதி சதாசிவத்துக்குப் பாமகவின் 3 கோரிக்கைகள்

தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ப் பாமகவின் 3 கோரிக்கைகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சதாசிவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் குக்கிராமத்தில் பிறந்த நீதியரசர் ப. சதாசிவம் உச்சநீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியாக இன்று பொறுப்பேற்றிருக்கிறார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து மக்களோடு, மக்களாக பழகிய ஒரு தமிழர் முதன்முறையாக இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்றிருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் சதாசிவம், நீதிபதி பணிக்கான தகுதியில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பல்வேறு சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காகத் தனிச் சட்டம் எதுவும் கொண்டுவரத் தேவையில்லை என்ற போதிலும், 1993ஆம் ஆண்டில் நீதிபதிகள்   நியமனத்திற்காக கொலிஜியம் முறை எவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டதோ, அதேபோல நீதிபதிகள் நியமனத்தில் தகுதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நிரந்தரமான ஓர் ஏற்பாட்டை தலைமைநீதிபதிசெய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று வரை அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.  இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தியில் வாதிடவும், வழக்கு நடத்தவும் அனுமதி அளிக்கப்படும் நிலையில்,  தமிழில் வாதிடப்பட்ட ஒரே காரணத்திற்காக வழக்குகளே தள்ளுபடி செய்யப்படும் அவலம் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. எந்த ஓர் இனத்திற்கும் அவர்களின் சொந்த மொழியில் வாதிடும் வாய்ப்பு மறுக்கப்படுவது மிகவும் கொடுமையானது. எனவே, இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக  கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்திலிருந்து தில்லிக்கு சென்று வருவது சாதாரண மக்களால் சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. எனவே, உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும் நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நீதியரசர் சதாசிவம் அவர்கள் 9 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவியில்  இருப்பார் என்ற போதிலும், அவரது பணிக்காலம் தமிழர்கள் பெருமையும், பெருமிதமும் படும் வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.