செவ்வாய், 7 ஏப்ரல், 2015

புதுவைத் தமிழ்ச் சங்கம் : மகளிர் நாள்

puthuvaithamizhchnagam
  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் நாள் விழா விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.
    கருத்தரங்கத்தில் புதுவைப் பல்கலைக் கழக தமிழியல் துறைத் தலைவர் முனைவர் இளமதி சானகிராமன், புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன், புதுவை குழந்தைகள் நலக்குழுத் தலைவர் முனைவர் வித்யா இராம்குமார், புதுச்சேரி வாழும் கலை ஆசிரியர் எம்.தையல்நாயகி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
    துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலர் கோ.கலியபெருமாள் நன்றி கூறினார்.
மு.பாலசுப்பிரமணியன்
செயலர்
புதுவைத் தமிழ்ச் சங்கம்


- அகரமுதல73: பங்குனி22, 2046/  ஏப்பிரல்05,2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக