தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 நவம்பர், 2012

சிறீரங்கத்தில் பிராமணாளும் கிருட்டிண அய்யரும் ஒழிந்ன!

சிறீரங்கத்தில் பிராமணாளும் ஒழிந்தது கிருட்டிண அய்யரும் ஒழிந்தது!

(பிறரும் பின்பற்றட்டும்)

 

14.11.12
சிறீரங்கத்தில் ஒரு திருப்பம்! பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!திராவிடர் கழகத்திற்கு அடுத்த கட்ட வெற்றி!

பிராமணாள் என்றும், அய்யர் என்றும் இடம்பெற்றிருந்த பழைய நிலை!
சிறீரங்கத்தில் பிராமணாள் என்று உணவு விடுதி விளம்பரத்தில் எழுதி வைத் திருந்த வருணாசிரம ஆதிக்க உணர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நட வடிக்கையால் அந்த உணவு விடுதி அந்த இடத்தில் மூடப்பட்ட துடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்பதும் கிருஷ்ண அய்யர் என்பதில் உள்ள அய்யரும் நீக்கப்பட்டு விட்டன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அடுத்த கட்ட வெற்றியாகும் இது.

பிராமணாளும், அய்யரும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது…
சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணி கண்டன் என்ற பார்ப்பனர் நடத்தி வந்தார். திடீ ரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது;
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று 4.11.2012 அன்று திருவானைக்காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
போராட்டம் அறிவிப்பு
அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட் டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
நள்ளிரவில் அகற்றம்
இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து (6.11.2012) நள்ளிரவு திடீரென்று கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார். பிராமணாள் கபே பெயர்ப் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார். இப்பொழுது வேறு ஒரு இடத்தில் அவரே உணவு விடுதியைத் திறந்துள்ளார். பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருந்த பிராமணாள் என்ற பெயரும், கிருஷ்ண அய்யர் என்ற பெயரில் இருந்த அய்யரும் நீக்கப்பட்டு விட்டன. திராவிடர் கழகத் திற்குக் கிடைத்த சிறப்பான வெற்றியாகும் இது.
————————”விடுதலை” 14-11-2012
(பார்வையிட்டவர்கள் 21 பேர்)

சனி, 31 டிசம்பர், 2011

SMS through facebook: முகநூல் (Facebook) மூலமாகக் குறுந்தகவல்


முகநூல் (Facebook) மூலமாக குறுந்தகவல்களை அனுப்ப

தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிகவும் குறைவாகவே உள்ளது, இதற்கு காரணம் தினசரி 100 குறுஞ்செய்தி வீதமே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக்கையில் இணையத்தில் இருந்து இருந்து குறுஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன.  உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதுபோல இணையம் மூலமாக கைதொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நாம் எதாவது ஒரு தளத்தினை நாட வேண்டும். இதற்கு பதிலாக முகநூல் தளத்திலிருந்தே குறுஞ்செய்தி அனுப்ப முடியும். இதற்கு Chatsms என்னும் அப்ளிகேஷன் உதவுகிறது.

மூகநூலுக்கான ChatSMS நீட்சியை தரவிறக்க சுட்டி


உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் சுட்டியில் கொடுக்கப்பட்ட அப்ளிகேஷனை உங்கள் முகநூல் கணக்கில் இணைத்துக்கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தோன்று. Allow பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ளவும். 


பின் Apps என்னும் இணைப்பில் உள்ள ChatSMS என்னும் அப்ள்கேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த நாடு என்பதை தேர்வு செய்து, பின் மொபைல் என்னினை உள்ளிட்டு, குறுஞ்செய்தியை டைப் செய்து Send SMS என்னும் பொத்தானை அழுத்தி குறுஞ்செய்தியை அனுப்பி கொள்ளமுடியும்.