பாமக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாமக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜூலை, 2013

தலைமை நீதிபதி சதாசிவத்துக்குப் பாமகவின் 3 கோரிக்கைகள்

தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ப் பாமகவின் 3 கோரிக்கைகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சதாசிவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் குக்கிராமத்தில் பிறந்த நீதியரசர் ப. சதாசிவம் உச்சநீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியாக இன்று பொறுப்பேற்றிருக்கிறார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து மக்களோடு, மக்களாக பழகிய ஒரு தமிழர் முதன்முறையாக இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்றிருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் சதாசிவம், நீதிபதி பணிக்கான தகுதியில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பல்வேறு சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காகத் தனிச் சட்டம் எதுவும் கொண்டுவரத் தேவையில்லை என்ற போதிலும், 1993ஆம் ஆண்டில் நீதிபதிகள்   நியமனத்திற்காக கொலிஜியம் முறை எவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டதோ, அதேபோல நீதிபதிகள் நியமனத்தில் தகுதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நிரந்தரமான ஓர் ஏற்பாட்டை தலைமைநீதிபதிசெய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று வரை அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.  இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தியில் வாதிடவும், வழக்கு நடத்தவும் அனுமதி அளிக்கப்படும் நிலையில்,  தமிழில் வாதிடப்பட்ட ஒரே காரணத்திற்காக வழக்குகளே தள்ளுபடி செய்யப்படும் அவலம் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. எந்த ஓர் இனத்திற்கும் அவர்களின் சொந்த மொழியில் வாதிடும் வாய்ப்பு மறுக்கப்படுவது மிகவும் கொடுமையானது. எனவே, இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக  கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்திலிருந்து தில்லிக்கு சென்று வருவது சாதாரண மக்களால் சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. எனவே, உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும் நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நீதியரசர் சதாசிவம் அவர்கள் 9 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவியில்  இருப்பார் என்ற போதிலும், அவரது பணிக்காலம் தமிழர்கள் பெருமையும், பெருமிதமும் படும் வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 10 ஜூலை, 2009

பாமக மீண்டும் ஜாதிச் சங்கமானது ஏன்?: கருணாநிதி கேள்வி



சென்னை, ஜூலை 9: "அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு, மீண்டும் ஜாதிச் சங்கமாக ஏன் கூனிக் குறுக வேண்டும்'' என்று பாமகவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக, பேரவையில் பாமக தலைவர் ஜி. கே. மணி புதன்கிழமை பேசியதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துப் பேசினர். இந்த நிலையில், அவர்களது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவையில் வியாழக்கிழமை வற்புறுத்தினார் ஜி.கே.மணி. இதற்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி அளித்த விளக்கம்: ""பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிலும் குறிப்பாக வன்னியர்களுக்கு திமுக ஆட்சி துரோகம் செய்கிறது என்பது போல ஒரு கற்பனை குற்றச்சாட்டை பாமகவினர் புதன்கிழமை செய்திருந்தார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற முக்கிய பொறுப்புகளில் வன்னியர்கள் அதிகமாக இல்லை என்ற தகவலை பாமக தலைவர் ஜி.கே.மணி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது மத்திய தேர்வாணைய கழகத்தால் தேர்வு நடத்தி அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். அதற்கும் தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் யாரும் நீதிபதிகளாக வன்னியர்கள் இல்லை என்றால், அது தமிழக அரசின் குற்றமா? அல்ல. யார் யார் வன்னியர்கள்? தற்போது, மாவட்ட ஆட்சியர்கள் 31 பேரில், இரண்டு இடங்களில் தான் வன்னியர்கள் இருப்பதாக ஜி.கே.மணி கூறுகிறார். அதிலே, ஜெயராமன் என்பவருக்கு இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவராக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. காவல் துறை எஸ்.பி.யாக மூன்று மாவட்டங்களில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் பொறுப்பில் இருக்கிறார்கள். பாமக என்பது இன்றைக்கு ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சி. முதலில் அது ஜாதி சங்கமாகத் தோன்றி இன்று ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து உருவெடுத்து இருக்கிறது. அப்போது, அரசியல் கட்சிகள் என்றால் அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஓட்டுப் பொறுக்கிகள் என்பதுதான் இங்கேயுள்ள (பேரவை) உறுப்பினர்கள், எனக்கும் சேர்த்து கொடுத்த பட்டம். அன்றைக்கு அப்படி ஆரம்பித்தவர்கள், ஜாதி சங்கமாக ஆரம்பித்தவர்கள் அரசியல் கட்சியாக வளர்ந்து வியாபித்திருக்கிறார்கள். எனக்குள்ள வருத்தம், அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஜாதிச் சங்கமாக ஏன் கூனிக் குறுக வேண்டும்? வன்னியர்கள் எத்தனை பேர்? 1985-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள வன்னியர் உள்ளிட்ட 109 சாதிவாரியான மக்கள் தொகை அறிவிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த 109 ஜாதிகளுடைய மக்கள் தொகை 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்து 987 ஆகும். அதில், வன்னியர் 65 லட்சத்து 4 ஆயிரத்து 987 பேர். அவசரம், ஆத்திரம்... இன்றைக்கு சமூக நீதி பற்றி பேசுகிறோம். ஆனால், அந்த சமூக நீதியின் காவலர் வி.பி.சிங்குக்கு தமிழகத்தில் பாமக சார்பில் தரப்பட்ட மரியாதை என்ன தெரியுமா? "வன்னியப் பெண்கள் யாரும் அவரது முகத்தில் விழிக்கக் கூடாது' என்பதாகும். சமூக நீதிக் காவலருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கௌரவம் இது. ஆகவே, அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு சில செயல்களில் ஈடுபடுகின்ற காரணத்தால்தான் இன்றைய விளைவுகளை அனுபவிக்க நேரிட்டிருக்கிறது'' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

கலைஞர் தெரிவிப்பது போல் அரசியல் கட்சியான பாமக சாதிச்சங்கமாகக் குறுக்கிக் கொள்வது சரியல்ல. தேவையெனில் அவர் தனியாக வன்னியர் நலப்பேரவை அல்லது வேறு பெயரில் சாதி அமைப்பு ஒன்றை நடத்திக் கொள்ளட்டும். இல்லையேல் அரசியலில் காணாமல் போகும் நிலை ஏற்படும். திமுக குடும்பச் சங்கமாகப் போனபின்பு தான் சாதிச் சங்கமாக மாற்றினால் என்ன என்று எண்ணலாம். வினை விதைத்தவர் வினை அறுப்பர். ஆதலின் அதனை ஒப்பிட்டுப் பார்க்காமல் உண்மையிலேயே உலகத் தமிழர்கள் மீதும் தமிழ் மொழி, கலை,பண்பாடு மீதும் பற்று இருப்பின் இனியேனும் இடட்டும் முற்றுப்புள்ளி வன்னியர் வெறிக்கு.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2009 2:45:00 AM

முதலில் திரு. மு. கருணாநிதி அவர்கள் எந்த அடிப்படையில் தனது குடும்பத்தினரை அரசியல் உயர் அந்தஸ்தில் அமர்த்தினார் என்பது தமிழக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது அவசியம். சாதி அடிப்படையிலா? சமுதாய அடிப்படையிலா? உறவின் அடிப்படையிலா? எட்டப்பனிள் மறு உருவே... காக்கை வன்னியனின் திரு உருவே... உனது பெயர் என்றும் எங்கள் வரலாற்றின் கறையாகத் தொடரும்... வாழ்க உன் துரோகம்... வளர்க உன் குடுமபம்...!

By Chandran
7/10/2009 1:09:00 AM

You are purruki and other MLA also porrukki. So, Tamil nadu Assembly is Porrukikal Assembly.

By vallivan
7/10/2009 12:59:00 AM